ETV Bharat / state

பள்ளி மாணவர்களின் விளையாட்டு மாறிவிட்டது- சுதா சேஷய்யன்

author img

By

Published : Aug 29, 2019, 9:35 PM IST

சென்னை: ஆரோக்யா இந்தியா திட்டத்தின் கீழ் தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் பத்தாயிரம் பாத அடிகள் நடைபயிற்சியை துணைவேந்தர் சுதா சேஷய்யன் தொடங்கிவைத்து நடைபயிற்சி மேற்கொண்டார்.

sudha sheshayyan

பிரதமர் நரேந்திர மோடியின் அறிவுறுத்தலின்படி ஆரோக்யா இந்தியா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள உயர் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் ஆசிரியர்கள் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில், பல்கலைக்கழக மானியக் குழு தினந்தோறும் 10,000 அடி நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

அதன் அடிப்படையில் தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் சுதா சேஷய்யன் தலைமையில் பல்கலைக்கழக ஊழியர்கள் 10,000 அடி நடைபயிற்சியை மேற்கொண்டனர்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் சுதா சேஷய்யன் பேசுகையில், 'மக்கள் மனதளவிலும், உடலளவிலும் வலிமையுடன் இருக்க வேண்டும். ஆரோக்கியமாக இருக்க 10,000 அடி நடக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர்கள் உடல் நலத்திலும் பலத்திலும் வலுவாக இருப்பார்கள்.

தற்போதைய வாழ்க்கை முறையில் மாணவர்களுக்கு உடற்பயிற்சி என்பதே இல்லாமல் உள்ளது. முன்பு மாணவர்கள் பேருந்தில் இறங்கி பள்ளிக்கு நடந்துசெல்வதும், பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த பின்னர் விளையாடவும் செய்தனர். ஆனால் தற்போது அது போன்ற நடைமுறைகள் எதுவும் இல்லாமல் வாழ்க்கை முறை மாறியுள்ளது. இப்போது, மாறியுள்ள வாழ்க்கை முறையால் அதிகளவில் நோய்கள்வருகிறது. அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் இதனைச் செயல்படுத்த வேண்டும்' என்றார்..

பிரதமர் நரேந்திர மோடியின் அறிவுறுத்தலின்படி ஆரோக்யா இந்தியா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள உயர் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் ஆசிரியர்கள் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில், பல்கலைக்கழக மானியக் குழு தினந்தோறும் 10,000 அடி நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

அதன் அடிப்படையில் தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் சுதா சேஷய்யன் தலைமையில் பல்கலைக்கழக ஊழியர்கள் 10,000 அடி நடைபயிற்சியை மேற்கொண்டனர்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் சுதா சேஷய்யன் பேசுகையில், 'மக்கள் மனதளவிலும், உடலளவிலும் வலிமையுடன் இருக்க வேண்டும். ஆரோக்கியமாக இருக்க 10,000 அடி நடக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர்கள் உடல் நலத்திலும் பலத்திலும் வலுவாக இருப்பார்கள்.

தற்போதைய வாழ்க்கை முறையில் மாணவர்களுக்கு உடற்பயிற்சி என்பதே இல்லாமல் உள்ளது. முன்பு மாணவர்கள் பேருந்தில் இறங்கி பள்ளிக்கு நடந்துசெல்வதும், பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த பின்னர் விளையாடவும் செய்தனர். ஆனால் தற்போது அது போன்ற நடைமுறைகள் எதுவும் இல்லாமல் வாழ்க்கை முறை மாறியுள்ளது. இப்போது, மாறியுள்ள வாழ்க்கை முறையால் அதிகளவில் நோய்கள்வருகிறது. அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் இதனைச் செயல்படுத்த வேண்டும்' என்றார்..

Intro:பள்ளி மாணவர்களின் விளையாட்டு முறை மாறியுள்ளது


Body:பள்ளி மாணவர்களின் விளையாட்டு முறை மாறியுள்ளது

துணைவேந்தர் சுதா சேஷையன் தகவல்
சென்னை,
ஆரோக்கியா இந்தியா திட்டத்தின் கீழ் தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைகழகத்தில் பத்தாயிரம் பாத அடிகள் நடைபயிற்சியை துணைவேந்தர் சுதா சேஷய்யன் தூக்கிவைத்து நடைபயிற்சி மேற்கொண்டார்.

பாரத பிரதமரின் அறிவுறுத்தலின்படி ஆரோக்கியா இந்தியா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள உயர் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் ஆசிரியர்கள் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில், பல்கலைக்கழக மானியக் குழு தினந்தோறும் 10,000 அடிகள் நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
அதன் அடிப்படையில் தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் சுதா சேஷய்யன் தலைமையில் பல்கலைக்கழக ஊழியர்கள் 10,000 அடிகள் நடைபயிற்சியை இன்று மேற்கொண்டனர்.


பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துணைவேந்தர் சுதா சேஷய்யன், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மான் கி பாத் நிகழ்ச்சியில் பேசும்போது 29ஆம் தேதி ஆரோக்கிய இந்தியா என்ற திட்டம் துவங்கப்பட உள்ளது என அறிவித்தார்.
மக்கள் மனதளவிலும் உடலளவிலும் வலிமையுடன் இருக்க வேண்டும் என்பதற்காக அறிவிக்கப்பட்டுள்ள திட்டம். இதனை இன்று தூங்கும்பொழுது 10,000 அடிகள் நடக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர்கள் உடல் நலத்திலும் பலத்திலும் வலுவாக இருப்பார்கள்.

தற்போதைய வாழ்க்கை முறையில் மாணவர்களுக்கு உடற்பயிற்சி என்பதே இல்லாமல் உள்ளது. முன்பு மாணவர்கள் பேருந்தில் இறங்கி பள்ளிக்கு நடந்து செல்வதும், பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த பின்னர் விளையாடவும் செய்தனர். ஆனால் தற்போது அது போன்ற நடைமுறைகள் எதுவும் இல்லாமல் வாழ்க்கை முறை மாறியுள்ளது.

தற்போது மாறியுள்ள வாழ்க்கை முறையால் அதிகளவில் நோய்கள் வருகிறது. எனவே இந்த நடைபயிற்சி திட்டத்தினை துவக்கி உள்ளோம். அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் இதனைச் செயல்படுத்த வேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழு தெரிவித்துள்ளது. அதன்படி மருத்துவக் கல்லூரியிலும் வருங்காலத்தில் செயல்படுத்த திட்டமிடப்படும் என தெரிவித்தார்.






Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.