ETV Bharat / state

ரூ.713.45 கோடி மேம்படுத்தப்பட்ட சாலைகள் திறப்பு!

author img

By

Published : Feb 24, 2021, 2:45 PM IST

சென்னை: ரூ.713 கோடியே 45 லட்சம் மதிப்பீட்டில் நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தி மேம்படுத்தப்பட்ட சாலைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்துவைத்தார்.

tn cm inaugurate Rs. 713.45 crore worth upgraded roads for public usage
tn cm inaugurate Rs. 713.45 crore worth upgraded roads for public usage

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று (பிப். 23) தலைமைச் செயலகத்தில், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில் திண்டுக்கல் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் 713 கோடியே 45 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அகலப்படுத்தப்பட்ட நான்கு வழிச்சாலை, 362 கோடியே 19 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 26 பாலங்கள் மற்றும் 2 சாலைகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்துவைத்தார்.

பின்னர், 1,115 கோடியே 66 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள 4 சாலைப் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினார். மேலும், 1 கோடியே 63 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஈரோடு மாவட்டத்திலும், 1 கோடியே 52 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நாமக்கல் மாவட்டத்திலும், 1 கோடியே 53 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பெரம்பலூர் மாவட்டத்திலும், 1 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஈரோடு மாவட்டத்திலும் கட்டப்பட்ட பாலங்களைத் திறந்துவைத்தார்.

1115 கோடியே 66 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், திருச்சி, பெரம்பலூ் ஆகிய மாவட்டங்களில் சாலைகளை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து, நெடுஞ்சாலைத் துறையில் மேற்கொள்ளப்படும் சாலை மற்றும் பாலம் அமைக்கும் பணிகளின் தரத்தினை ஆய்வு செய்ய 2 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கொள்முதல் செய்யப்பட்ட ஜீப்புகளை தரக்கட்டுப்பாடு உட்கோட்டங்களுக்கு வழங்கிடும் அடையாளமாக உதவிக் கோட்டப் பொறியாளர்களுக்கு அவ்வாகனங்களுக்கான சாவிகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை கே. ராதாகிருஷ்ணன், தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மைச் செயலாளர் ஆ.கார்த்திக் உள்ளிட்ட அரசு உயர் அலுவர்கள் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று (பிப். 23) தலைமைச் செயலகத்தில், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில் திண்டுக்கல் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் 713 கோடியே 45 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அகலப்படுத்தப்பட்ட நான்கு வழிச்சாலை, 362 கோடியே 19 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 26 பாலங்கள் மற்றும் 2 சாலைகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்துவைத்தார்.

பின்னர், 1,115 கோடியே 66 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள 4 சாலைப் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினார். மேலும், 1 கோடியே 63 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஈரோடு மாவட்டத்திலும், 1 கோடியே 52 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நாமக்கல் மாவட்டத்திலும், 1 கோடியே 53 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பெரம்பலூர் மாவட்டத்திலும், 1 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஈரோடு மாவட்டத்திலும் கட்டப்பட்ட பாலங்களைத் திறந்துவைத்தார்.

1115 கோடியே 66 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், திருச்சி, பெரம்பலூ் ஆகிய மாவட்டங்களில் சாலைகளை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து, நெடுஞ்சாலைத் துறையில் மேற்கொள்ளப்படும் சாலை மற்றும் பாலம் அமைக்கும் பணிகளின் தரத்தினை ஆய்வு செய்ய 2 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கொள்முதல் செய்யப்பட்ட ஜீப்புகளை தரக்கட்டுப்பாடு உட்கோட்டங்களுக்கு வழங்கிடும் அடையாளமாக உதவிக் கோட்டப் பொறியாளர்களுக்கு அவ்வாகனங்களுக்கான சாவிகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை கே. ராதாகிருஷ்ணன், தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மைச் செயலாளர் ஆ.கார்த்திக் உள்ளிட்ட அரசு உயர் அலுவர்கள் கலந்து கொண்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.