இதுகுறித்து பல்கலைக்கழக மானியக்குழு வெளியிட்ட சுற்றறிக்கையில், "சுற்றுச்சூழலை பாதுகாக்க உயர் கல்வி நிறுவனங்கள் உட்பட அனைவரும் சேர்ந்து பங்களிக்க வேண்டும். காற்று மாசு இல்லாத சுற்றுச்சூழலை உருவாக்க ஒவ்வொரு மாணவரும் ஒரு மரக்கன்றை நட வேண்டும். இதற்கு முன்பாகவே மாசை கட்டுப்படுத்த பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் பல முயற்சிகள் எடுத்துள்ளன.
இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டும் மாணவர் அனைவரும் மரங்கன்றுகளை நடவேண்டும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.