ETV Bharat / state

விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் தேர்தல் அறிக்கை வெளியீடு

author img

By

Published : Apr 2, 2019, 8:48 PM IST

சென்னை: விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

விடுதலை சிறுத்தை கட்சி


விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் வெளியிட்டப்பட்டுள்ள தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, நாடு முழுவதும் பெண்களுக்கு எதிராக நடைபெறும் அத்துமீறல்களை கண்காணிப்பதில் மத்திய அரசு தோல்வி அடைந்துவிட்டது. எனவே, பெண்கள் தங்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு அவர்கள் ஆயுதங்களை வைத்து கொள்வதை சட்டபூர்வமாக்க மத்திய அரசு முன் வரவேண்டும்.


பெண்கள் மீது தொடுக்கின்ற தாக்குதல்கள் மற்றும் பாலியல் அத்துமீறல்களில் இருந்து தற்காத்து கொள்ளும் நடவடிக்கைகளை அவர்கள் மேற்கொண்டால் அதற்கு தகுந்த சட்ட பாதுகாப்பை வழங்குவதற்கு தேவையான திருத்தங்களை குற்றவியல் நடைமுறை சட்டத்தில் மேற்கொள்வதுடன், பெண்கள் தமது பாதுகாப்பிற்காக வைத்து கொள்ளக் கூடிய ஆயுதங்களை அரசு வழங்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துவோம். மேலும்

கச்சத்தீவு மீட்பு, ஊழல் ஒழிப்பு, நீட் தேர்வு ரத்து, மீனவர்களுக்கு தனி அமைச்சகம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் நிறைவேற்றப்படும் என்று அக்கட்சியின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் வெளியிட்டப்பட்டுள்ள தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, நாடு முழுவதும் பெண்களுக்கு எதிராக நடைபெறும் அத்துமீறல்களை கண்காணிப்பதில் மத்திய அரசு தோல்வி அடைந்துவிட்டது. எனவே, பெண்கள் தங்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு அவர்கள் ஆயுதங்களை வைத்து கொள்வதை சட்டபூர்வமாக்க மத்திய அரசு முன் வரவேண்டும்.


பெண்கள் மீது தொடுக்கின்ற தாக்குதல்கள் மற்றும் பாலியல் அத்துமீறல்களில் இருந்து தற்காத்து கொள்ளும் நடவடிக்கைகளை அவர்கள் மேற்கொண்டால் அதற்கு தகுந்த சட்ட பாதுகாப்பை வழங்குவதற்கு தேவையான திருத்தங்களை குற்றவியல் நடைமுறை சட்டத்தில் மேற்கொள்வதுடன், பெண்கள் தமது பாதுகாப்பிற்காக வைத்து கொள்ளக் கூடிய ஆயுதங்களை அரசு வழங்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துவோம். மேலும்

கச்சத்தீவு மீட்பு, ஊழல் ஒழிப்பு, நீட் தேர்வு ரத்து, மீனவர்களுக்கு தனி அமைச்சகம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் நிறைவேற்றப்படும் என்று அக்கட்சியின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை, வடநாடுகளில் சாதி இந்துக்கள் மேற்கொள்ளும் பாலியல் வன்கொடுமைகள் மற்றும் நாடு முழுவதும் பெண்களுக்கு எதிராக நடைபெறும் அத்துமீறல்களைக் கண்காணிப்பதில் மத்திய அரசு தோல்வி அடைந்துவிட்டது. எனவே, பெண்கள் தங்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு அவர்கள் ஆயுதங்களை வைத்துக் கொள்வதைச் சட்டபூர்வமாக்க மத்திய அரசு முன் வரவேண்டும். அவர்கள் மீது தொடுக்கின்ற தாக்குதல்கள் மற்றும் பாலியல் அத்துமீறல்களில் இருந்து தற்காத்துக் கொள்ளும் நடவடிக்கைகளை அவர்கள் மேற்கொண்டால் அதற்கு தகுந்த சட்ட பாதுகாப்பை வழங்குவதற்குத் தேவையான திருத்தங்களைக் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் மேற்கொள்வதுடன், பெண்கள் தமது பாதுகாப்பிற்காக வைத்துக் கொள்ளக் கூடிய ஆயுதங்களை அரசு வழங்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துவோம் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இன்று வெளியிடுள்ள தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுல்ளது. 

கச்சத்தீவு மீட்பு , ஊழல் ஒழிப்பு மற்றும் லோக்பால், தேர்தல் சீர்திருத்தம், விகிதாச்சாரப் பிரதிநிதித்துவம் வேண்டும், தேசிய இனங்களின் பாதுகாப்பு, இந்திய மொழிகள் நல அமைச்சகம், துணைக் கண்டத்தில் உள்ள தேசிய இனங்களின் இணக்கம், பொருளாதாரம்

வறுமைக் கோட்டின் உச்ச வரம்பினை உயர்த்துதல், 200 நாள் வேலை நாட்களை உறுதி செய்தல், விவசாயம் மற்றும் நிலச் சீர்திருத்தம், விவசாயத் தொழிலாளர்கள் ஓய்வூதியத் திட்டம், தலித் மற்றும் பழங்குடியினருக்கு தனி வங்கி, பணத்தாள் மதிப்பிழப்பினை ஈடு செய்ய வேண்டும், ஜி.எஸ்.டி ஒழிப்பு, வருமான வரித்துறை தேவையில்லை, விவசாயக் கடன் ரத்து, விவசாயத்திற்கு தனி பட்ஜெட், தனியார் துறைகளில் இடஒதுக்கீடு, தலித்துகள், பழங்குடிகள் மற்றும் பிற்பட்டோர் நலன், எஸ்.சி/எஸ்.டி இடஒதுக்கீடு பாதுகாப்பு, மைசூரில் சிறைவைக்கப்பட்ட தமிழகத் தொல்லியல் ஆதாரங்களை மீட்போம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நீட் தேர்வு ரத்து, மீனவர்களுக்கு தனி அமைச்சகம் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் நிறைவேற்றப்படும் என்று அக்கட்சியின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.