ETV Bharat / state

தீபாவளி கொண்டாட்டங்களை மழை தடுக்காது..! வெதர்மேன் கொடுத்த முக்கிய அப்டேட்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 12, 2023, 7:37 AM IST

Diwali celebration: தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாகப் பரவலாக மழை பெய்துவரும் நிலையில், தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தின் போது மழையின் குறுக்கீடு இருக்குமா என வெதர்மேன் பதிலளித்துள்ளார்.

Weatherman said there is no chance of rain in Tamil Nadu on Diwali day
தீபாவளிக்கு மழை வருமா

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக பெரும்பாலான மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. மேலும், தற்போது, கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, அடுத்த வாரம் வரை தமிழகம், புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில், ஓரிரு இடங்களில் மழை பொழிவு இருக்கும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில் மக்களுக்குத் தீபாவளி அன்று மழை வருமா என்பது பெரிய கேள்வியாக இருந்து வருகிறது.

இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன், “சென்னையில் 10 நாட்களுக்கு மழை அவ்வப்போது பெய்து வருகிறது. இந்த நிலையில் மழை சற்று ஓய்வு எடுக்க உள்ளது என்று தான் நாம் கூற முடியும். குறிப்பாகச் சென்னையில் அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும்.

மேலும், இன்று காலை வரை கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, நெல்லை ஆகிய இடங்களில் பரவலாக மழை இருக்க வாய்ப்பு இருக்கிறது. இதேபோல, மேற்கு மண்டலமான கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய பகுதிகளில் மிதமான மழை பெய்யும். இங்கெல்லாம் கடந்த சில தினங்களாக நல்ல மழை பெய்து வந்த நிலையில் தற்போது மழையானது சற்று குறைந்துள்ளது.

தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டத்தில் இன்று (நவ.12) வறண்ட வானிலை இருக்கும். இதனால், அடுத்த சில நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பில்லை என்று தான் தெரிகிறது. கடந்த வருடமும் தமிழ்நாட்டில் தீபாவளி அன்று மழை இல்லை, தொடர்ந்து இரண்டாவது முறையாக மழையில்லா தீபாவளியாக அமைய இருக்கிறது.

தற்போது நவம்பர் 14ஆம் தேதி அன்று தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகவுள்ளது. இதனால் மழை பொழிவு இருக்குமா? இல்லையா? என்று நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்" எனத் தெரிவித்திருந்தார்.

மேலும், இது குறித்து சென்னை வெதர்மேன் தெரிவித்ததாவது, "நாளை வறண்ட வானிலை நிலவும், அதனால் மக்கள் மழையில்லா தீபாவளியைக் கொண்டாடலாம்" என்று தெரிவித்து இருந்தார்.

இது குறித்து கோவை வெதர்மேன் தெரிவித்ததாவது, "மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் தொடர்ந்து மழை பொழிவு இருந்த நிலையில் தற்போது மழைக்கு வாய்ப்பில்லை. அடுத்த ஒரு வார காலத்திற்குக் கொங்கு மண்டலத்தில் வறண்ட வானிலை தான் இருக்கும். இதனால் மக்கள் தீபாவளியைக் கொண்டாட மழை தடையாக இருக்காது” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: Diwali wishes In Tamil: தீபாவளி வாழ்த்துக் கவிதைகள்.!

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக பெரும்பாலான மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. மேலும், தற்போது, கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, அடுத்த வாரம் வரை தமிழகம், புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில், ஓரிரு இடங்களில் மழை பொழிவு இருக்கும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில் மக்களுக்குத் தீபாவளி அன்று மழை வருமா என்பது பெரிய கேள்வியாக இருந்து வருகிறது.

இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன், “சென்னையில் 10 நாட்களுக்கு மழை அவ்வப்போது பெய்து வருகிறது. இந்த நிலையில் மழை சற்று ஓய்வு எடுக்க உள்ளது என்று தான் நாம் கூற முடியும். குறிப்பாகச் சென்னையில் அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும்.

மேலும், இன்று காலை வரை கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, நெல்லை ஆகிய இடங்களில் பரவலாக மழை இருக்க வாய்ப்பு இருக்கிறது. இதேபோல, மேற்கு மண்டலமான கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய பகுதிகளில் மிதமான மழை பெய்யும். இங்கெல்லாம் கடந்த சில தினங்களாக நல்ல மழை பெய்து வந்த நிலையில் தற்போது மழையானது சற்று குறைந்துள்ளது.

தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டத்தில் இன்று (நவ.12) வறண்ட வானிலை இருக்கும். இதனால், அடுத்த சில நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பில்லை என்று தான் தெரிகிறது. கடந்த வருடமும் தமிழ்நாட்டில் தீபாவளி அன்று மழை இல்லை, தொடர்ந்து இரண்டாவது முறையாக மழையில்லா தீபாவளியாக அமைய இருக்கிறது.

தற்போது நவம்பர் 14ஆம் தேதி அன்று தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகவுள்ளது. இதனால் மழை பொழிவு இருக்குமா? இல்லையா? என்று நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்" எனத் தெரிவித்திருந்தார்.

மேலும், இது குறித்து சென்னை வெதர்மேன் தெரிவித்ததாவது, "நாளை வறண்ட வானிலை நிலவும், அதனால் மக்கள் மழையில்லா தீபாவளியைக் கொண்டாடலாம்" என்று தெரிவித்து இருந்தார்.

இது குறித்து கோவை வெதர்மேன் தெரிவித்ததாவது, "மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் தொடர்ந்து மழை பொழிவு இருந்த நிலையில் தற்போது மழைக்கு வாய்ப்பில்லை. அடுத்த ஒரு வார காலத்திற்குக் கொங்கு மண்டலத்தில் வறண்ட வானிலை தான் இருக்கும். இதனால் மக்கள் தீபாவளியைக் கொண்டாட மழை தடையாக இருக்காது” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: Diwali wishes In Tamil: தீபாவளி வாழ்த்துக் கவிதைகள்.!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.