சென்னை : கூட்டணி இடப்பங்கீட்டில் கேட்கும் இடங்களை அதிமுக ஒதுக்காதப்பட்சத்தில், தனித்துப் போட்டியிடலாமா? என்பது குறித்தும் மாவட்ட தலைவர்களிடம் கருத்துக்களை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேட்டறிந்ததாக கூறப்படுகிறது.
சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக மாநில தலைமையகமான கமலாலயத்தில், இன்று (ஜன.28) நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்
குறித்து மாவட்ட தலைவர்களுடன் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆலோசனை மேற்கொண்டார்.
![TN Urban local body elections - AIADMK-BJP alliance talks this evening](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-03-bjpmeeting-7209106_28012022130323_2801f_1643355203_843.jpg)
முகாமிட்ட பாஜக தலைவர்கள்
இந்தக் கூட்டத்தில் பாஜக மேலிட இணை பொறுப்பாளர் P. சுதாகர் ரெட்டி தமிழ்நாடு பாஜக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தமிழக பொறுப்பாளர் பொன். ராதாகிருஷ்ணன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், சி.பி. ராதாகிருஷ்ணன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் வானதி சீனிவாசன், சரஸ்வதி மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள், மாவட்ட தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.