சென்னை பூந்தமல்லி அருகே குடலிறக்க நோயால் பாதிக்கப்பட்டு
சிகிச்சைக்காக பூந்தமல்லி ட்ராங்க் சாலையில் உள்ள பி வெல் தனியார் மருத்துவமனையில் ஏழுமலை என்பவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை முடிந்து பின் வீடு திரும்பிய நிலையில் இன்று ஏழுமலை உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் மருத்துவர்களின் தவறான சிகிச்சையால்தான் அவர் உயிரிழந்ததாக குற்றம்சாட்டியுள்ளனர்.
அதனைத்தொடர்ந்து, ஏழுமலையின் உறவினர்கள் பி வெல் மருத்துவமனையின் நுழைவாயிலில் அவரது உடலை வைத்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.