ETV Bharat / state

சிறுமி தான்யாவிற்கு மீண்டும் சிறிய அறுவை சிகிச்சை!

author img

By

Published : Dec 27, 2022, 5:05 PM IST

Updated : Dec 27, 2022, 5:37 PM IST

முன்னதாக நடந்த அறுவை சிகிச்சையின்போது, பொருத்தப்பட்ட கருவி ஒன்றை மற்றொரு அறுவை சிகிச்சை செய்து அகற்றுவதற்காக சிறுமி தான்யா மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

Etv Bharat
Etv Bharat

சென்னை: திருவள்ளூர் மாவட்டம், மோரை கிராமத்தைச் சேர்ந்த ஸ்டீபன்ராஜ் - சௌபாக்யா தம்பதியினரின் 9 வயது மகள் தான்யா. இவருக்கு மூன்றரை வயதில் முகத்தில் ஏற்பட்ட கரும்புள்ளியை சாதாரண ரத்தக்கட்டு என்று சிகிச்சை பெற்ற நிலையில், பாதிப்பு குறையவில்லை. ஆறு ஆண்டுகளாக பல மருத்துவமனைகள் ஏறி இறங்கி சிகிச்சை பெற்றும் சிறுமியின் ஒருபக்க முகம் சிதைய தொடங்கியது.

இந்நிலையில், சிறுமி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமூக வலைதளங்களின் வாயிலாக உதவி கோரியிருந்தார். இதனைத்தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உத்தரவின் பேரில் சிறுமி தான்யாவுக்கு தண்டலத்தில் உள்ள சவிதா மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதி இலவசமாக அறுவை சிகிச்சை மேற்கொண்டது. அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிவுற்றதை தொடர்ந்து முதல்வர் நேரில் வந்து சந்தித்து தான்யாவிற்கு ஆறுதல் கூறி இருந்தார்.

இந்த நிலையில் அறுவை சிகிச்சையின்போது, வாய் பகுதியில் பொருத்தப்பட்ட கருவி ஒன்றை எடுக்க மீண்டும் அறுவை சிகிச்சைக்காக சிறுமி தான்யா தண்டலத்தில் உள்ள சவிதா மருத்துவமனைக்கு இன்று (டிச.27) மீண்டும் அழைத்துச் செல்லப்பட்டார்.

முன்னதாக பால்வளத்துறை அமைச்சர் நாசன் சிறுமி தான்யா வீட்டிற்கு நேரில் சென்று உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். அப்போது அமைச்சரின் செல்போன் மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தான்யாவுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து கூறியதோடு உடல் நலம் குறித்து கேட்டறிந்தார்.

இதையும் படிங்க: இயல்பு நிலைக்கு திரும்பும் முக சிதைவால் பாதிக்கப்பட்ட சிறுமி

சென்னை: திருவள்ளூர் மாவட்டம், மோரை கிராமத்தைச் சேர்ந்த ஸ்டீபன்ராஜ் - சௌபாக்யா தம்பதியினரின் 9 வயது மகள் தான்யா. இவருக்கு மூன்றரை வயதில் முகத்தில் ஏற்பட்ட கரும்புள்ளியை சாதாரண ரத்தக்கட்டு என்று சிகிச்சை பெற்ற நிலையில், பாதிப்பு குறையவில்லை. ஆறு ஆண்டுகளாக பல மருத்துவமனைகள் ஏறி இறங்கி சிகிச்சை பெற்றும் சிறுமியின் ஒருபக்க முகம் சிதைய தொடங்கியது.

இந்நிலையில், சிறுமி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமூக வலைதளங்களின் வாயிலாக உதவி கோரியிருந்தார். இதனைத்தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உத்தரவின் பேரில் சிறுமி தான்யாவுக்கு தண்டலத்தில் உள்ள சவிதா மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதி இலவசமாக அறுவை சிகிச்சை மேற்கொண்டது. அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிவுற்றதை தொடர்ந்து முதல்வர் நேரில் வந்து சந்தித்து தான்யாவிற்கு ஆறுதல் கூறி இருந்தார்.

இந்த நிலையில் அறுவை சிகிச்சையின்போது, வாய் பகுதியில் பொருத்தப்பட்ட கருவி ஒன்றை எடுக்க மீண்டும் அறுவை சிகிச்சைக்காக சிறுமி தான்யா தண்டலத்தில் உள்ள சவிதா மருத்துவமனைக்கு இன்று (டிச.27) மீண்டும் அழைத்துச் செல்லப்பட்டார்.

முன்னதாக பால்வளத்துறை அமைச்சர் நாசன் சிறுமி தான்யா வீட்டிற்கு நேரில் சென்று உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். அப்போது அமைச்சரின் செல்போன் மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தான்யாவுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து கூறியதோடு உடல் நலம் குறித்து கேட்டறிந்தார்.

இதையும் படிங்க: இயல்பு நிலைக்கு திரும்பும் முக சிதைவால் பாதிக்கப்பட்ட சிறுமி

Last Updated : Dec 27, 2022, 5:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.