ETV Bharat / state

விஜயவாடா - சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் பகுதி அளவாக ரத்து

சென்னை சென்ட்ரல் - கூடூர் வழித்தடத்தில் சிக்னல் பிளாக் பராமரிப்பு பணி நடைபெறவிருப்பதால் வரும் 15ஆம் தேதி விஜயவாடா - சென்னை சென்ட்ரல் ரயில் இரு மார்க்கங்களிலும் பகுதி அளவாக ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

author img

By

Published : May 13, 2021, 7:05 PM IST

vijayawada-chennai-central-special-train-will-be-partially-cancelled
vijayawada-chennai-central-special-train-will-be-partially-cancelled

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் - கூடூர் வழித்தடத்தில் வரும் 15ஆம் தேதி காலை 11 மணி முதல் மதியம் 2.45 மணிவரை சுமார் 4 மணி நேரத்திற்கு சிக்னல் பிளாக் பொறியியல் பராமரிப்பு பணி நடைபெறவிருக்கிறது.

இதன் காரணமாக விஜயவாடா- சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் வரும் 15ஆம் தேதி கூடூர் முதல் சென்னை சென்ட்ரல்வரை பகுதி அளவாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த ரயில் விஜயவாடா முதல் கூடூர்வரை மட்டுமே செல்லும். அதேபோல சென்னை சென்ட்ரல் - விஜயவாடா செல்லும் சிறப்பு ரயில், கூடூரிலிருந்து விஜயவாடா செல்லும்.

இந்த பராமரிப்பு பணி காரணமாக மூர் மார்க்கெட் வளாகத்திலிருந்து சூலூர்பேட்டை சென்றுவரும் புறநகர் மின்சார ரயில் சேவையும் பகுதி அளவாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

வழக்கமாக மூர் மார்க்கெட்டிலிருந்து சூலூர்பேட்டை செல்லும் இந்த ரயிலானது வரும் 15ஆம் தேதியன்று கும்மிடிப்பூண்டி - சூலூர்பேட்டைவரை மட்டுமே இயக்கப்படும் எனவும் தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: சத்தியமங்கலம்: பூத்து வீணாகும் சம்பங்கி பூ

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் - கூடூர் வழித்தடத்தில் வரும் 15ஆம் தேதி காலை 11 மணி முதல் மதியம் 2.45 மணிவரை சுமார் 4 மணி நேரத்திற்கு சிக்னல் பிளாக் பொறியியல் பராமரிப்பு பணி நடைபெறவிருக்கிறது.

இதன் காரணமாக விஜயவாடா- சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் வரும் 15ஆம் தேதி கூடூர் முதல் சென்னை சென்ட்ரல்வரை பகுதி அளவாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த ரயில் விஜயவாடா முதல் கூடூர்வரை மட்டுமே செல்லும். அதேபோல சென்னை சென்ட்ரல் - விஜயவாடா செல்லும் சிறப்பு ரயில், கூடூரிலிருந்து விஜயவாடா செல்லும்.

இந்த பராமரிப்பு பணி காரணமாக மூர் மார்க்கெட் வளாகத்திலிருந்து சூலூர்பேட்டை சென்றுவரும் புறநகர் மின்சார ரயில் சேவையும் பகுதி அளவாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

வழக்கமாக மூர் மார்க்கெட்டிலிருந்து சூலூர்பேட்டை செல்லும் இந்த ரயிலானது வரும் 15ஆம் தேதியன்று கும்மிடிப்பூண்டி - சூலூர்பேட்டைவரை மட்டுமே இயக்கப்படும் எனவும் தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: சத்தியமங்கலம்: பூத்து வீணாகும் சம்பங்கி பூ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.