ETV Bharat / state

காலை 7 மணி செய்தி சுருக்கம் TOP 10 NEWS @ 7 AM

author img

By

Published : Sep 16, 2021, 7:07 AM IST

ஈடிவி பாரத்தின் காலை 7 மணி செய்தி சுருக்கம்

TOP 10 NEWS
TOP 10 NEWS

தமிழ்நாட்டில் திமுக நிரந்தர ஆட்சி...சபதம் ஏற்க தொண்டர்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்

தமிழ்நாட்டில் நிரந்தரமாக திமுக ஆட்சியில் இருக்கவேண்டும் என தொண்டர்கள் சபதம் ஏற்கவேண்டும் எனவும், உள்ளாட்சித் தேர்தலில் 100 விழுக்காடு வெற்றியைப் பெறவேண்டும் எனவும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கட்சியின் தொண்டர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

புதுச்சேரியில் ஊரடங்கு நீட்டிப்பு

புதுச்சேரியில் அமல்படுத்தப்பட்ட தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்று நள்ளிரவுடன் முடியும் நிலையில், 30ஆம் தேதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக புதுச்சேரி அரசு அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் செல்வாக்கு மிக்க 100 பேர்- டைம் இதழ் பட்டியலில் இடம் பிடித்த மம்தா, மோடி

அமெரிக்காவில் இருந்து வெளியாகும், டைம் இதழ் வெளியிட்டுள்ள உலகின் செல்வாக்கு மிகுந்த 100 பேரின் பட்டியலில், பிரதமர் நரேந்திர மோடி, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, சீரம் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பூனம்வாலே ஆகியோர் இடம் பெற்று உள்ளனர்.

’மாணவச் செல்வங்களே...மனம் தளராதீர்கள்’ - முதலமைச்சர் ஸ்டாலின் உருக்கம்!

"மாணவச் செல்வங்களே, மனம் தளராதீர்கள்! கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன். ஈடில்லா உயிர்களை மாய்த்துக் கொள்ளாதீர்கள். கல் நெஞ்சங்கொண்டோரைக் கரைப்போம், #நீட் எனும் அநீதியை ஒழிக்கும்வரை நாம் ஓயமாட்டோம்!" என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

‘நீட்’ ரத்து என்ற அறிவிப்பை வெளியிட வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்

மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து ‘நீட்’ தேர்வு ரத்து என்ற அறிவிப்பை வெளியிட வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

நாமும் நமது உறுதியற்ற நிலைப்பாடுகளுமே மாணவர்கள் மரணங்களுக்கு காரணம் - பா. ரஞ்சித்

நீட் தேர்வு அச்சத்தால் நிகழும் மாணவர்கள் மரணங்கள் குறித்து இயக்குநர் பா.ரஞ்சித் கருத்து தெரிவித்துள்ளார்.

இலங்கை அமைச்சர்களுடன் புதுவை முதலமைச்சர் ஆலோசனை

மீனவர் பிரச்னைக்கு சுமூக தீர்வு, காரைக்கால் - இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து உள்ளிட்ட விஷயங்கள் குறித்து இலங்கை அமைச்சர்கள் புதுச்சேரி முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

தலைவி அனுபவங்களை புத்தகமாக்கும் விஜய்!

தலைவி படத்திற்காக ஒன்றரை ஆண்டுகள் பணி செய்த அனுபவங்களை புத்தகமாக்கும் முயற்சியில் இயக்குநர் விஜய் ஈடுபட்டுள்ளாராம்.

அக்டோபரில் 'அரண்மனை 3' ரிலீஸ்

அரண்மனை சீரிஸ் படங்களில் இரண்டு பாகங்கள் பெற்ற மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து ஆர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் 'அரண்மனை 3' திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.

ஐபிஎல் போட்டியைக் காண ரசிகர்களுக்கு அனுமதி!

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளைக் காண பார்வையாளர்களுக்கு அனுமதி அளித்து அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் திமுக நிரந்தர ஆட்சி...சபதம் ஏற்க தொண்டர்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்

தமிழ்நாட்டில் நிரந்தரமாக திமுக ஆட்சியில் இருக்கவேண்டும் என தொண்டர்கள் சபதம் ஏற்கவேண்டும் எனவும், உள்ளாட்சித் தேர்தலில் 100 விழுக்காடு வெற்றியைப் பெறவேண்டும் எனவும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கட்சியின் தொண்டர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

புதுச்சேரியில் ஊரடங்கு நீட்டிப்பு

புதுச்சேரியில் அமல்படுத்தப்பட்ட தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்று நள்ளிரவுடன் முடியும் நிலையில், 30ஆம் தேதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக புதுச்சேரி அரசு அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் செல்வாக்கு மிக்க 100 பேர்- டைம் இதழ் பட்டியலில் இடம் பிடித்த மம்தா, மோடி

அமெரிக்காவில் இருந்து வெளியாகும், டைம் இதழ் வெளியிட்டுள்ள உலகின் செல்வாக்கு மிகுந்த 100 பேரின் பட்டியலில், பிரதமர் நரேந்திர மோடி, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, சீரம் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பூனம்வாலே ஆகியோர் இடம் பெற்று உள்ளனர்.

’மாணவச் செல்வங்களே...மனம் தளராதீர்கள்’ - முதலமைச்சர் ஸ்டாலின் உருக்கம்!

"மாணவச் செல்வங்களே, மனம் தளராதீர்கள்! கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன். ஈடில்லா உயிர்களை மாய்த்துக் கொள்ளாதீர்கள். கல் நெஞ்சங்கொண்டோரைக் கரைப்போம், #நீட் எனும் அநீதியை ஒழிக்கும்வரை நாம் ஓயமாட்டோம்!" என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

‘நீட்’ ரத்து என்ற அறிவிப்பை வெளியிட வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்

மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து ‘நீட்’ தேர்வு ரத்து என்ற அறிவிப்பை வெளியிட வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

நாமும் நமது உறுதியற்ற நிலைப்பாடுகளுமே மாணவர்கள் மரணங்களுக்கு காரணம் - பா. ரஞ்சித்

நீட் தேர்வு அச்சத்தால் நிகழும் மாணவர்கள் மரணங்கள் குறித்து இயக்குநர் பா.ரஞ்சித் கருத்து தெரிவித்துள்ளார்.

இலங்கை அமைச்சர்களுடன் புதுவை முதலமைச்சர் ஆலோசனை

மீனவர் பிரச்னைக்கு சுமூக தீர்வு, காரைக்கால் - இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து உள்ளிட்ட விஷயங்கள் குறித்து இலங்கை அமைச்சர்கள் புதுச்சேரி முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

தலைவி அனுபவங்களை புத்தகமாக்கும் விஜய்!

தலைவி படத்திற்காக ஒன்றரை ஆண்டுகள் பணி செய்த அனுபவங்களை புத்தகமாக்கும் முயற்சியில் இயக்குநர் விஜய் ஈடுபட்டுள்ளாராம்.

அக்டோபரில் 'அரண்மனை 3' ரிலீஸ்

அரண்மனை சீரிஸ் படங்களில் இரண்டு பாகங்கள் பெற்ற மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து ஆர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் 'அரண்மனை 3' திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.

ஐபிஎல் போட்டியைக் காண ரசிகர்களுக்கு அனுமதி!

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளைக் காண பார்வையாளர்களுக்கு அனுமதி அளித்து அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.