ETV Bharat / state

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு வழக்கு!

author img

By

Published : Feb 24, 2020, 11:26 PM IST

சென்னை: டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டதாகக் கைதுசெய்யப்பட்ட வடிவு என்பவரின் பிணை மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

TNPSC
TNPSC

தமிழ்நாடு அரசின் 41 துறைகளில் காலியாக இருந்த ஆயிரத்து 953 பணியிடங்களை நிரப்புவதற்காக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப்-2ஏ தேர்வு நடத்தியது. 2017ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 26ஆம் தேதி நடந்த அந்தத் தேர்வில் தமிழ்நாடு முழுவதும் ஐந்து லட்சத்து 56 பேர் கலந்துகொண்டு தேர்வு எழுதினார்கள்.

இதற்கான முடிவுகள், 2018ஆம் ஆண்டு வெளியிடப்பட்டன. தேர்வில் வெற்றிபெற்ற அனைவரும் 41 துறைகளில் பல்வேறு பணியிடங்களில் வேலைபார்த்து வந்தனர்.

2017ஆம் ஆண்டு நடைபெற்ற குரூப்-2ஏ தேர்வில் முறைகேடு இருப்பதாகத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அளித்த புகாரின்பேரில் சிபிசிஐடி காவல் துறை நடத்திய முதல்கட்ட விசாரணையில் இத்தேர்வை எழுதிய 42 பேர் முறைகேட்டில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு ஒன்பது பேர் கைதுசெய்யப்பட்டனர். இதில் காஞ்சிபுரம் இணை சார்பதிவாளர் அலுவலகத்தில் உதவியாளராகப் பணிபுரியும் வடிவு என்பவரும் கைதுசெய்யப்பட்டார்.

இந்நிலையில், இந்த முறைகேட்டு வழக்கில் தனக்கு எந்தத் தொடர்பும் இல்லாததால், பிணை வழங்கக்கோரி கைதுசெய்யப்பட்ட வடிவு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி செல்வகுமார், வழக்கு ஆரம்பகட்ட விசாரணையில் இருப்பதால், பிணை வழங்க முடியாது எனத் தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதையும் பார்க்க: டெல்லி வன்முறை உயிரிழப்பு எண்ணிக்கை 4 ஆக உயர்வு

தமிழ்நாடு அரசின் 41 துறைகளில் காலியாக இருந்த ஆயிரத்து 953 பணியிடங்களை நிரப்புவதற்காக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப்-2ஏ தேர்வு நடத்தியது. 2017ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 26ஆம் தேதி நடந்த அந்தத் தேர்வில் தமிழ்நாடு முழுவதும் ஐந்து லட்சத்து 56 பேர் கலந்துகொண்டு தேர்வு எழுதினார்கள்.

இதற்கான முடிவுகள், 2018ஆம் ஆண்டு வெளியிடப்பட்டன. தேர்வில் வெற்றிபெற்ற அனைவரும் 41 துறைகளில் பல்வேறு பணியிடங்களில் வேலைபார்த்து வந்தனர்.

2017ஆம் ஆண்டு நடைபெற்ற குரூப்-2ஏ தேர்வில் முறைகேடு இருப்பதாகத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அளித்த புகாரின்பேரில் சிபிசிஐடி காவல் துறை நடத்திய முதல்கட்ட விசாரணையில் இத்தேர்வை எழுதிய 42 பேர் முறைகேட்டில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு ஒன்பது பேர் கைதுசெய்யப்பட்டனர். இதில் காஞ்சிபுரம் இணை சார்பதிவாளர் அலுவலகத்தில் உதவியாளராகப் பணிபுரியும் வடிவு என்பவரும் கைதுசெய்யப்பட்டார்.

இந்நிலையில், இந்த முறைகேட்டு வழக்கில் தனக்கு எந்தத் தொடர்பும் இல்லாததால், பிணை வழங்கக்கோரி கைதுசெய்யப்பட்ட வடிவு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி செல்வகுமார், வழக்கு ஆரம்பகட்ட விசாரணையில் இருப்பதால், பிணை வழங்க முடியாது எனத் தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதையும் பார்க்க: டெல்லி வன்முறை உயிரிழப்பு எண்ணிக்கை 4 ஆக உயர்வு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.