ETV Bharat / state

45 வயதிலிருந்து 59 வயதுக்குட்பட்ட இணை நோய் இல்லாதவர்களுக்கு தடுப்பூசி!

தமிழ்நாட்டில் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் 45 வயதிலிருந்து 59 வயதுக்குள்பட்ட இணை நோய் இல்லாதவர்களுக்கு தடுப்பூசி போட முடிவெடுக்கப்பட்டுள்ளது.

author img

By

Published : Mar 31, 2021, 6:20 AM IST

தமிழ்நாட்டில் ஏப்ரல் 1 முதல் 45 வயதிலிருந்து 59 வயதுக்குட்பட்ட இணை நோய் இல்லாதவர்களுக்கு தடுப்பூசி
தமிழ்நாட்டில் ஏப்ரல் 1 முதல் 45 வயதிலிருந்து 59 வயதுக்குட்பட்ட இணை நோய் இல்லாதவர்களுக்கு தடுப்பூசி

தமிழ்நாட்டில் இரண்டாம் அலை கரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் அரசு தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் இன்று (மார்ச் 30) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், எடுக்கப்பட்ட முடிவுகள் பின்வருமாறு:

1. ஆர்டிபிசிஆர் பரிசோதனைகளை மேலும் தீவிரப்படுத்த ( increased testing ) முடிவெடுக்கப்பட்டது. இப்பரிசோதனையை சில நகரங்களிலும், சில மாவட்டங்களிலும் உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர்கள் எடுக்க வேண்டும். திருச்சிராப்பள்ளி, திருப்பூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம், திண்டுக்கல், நாகப்பட்டினம், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். சென்னை, கோயம்புத்தூர், தஞ்சாவூர், திருவாரூர், செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் இன்னும் கூடுதலாக பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும். நோய் உள்ளவர்களுடன் தொடர்பில் உள்ள அனைவருக்கும் (Contacts), நோய் அறிகுறி காணப்படுபவர்களுக்கும் (Influenza Like Illness / Severe Acute Respiratory illness) கட்டாயம் பரிசோதனை செய்ய வேண்டும்.

2. நோய்த் தொற்று ஏற்பட்டவர்கள், அவர்களோடு உடனிருப்பவர்கள் ஆகியோரை கண்டறிந்து தனிமைப்படுத்த வேண்டும். கடந்த 7 நாள்களாக, சென்னையில் இறப்பு 0.6 விழுக்காடாகவும், செங்கல்பட்டு, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் 0.5 முதல் 0.8 விழுக்காடாகவும், மற்ற மாவட்டங்களில் 0.6 முதல் 0.1 விழுக்காடுக்கும் குறைவாகவும் உள்ளன. இறப்பின் எண்ணிக்கையை குறைப்பதற்கு அனைத்து மாவட்டங்களிலும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

3. இதற்கு முன் இயங்கி வந்த கோவிட் மையங்களை (COVID Care Centers) முழுமையாக மீண்டும் செயல்பட வைக்க வேண்டும்.

4. தற்போது மருத்துவம், முன்கள பணியாளர்கள், தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் அனைவருக்கும் வயது வரம்பு இன்றியும், 60 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும், 45 வயதிலிருந்து 59 வயதுவரை உள்ள இணை நோய் உள்ளவர்களுக்கும் முன்னுரிமை அடிப்படையில் கோவிட் தடுப்பூசி போடப்படுகிறது. மத்திய அரசு 01.04.2021 முதல் 45 வயதிலிருந்து 59 வயதுக்குட்பட்ட இணை நோய் இல்லாதவர்களுக்கும் தடுப்பூசி போடலாம் என மாநில அரசுகளுக்கு தெரிவித்துள்ளது. எனவே, தமிழ்நாட்டில் 01.04.2021 முதல் 45 வயதிலிருந்து 59 வயதுக்குட்பட்ட இணை நோய் இல்லாதவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட அதிக கவனம் செலுத்த வேண்டும்.

5. தேர்தல் பணியில் ஈடுபடும் பணியாளர்கள் அனைவரும் அடுத்த சில நாள்களில் முதல் தவணை தடுப்பூசி போட்டுக் கொள்வதை மாவட்ட ஆட்சியர்கள் கண்காணிக்க வேண்டும்.

6. தேர்தல் பரப்புரைகள் அதிகமாக நடைபெறுவதால் நோய் தொற்று தடுப்பு விதிமுறைகளை முழுமையாக பின்பற்றப்பட வேண்டும்.

குறிப்பாக கோவிட் தடுப்பு சார்ந்த பழக்கங்களான (COVID Appropriate Behavior) முகக்கவசம் (Mask) அணிவது, கைகளை கழுவுவது (Hand Washing), தகுந்த இடைவெளி பின்பற்றுவது (Social Distancing) போன்றவற்றை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

இதையும் படிங்க: கரோனா பாதிப்பைச் சமாளிக்கும் பலம் மாநகராட்சியிடம் உள்ளது - ஆணையர் பிரகாஷ்

தமிழ்நாட்டில் இரண்டாம் அலை கரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் அரசு தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் இன்று (மார்ச் 30) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், எடுக்கப்பட்ட முடிவுகள் பின்வருமாறு:

1. ஆர்டிபிசிஆர் பரிசோதனைகளை மேலும் தீவிரப்படுத்த ( increased testing ) முடிவெடுக்கப்பட்டது. இப்பரிசோதனையை சில நகரங்களிலும், சில மாவட்டங்களிலும் உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர்கள் எடுக்க வேண்டும். திருச்சிராப்பள்ளி, திருப்பூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம், திண்டுக்கல், நாகப்பட்டினம், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். சென்னை, கோயம்புத்தூர், தஞ்சாவூர், திருவாரூர், செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் இன்னும் கூடுதலாக பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும். நோய் உள்ளவர்களுடன் தொடர்பில் உள்ள அனைவருக்கும் (Contacts), நோய் அறிகுறி காணப்படுபவர்களுக்கும் (Influenza Like Illness / Severe Acute Respiratory illness) கட்டாயம் பரிசோதனை செய்ய வேண்டும்.

2. நோய்த் தொற்று ஏற்பட்டவர்கள், அவர்களோடு உடனிருப்பவர்கள் ஆகியோரை கண்டறிந்து தனிமைப்படுத்த வேண்டும். கடந்த 7 நாள்களாக, சென்னையில் இறப்பு 0.6 விழுக்காடாகவும், செங்கல்பட்டு, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் 0.5 முதல் 0.8 விழுக்காடாகவும், மற்ற மாவட்டங்களில் 0.6 முதல் 0.1 விழுக்காடுக்கும் குறைவாகவும் உள்ளன. இறப்பின் எண்ணிக்கையை குறைப்பதற்கு அனைத்து மாவட்டங்களிலும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

3. இதற்கு முன் இயங்கி வந்த கோவிட் மையங்களை (COVID Care Centers) முழுமையாக மீண்டும் செயல்பட வைக்க வேண்டும்.

4. தற்போது மருத்துவம், முன்கள பணியாளர்கள், தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் அனைவருக்கும் வயது வரம்பு இன்றியும், 60 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும், 45 வயதிலிருந்து 59 வயதுவரை உள்ள இணை நோய் உள்ளவர்களுக்கும் முன்னுரிமை அடிப்படையில் கோவிட் தடுப்பூசி போடப்படுகிறது. மத்திய அரசு 01.04.2021 முதல் 45 வயதிலிருந்து 59 வயதுக்குட்பட்ட இணை நோய் இல்லாதவர்களுக்கும் தடுப்பூசி போடலாம் என மாநில அரசுகளுக்கு தெரிவித்துள்ளது. எனவே, தமிழ்நாட்டில் 01.04.2021 முதல் 45 வயதிலிருந்து 59 வயதுக்குட்பட்ட இணை நோய் இல்லாதவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட அதிக கவனம் செலுத்த வேண்டும்.

5. தேர்தல் பணியில் ஈடுபடும் பணியாளர்கள் அனைவரும் அடுத்த சில நாள்களில் முதல் தவணை தடுப்பூசி போட்டுக் கொள்வதை மாவட்ட ஆட்சியர்கள் கண்காணிக்க வேண்டும்.

6. தேர்தல் பரப்புரைகள் அதிகமாக நடைபெறுவதால் நோய் தொற்று தடுப்பு விதிமுறைகளை முழுமையாக பின்பற்றப்பட வேண்டும்.

குறிப்பாக கோவிட் தடுப்பு சார்ந்த பழக்கங்களான (COVID Appropriate Behavior) முகக்கவசம் (Mask) அணிவது, கைகளை கழுவுவது (Hand Washing), தகுந்த இடைவெளி பின்பற்றுவது (Social Distancing) போன்றவற்றை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

இதையும் படிங்க: கரோனா பாதிப்பைச் சமாளிக்கும் பலம் மாநகராட்சியிடம் உள்ளது - ஆணையர் பிரகாஷ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.