ETV Bharat / state

குண்டும் குழியுமான சாலை: நூதன போராட்டத்தில் மக்கள்

author img

By

Published : Oct 5, 2020, 3:06 PM IST

சென்னை: திருநின்றவூரில் குண்டும் குழியுமான சாலைகளில் டார்ச் லைட் அடித்து பொதுமக்கள் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

டார்ச்லைட் போராட்டம்
டார்ச்லைட் போராட்டம்

சென்னை திருநின்றவூர் பேரூராட்சிக்குள்பட்ட மூன்றாவது வார்டில் அன்னை இந்திரா நகர் அமைந்துள்ளது. இந்த நகரில் 30 ஆண்டுகளுக்கு முன்பு சி.எம்.டி.ஏவால் அங்கீகரிக்கப்பட்ட வீட்டுமனை பிரிவு உருவாக்கப்பட்டது.

இங்கு 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நகரில் 3 பிரதான சாலைகள், 20க்கும் மேற்பட்ட குறுக்கு சாலைகள் அமைந்துள்ளன. இதில், ஒரே ஒரு பிரதான சாலை மட்டும் ரூ.1 கோடி செலவில் தார் சாலையாக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு போடப்பட்டது.

அந்த சாலை, தற்போது குண்டும் குழியுமாக மாறி கிடக்கிறது. இதோடு மட்டுமில்லாமல், குறுக்கு சாலைகள் பல ஆண்டுகளாக போடப்படாமலே கிடக்கிறது. இதனால், சிறு மழை பெய்தால்கூட சாலைகள் சேறும் சகதியுமாக மாறி விடுகின்றன.

இதனால் பாதசாரிகள், இரு சக்கர வாகன ஓட்டிகளும் கடும் பாதிப்புக்குள்ளாகின்றனர். அதுமட்டுமல்லாது இப்பகுதிகளில் தெருக்களில் அமைக்கப்பட்ட குடிநீர் குழாய்களில் வாரத்திற்கு ஒரு முறைதான் தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது.

மேலும், மழைக்காலங்களில் தண்ணீர் செல்ல வடிகால் வசதி முறையாக இல்லை. இதனால், சிறு மழை பெய்தால்கூட வீடுகளை தண்ணீர் சூழ்ந்து நிற்கிறது. தற்போது விட்டு விட்டு பெய்யும் மழையாலும் ஆங்காங்கே காலி இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது.

இதிலிருந்து கொசுக்களும் உற்பத்தியாகின்றன. மேற்கண்ட பிரச்னைகள் குறித்து பொதுநல சங்கம் சார்பில் பலமுறை தமிழ்நாடு முதலமைச்சர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அலுவலர்களுக்கு புகார் மனு அனுப்பி உள்ளனர்.

இருந்த போதிலும் எவ்வித நடவடிக்கை எடுக்காமல் உள்ளது. இதனையடுத்து அப்பகுதியில் வசிக்கும் மக்கள் குண்டும் குழியுமான சாலையில் 'டார்ச் லைட்' அடித்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து பொது நல சங்க நிர்வாகிகள் கூறுகையில், எங்கள் பகுதி மக்கள் திருநின்றவூர் பேரூராட்சிக்கு தொடர்ந்து வரி செலுத்தி வருகிறோம். இருந்த போதிலும் பேரூராட்சி நிர்வாகம் அடிப்படை வசதிகளை செய்து தராமல் பல ஆண்டாக புறக்கணித்து வருகிறது.

இனிமேலாவது, எங்கள் பகுதிக்கு முறையான சாலை, குடிநீர், வடிகால் உள்ளிட்ட வசதிகளை போர்க்கால அடிப்படையில் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் விரைவில் பொதுமக்களை திரட்டி பேரூராட்சி அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம் என கூறினார்கள்.

சென்னை திருநின்றவூர் பேரூராட்சிக்குள்பட்ட மூன்றாவது வார்டில் அன்னை இந்திரா நகர் அமைந்துள்ளது. இந்த நகரில் 30 ஆண்டுகளுக்கு முன்பு சி.எம்.டி.ஏவால் அங்கீகரிக்கப்பட்ட வீட்டுமனை பிரிவு உருவாக்கப்பட்டது.

இங்கு 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நகரில் 3 பிரதான சாலைகள், 20க்கும் மேற்பட்ட குறுக்கு சாலைகள் அமைந்துள்ளன. இதில், ஒரே ஒரு பிரதான சாலை மட்டும் ரூ.1 கோடி செலவில் தார் சாலையாக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு போடப்பட்டது.

அந்த சாலை, தற்போது குண்டும் குழியுமாக மாறி கிடக்கிறது. இதோடு மட்டுமில்லாமல், குறுக்கு சாலைகள் பல ஆண்டுகளாக போடப்படாமலே கிடக்கிறது. இதனால், சிறு மழை பெய்தால்கூட சாலைகள் சேறும் சகதியுமாக மாறி விடுகின்றன.

இதனால் பாதசாரிகள், இரு சக்கர வாகன ஓட்டிகளும் கடும் பாதிப்புக்குள்ளாகின்றனர். அதுமட்டுமல்லாது இப்பகுதிகளில் தெருக்களில் அமைக்கப்பட்ட குடிநீர் குழாய்களில் வாரத்திற்கு ஒரு முறைதான் தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது.

மேலும், மழைக்காலங்களில் தண்ணீர் செல்ல வடிகால் வசதி முறையாக இல்லை. இதனால், சிறு மழை பெய்தால்கூட வீடுகளை தண்ணீர் சூழ்ந்து நிற்கிறது. தற்போது விட்டு விட்டு பெய்யும் மழையாலும் ஆங்காங்கே காலி இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது.

இதிலிருந்து கொசுக்களும் உற்பத்தியாகின்றன. மேற்கண்ட பிரச்னைகள் குறித்து பொதுநல சங்கம் சார்பில் பலமுறை தமிழ்நாடு முதலமைச்சர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அலுவலர்களுக்கு புகார் மனு அனுப்பி உள்ளனர்.

இருந்த போதிலும் எவ்வித நடவடிக்கை எடுக்காமல் உள்ளது. இதனையடுத்து அப்பகுதியில் வசிக்கும் மக்கள் குண்டும் குழியுமான சாலையில் 'டார்ச் லைட்' அடித்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து பொது நல சங்க நிர்வாகிகள் கூறுகையில், எங்கள் பகுதி மக்கள் திருநின்றவூர் பேரூராட்சிக்கு தொடர்ந்து வரி செலுத்தி வருகிறோம். இருந்த போதிலும் பேரூராட்சி நிர்வாகம் அடிப்படை வசதிகளை செய்து தராமல் பல ஆண்டாக புறக்கணித்து வருகிறது.

இனிமேலாவது, எங்கள் பகுதிக்கு முறையான சாலை, குடிநீர், வடிகால் உள்ளிட்ட வசதிகளை போர்க்கால அடிப்படையில் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் விரைவில் பொதுமக்களை திரட்டி பேரூராட்சி அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம் என கூறினார்கள்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.