ETV Bharat / state

Third wave in TN: ஒமைக்ரான், டெல்டா பரவல் பிப்ரவரியில் உச்சத்தைத் தொடுமா?

author img

By

Published : Jan 10, 2022, 6:18 PM IST

Third wave: தமிழ்நாட்டில் மூன்றாவது அலையில் பரவும் ஒமைக்ரான், டெல்டா தொற்றுகள், பிப்ரவரியில் உச்சத்தைத் தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

3-வது அலை உச்சத்தை தொடுமா?
3-வது அலை உச்சத்தை தொடுமா?

Third wave: தமிழ்நாட்டில் மூன்றாவது அலையில் ஒமைக்ரான், டெல்டா ஆகிய இரண்டு வைரஸ்களின் தாக்கம் கண்டறியப்பட்டு வருவதாகவும், ஒமைக்ரான் பரவல் ஜனவரி இறுதி, பிப்ரவரி முதல் வாரத்தில் உச்சத்தைத் தொட்டு பின்னர் வேகமாகக் குறையும் எனவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனாலும் ஒமைக்ரான் வைரஸ் தொற்றால் அதிதீவிர பாதிப்புகள் இல்லை என உறுதியாகக் கூற முடியாது எனவும், சரியான நேரத்தில் சிகிச்சைப் பெற வேண்டும் என்றும் தெரிவிக்கும் மருத்துவர்கள், தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு பாதிப்புகள் குறைவாகவே இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

மருத்துவர் ஜான் ஜேக்ப்
மருத்துவர் ஜான் ஜேக்கப்

நிமோனியா குறைவு

ஒமைக்ரான் வைரஸ் பெருந்தொற்றால் இந்தியா சவாலான சூழலைச் சந்தித்துவரும் நிலையில், நோயை எவ்வாறு எதிர்கொள்வது என வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையைச் சேர்ந்த முன்னணி நுண்கிருமி மருத்துவர் ஜான் ஜேக்கப் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு அளித்த சிறப்புப் பேட்டியில், "ஒமைக்ரான் வைரஸ் தொற்று வித்தியாசமாக இருக்கிறது. ஏற்கெனவே இருந்த கரோனா தொற்று பாதித்த சாதாரண மனிதருக்கு நுரையீரல் பாதிப்பு, நிமோனியா ஏற்பட்டு ஆக்சிஜன் தேவை ஏற்பட்டது.

ஆனால், தற்பொழுது வந்துள்ள ஒமைக்ரான் பாதிப்பில் நுரையீரல் பாதிப்புக் குறைவு, நிமோனியா குறைவு, ஆக்சிஜன் அளவு சரியாக இருக்கிறது.

இதனால் வயதானவர்கள், இணை நோய் உள்ளவர்களுக்கு மட்டுமே தீவிரப்பாதிப்பு ஏற்படுகிறது. அதே நேரத்தில் நோய்த்தொற்று அதிகளவில் பாதிக்கப்பட்டு, அனைவருக்கும் பரவுகிறது. ஏற்கெனவே மருத்துவர்களுக்கு வந்துள்ளது.

தடுப்பூசி

ஒமைக்ரான் வைரஸ் நீங்கள் எந்தளவிற்குப் பாதுகாப்பாக இருந்தாலும் உங்களைத் தாக்கும். மேலும் சாதாரண முகக் கவசம் அணிந்துகொண்டால் மட்டுமே பாதுகாத்துக் கொள்ள முடியாது. என்.95 முகக்கவசம் அணிந்தால் 75 விழுக்காடு தற்காத்துக் கொள்ள முடியும்.

ஒமைக்ரான் வைரஸ் தொற்றுப் பரவல் குறித்த தகவல் நவம்பர் 27ஆம் தேதி தெரியும், உடனடியாக நாம் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும். தடுப்பூசி செலுத்த வேண்டியதன் அவசியத்தை மக்களிடம் அரசு தீவிரமாக எடுத்துக்கூறவில்லை.

இறப்பு விழுக்காடு

பொது ஊரடங்கு என்பது தேவையில்லை. பொது ஊரடங்கு அறிவித்தாலும் இதேபோன்று தொற்றுப் பரவலின் வேகம் அதிகமாகவே இருக்கும்.

ஒமைக்ரான் பரவலின் வேகத்தால் கடந்த இரண்டு நாள்களில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் டிசம்பர் 29ஆம் தேதி அறிவிக்கப்பட்டாலும், 12 நாள்களில் வேகமாகப் பரவியுள்ள நிலையில், அடுத்த இரண்டு நாள்களில் இரண்டு லட்சம் என ஒமைக்ரான் பரவல் உயர்ந்துவிடும். ஒமைக்ரான் பரவல் அதிகரிப்பு ஜனவரி இறுதி வாரத்திலோ அல்லது பிப்ரவரி முதல் வாரத்திலோ உச்சத்தைத் தொடும்.

அதிலிருந்து மார்ச் மாதத்தில் மீண்டும் இயல்புநிலைக்குத் திரும்பும். ஒன்றரை மாதத்தில் எல்லோருக்கும் வருவதால், நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவர்களுக்கு மருத்துவமனையில் சிகிக்சை தேவைப்படும்.

இதனைக்காலம் தாழ்த்தி பரவலை கட்டுப்படுத்தினால், மருத்துவமனையில் படுக்கைகள் தேவை உடனடியாக அதிகரிக்காது. மேலும் இறப்பு விழுக்காடு மிகவும் குறைவாகவே இருக்கிறது.

பூஸ்டர் தடுப்பூசி

தடுப்பூசியை அனைவருக்கும் போடமல் இருப்பது என்பது நாம் செய்த மிகப்பெரும் தவறாகும். மொத்த மக்கள் தொகையில் 46 விழுக்காடு பேர் மட்டுமே 2 தவணை தடுப்பூசி செலுத்தி உள்ளனர். பலர் முறையான தடுப்பூசி செலுத்தவில்லை. மேலும் பூஸ்டர் தடுப்பூசியின் பயன் குறித்தும் தெளிவாக கூறப்படவில்லை.

ஒமைக்ரான் தொற்றுப் பரவல் பிப்ரவரியில் உச்சம் தொட்டு, மீண்டும் குறையும்" என்றார்.

3-வது அலை உச்சத்தைத் தொடுமா?

சாதாரண காய்ச்சல்

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் ஜெயந்தி கூறும்போது, "கரோனா 3ஆவது அலையில் ஒமைக்ரான், டெல்டா என 2 வகையிலும் பரவி வருகிறது.

ஒமைக்ரான் பாதிப்பிற்கான அறிகுறிகளாக தொண்டை கரகரப்பு, மூன்றாம் நாளில் இருந்து இருமல், அதிகமான உடல் வலி ஆகியவை இருக்கிறது.

5 நாளில் இருந்து குணமடைந்து விடுகின்றனர். ஒமைக்ரான் பாதிப்பு அதிகம் இல்லாமல் இருக்கிறது என்பது தான் உலகளவில் தெரிகிறது. எனவே, நாம் அஜாக்கிரதையாக இருக்கக்கூடாது.

சாதாரண காய்ச்சல் என்பதால் மருத்துவர்களைப் பார்க்காமல் வீட்டில் இருக்கக்கூடாது. ஒமைக்ரான் வைரஸ் பரவல் வேகம் அதிகமாக இருக்கிறது. இதனால் இணை நோய் உள்ளவர்கள், வயதானவர்கள் போன்றவர்களை அதிகளவில் தாக்கி, பிற நோய்களும் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன.

எனவே 3ஆவது அலையில் வரும் ஒமைக்ரான் வைரஸ் எந்தப் பாதிப்பும் இருக்காது எனக் கூற முடியாது.

சமூகப் பொறுப்பு

அனைவரும் கவனமாக இருப்பதுடன், தடுப்பூசி போடாதவர்கள் போட்டுக் கொள்ள வேண்டும். தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களுக்கு மட்டுமே பாதிப்பு அதிகம் தெரிகிறது.

கரோனா பாதுகாப்பு வழிமுறைகளான முகக்கவசம் அணிதல், கைகழுவுதல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல் போன்றவற்றை அனைவரும் சமூகப் பொறுப்புணர்வு அறிந்து கடைப்பிடிக்க வேண்டும்.

2ஆவது அலையை எந்தவிதமானப் பாதிப்பும் இல்லாமல் கடந்தது போல், 3ஆவது அலையையும் கடந்து செல்ல வேண்டும்.

கண்காணிப்பு

ஒமைக்ரான் பரவல் வேகம் தான் அதன் பாதிப்பாக இருக்கிறது. இந்த வைரஸ் சுனாமி போல் பரவும் எனக்கூறப்படுகிறது.

இந்த வைரஸினால் பாதிப்பு எதுவும் இல்லை எனவும் கூற முடியாது. ஒமைக்ரானில் இருந்து உருமாறிய வைரஸ் வருவதற்கும் வாய்ப்புள்ளதாக என்பதையும் கண்காணிக்க வேண்டும். ஏற்கெனவே வந்த வைரஸ் தொற்றின்போது பிற நோய்கள் ஏற்பட்டது போல் வருமா? என்பதையும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

எஸ் ஜீன் டிராப்

3ஆவது அலையை எதிர்கொள்ளவும் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மருத்துவக்கட்டமைப்புகள், மருத்துவப்பணியாளர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டுத்தயார் நிலையில் உள்ளோம்.

தமிழ்நாட்டில் உள்ள நிறைய மருத்துவமனையில் எஸ் ஜீன் டிராப் கண்டறிவதற்கான வசதிகள் உள்ளன. அதன் அடிப்படையில் எஸ் ஜீன் டிராப் கண்டறியப்பட்ட நோயாளிகளுக்கு ஒமைக்ரான் வைரஸ் தொற்றுப் பாதிப்பிற்கான சிகிச்சை அளித்து வருகிறோம்.

இதனை உறுதி செய்ய மாநில மரபணு மாற்றம் கண்டறிவதற்கான ஆய்வகத்திற்கும் அனுப்பி வைக்கிறோம். அவர்கள் அதனை உறுதிசெய்து தெரிவிக்கின்றனர்" என்றார்.

3-வது அலை உச்சத்தை தொடுமா?

மருத்துவ சிகிச்சை

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக்கல்லூரி மைக்ரோ பயோலாஜி துறைத் தலைவர் தேவசேனா கூறும்போது, "தற்பொழுது கரோனா வைரஸ், டெல்டா, ஒமைக்கரான் அதிகளவில் உள்ளன.

2ஆவது அலையின்போது டெல்டா, டெல்டா பிளஸ் தான் இருந்தது. ஒமைக்ரான் டிசம்பர் 6ஆம் தேதி உலகளவில் சில இடங்களில் இருந்தது.

சென்னையில் டிசம்பர் 16ஆம் தேதி 4 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டது. டிசம்பர் 16ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரையில் ஒமைக்ரான் பாதிப்பு அதிகளவில் இருந்தது. பரிசோதனை ஆய்வகத்தில் டாக்பாத் மூலம் எஸ் ஜீன் டிராப் மூலம் கண்டுபிடிக்கிறோம்.

கோவிட் வைரஸ் தொற்றுக்கான ஜீன்களை ஆர்டிபிசிஆர் முறையில் கண்டுபிடிக்கிறோம். 250 மாதிரிகளில் எஸ் ஜீன் டிராப் 50 விழுக்காடு கண்டுபிடித்தாேம்.

188 ஒமைக்ரான் தொற்று பாதிப்புகளை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் பார்த்துள்ளோம். மேலும் டெல்டா வைரஸ் பாதிப்பையும் பார்த்துள்ளோம்.

ஒமைக்ரான் வைரஸ் சளி, காய்ச்சல் போன்றவையுடன் சென்று விடும் என பார்த்துக்கொண்டு இருந்தோம். ஆனால், தற்பொழுது சில பேருக்கு டெல்டா வைரஸ் போல் அபாயகரமானதாக வருகிறது.

ஒமைக்ரான் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கும் ரத்தம் உறைகிறது, உடல் உறுப்புகள் பாதிக்கப்படுகிறது.

மேலும் நீர்ச்சத்து இழப்பினாலும் தீவிரமான நோயாக மாறுவதற்கு வாய்ப்புள்ளது. ஒமைக்ரான், டெல்டா வைரஸ் பாதிப்பு உள்ளவர்களுக்கு ஒரே மாதிரியான மருத்துவ சிகிச்சை தான் அளிக்கப்படுகிறது.

புரோட்டீன் உணவு

மருத்துவர்கள் அறிவுரையின் அடிப்படையில் தான் மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும். கரோனா பரவல் அதிகளவில் வேகமாகப்பரவி வருகிறது.

இந்தப்பரவல் உச்சத்தைத்தொட்டு பிப்ரவரி 15ஆம் தேதிக்குப் பின்னர் குறைய ஆரம்பிக்கும். பொதுமக்கள் கரோனா பாதுகாப்பு வழிமுறைகளைத்தொடர்ந்து பின்பற்றி வருவதுடன், அதிகளவில் தண்ணீர், புரோட்டீன் அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

ஒமைக்ரான் வைரஸ் லோடு அதிகமானால், உடல் உறுப்புகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. ஆனால், மருத்துவர்களின் அறிவுரைப்படி மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும் புராேதச்சத்துள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

வீட்டுத் தனிமை

ஒமைக்ரான் வைரஸ் தொற்று வேகமாகப் பரவும் தன்மைக் கொண்டது. உடல் நலம் வலுவாக உள்ளவர்கள் மட்டும் தான் வீட்டுத்தனிமைக்கு அனுமதிக்கப்படுவார்கள்.

பிற இணை நோய் உள்ளவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைப்பெறுவது நல்லது. மேலும் தொண்டையில் வைரஸ் இருந்தால் மட்டுமே பரவும் தன்மை உள்ளது.

தற்பொழுது வரும் வைரஸ் தொற்று டெல்டாவா? ஒமைக்ரானா? எனக் கூற முடியாது. எனவே பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

வைரஸ் தொற்றின்போது 80 விழுக்காடு ஒமைக்ரான், 20 விழுக்காடு டெல்டாவாக 15 நாள்கள் இருந்தது. அதன் பின்னர் டெல்டா, ஒமைக்ரான் 50 விழுக்காடு என்ற அளவில் இருந்தது. தற்பொழுது டெல்டா வைரஸ் 60 விழுக்காடு, 40 விழுக்காடு ஒமைக்ரான் பாதிப்பு இருப்பதாக அரசு ஓமந்தூரார் மருத்துவமனையில் கண்டறிந்துள்ளோம்" என்றார்.

இதையும் படிங்க: நடிகை குஷ்புவிற்கு கரோனா!

Third wave: தமிழ்நாட்டில் மூன்றாவது அலையில் ஒமைக்ரான், டெல்டா ஆகிய இரண்டு வைரஸ்களின் தாக்கம் கண்டறியப்பட்டு வருவதாகவும், ஒமைக்ரான் பரவல் ஜனவரி இறுதி, பிப்ரவரி முதல் வாரத்தில் உச்சத்தைத் தொட்டு பின்னர் வேகமாகக் குறையும் எனவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனாலும் ஒமைக்ரான் வைரஸ் தொற்றால் அதிதீவிர பாதிப்புகள் இல்லை என உறுதியாகக் கூற முடியாது எனவும், சரியான நேரத்தில் சிகிச்சைப் பெற வேண்டும் என்றும் தெரிவிக்கும் மருத்துவர்கள், தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு பாதிப்புகள் குறைவாகவே இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

மருத்துவர் ஜான் ஜேக்ப்
மருத்துவர் ஜான் ஜேக்கப்

நிமோனியா குறைவு

ஒமைக்ரான் வைரஸ் பெருந்தொற்றால் இந்தியா சவாலான சூழலைச் சந்தித்துவரும் நிலையில், நோயை எவ்வாறு எதிர்கொள்வது என வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையைச் சேர்ந்த முன்னணி நுண்கிருமி மருத்துவர் ஜான் ஜேக்கப் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு அளித்த சிறப்புப் பேட்டியில், "ஒமைக்ரான் வைரஸ் தொற்று வித்தியாசமாக இருக்கிறது. ஏற்கெனவே இருந்த கரோனா தொற்று பாதித்த சாதாரண மனிதருக்கு நுரையீரல் பாதிப்பு, நிமோனியா ஏற்பட்டு ஆக்சிஜன் தேவை ஏற்பட்டது.

ஆனால், தற்பொழுது வந்துள்ள ஒமைக்ரான் பாதிப்பில் நுரையீரல் பாதிப்புக் குறைவு, நிமோனியா குறைவு, ஆக்சிஜன் அளவு சரியாக இருக்கிறது.

இதனால் வயதானவர்கள், இணை நோய் உள்ளவர்களுக்கு மட்டுமே தீவிரப்பாதிப்பு ஏற்படுகிறது. அதே நேரத்தில் நோய்த்தொற்று அதிகளவில் பாதிக்கப்பட்டு, அனைவருக்கும் பரவுகிறது. ஏற்கெனவே மருத்துவர்களுக்கு வந்துள்ளது.

தடுப்பூசி

ஒமைக்ரான் வைரஸ் நீங்கள் எந்தளவிற்குப் பாதுகாப்பாக இருந்தாலும் உங்களைத் தாக்கும். மேலும் சாதாரண முகக் கவசம் அணிந்துகொண்டால் மட்டுமே பாதுகாத்துக் கொள்ள முடியாது. என்.95 முகக்கவசம் அணிந்தால் 75 விழுக்காடு தற்காத்துக் கொள்ள முடியும்.

ஒமைக்ரான் வைரஸ் தொற்றுப் பரவல் குறித்த தகவல் நவம்பர் 27ஆம் தேதி தெரியும், உடனடியாக நாம் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும். தடுப்பூசி செலுத்த வேண்டியதன் அவசியத்தை மக்களிடம் அரசு தீவிரமாக எடுத்துக்கூறவில்லை.

இறப்பு விழுக்காடு

பொது ஊரடங்கு என்பது தேவையில்லை. பொது ஊரடங்கு அறிவித்தாலும் இதேபோன்று தொற்றுப் பரவலின் வேகம் அதிகமாகவே இருக்கும்.

ஒமைக்ரான் பரவலின் வேகத்தால் கடந்த இரண்டு நாள்களில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் டிசம்பர் 29ஆம் தேதி அறிவிக்கப்பட்டாலும், 12 நாள்களில் வேகமாகப் பரவியுள்ள நிலையில், அடுத்த இரண்டு நாள்களில் இரண்டு லட்சம் என ஒமைக்ரான் பரவல் உயர்ந்துவிடும். ஒமைக்ரான் பரவல் அதிகரிப்பு ஜனவரி இறுதி வாரத்திலோ அல்லது பிப்ரவரி முதல் வாரத்திலோ உச்சத்தைத் தொடும்.

அதிலிருந்து மார்ச் மாதத்தில் மீண்டும் இயல்புநிலைக்குத் திரும்பும். ஒன்றரை மாதத்தில் எல்லோருக்கும் வருவதால், நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவர்களுக்கு மருத்துவமனையில் சிகிக்சை தேவைப்படும்.

இதனைக்காலம் தாழ்த்தி பரவலை கட்டுப்படுத்தினால், மருத்துவமனையில் படுக்கைகள் தேவை உடனடியாக அதிகரிக்காது. மேலும் இறப்பு விழுக்காடு மிகவும் குறைவாகவே இருக்கிறது.

பூஸ்டர் தடுப்பூசி

தடுப்பூசியை அனைவருக்கும் போடமல் இருப்பது என்பது நாம் செய்த மிகப்பெரும் தவறாகும். மொத்த மக்கள் தொகையில் 46 விழுக்காடு பேர் மட்டுமே 2 தவணை தடுப்பூசி செலுத்தி உள்ளனர். பலர் முறையான தடுப்பூசி செலுத்தவில்லை. மேலும் பூஸ்டர் தடுப்பூசியின் பயன் குறித்தும் தெளிவாக கூறப்படவில்லை.

ஒமைக்ரான் தொற்றுப் பரவல் பிப்ரவரியில் உச்சம் தொட்டு, மீண்டும் குறையும்" என்றார்.

3-வது அலை உச்சத்தைத் தொடுமா?

சாதாரண காய்ச்சல்

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் ஜெயந்தி கூறும்போது, "கரோனா 3ஆவது அலையில் ஒமைக்ரான், டெல்டா என 2 வகையிலும் பரவி வருகிறது.

ஒமைக்ரான் பாதிப்பிற்கான அறிகுறிகளாக தொண்டை கரகரப்பு, மூன்றாம் நாளில் இருந்து இருமல், அதிகமான உடல் வலி ஆகியவை இருக்கிறது.

5 நாளில் இருந்து குணமடைந்து விடுகின்றனர். ஒமைக்ரான் பாதிப்பு அதிகம் இல்லாமல் இருக்கிறது என்பது தான் உலகளவில் தெரிகிறது. எனவே, நாம் அஜாக்கிரதையாக இருக்கக்கூடாது.

சாதாரண காய்ச்சல் என்பதால் மருத்துவர்களைப் பார்க்காமல் வீட்டில் இருக்கக்கூடாது. ஒமைக்ரான் வைரஸ் பரவல் வேகம் அதிகமாக இருக்கிறது. இதனால் இணை நோய் உள்ளவர்கள், வயதானவர்கள் போன்றவர்களை அதிகளவில் தாக்கி, பிற நோய்களும் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன.

எனவே 3ஆவது அலையில் வரும் ஒமைக்ரான் வைரஸ் எந்தப் பாதிப்பும் இருக்காது எனக் கூற முடியாது.

சமூகப் பொறுப்பு

அனைவரும் கவனமாக இருப்பதுடன், தடுப்பூசி போடாதவர்கள் போட்டுக் கொள்ள வேண்டும். தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களுக்கு மட்டுமே பாதிப்பு அதிகம் தெரிகிறது.

கரோனா பாதுகாப்பு வழிமுறைகளான முகக்கவசம் அணிதல், கைகழுவுதல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல் போன்றவற்றை அனைவரும் சமூகப் பொறுப்புணர்வு அறிந்து கடைப்பிடிக்க வேண்டும்.

2ஆவது அலையை எந்தவிதமானப் பாதிப்பும் இல்லாமல் கடந்தது போல், 3ஆவது அலையையும் கடந்து செல்ல வேண்டும்.

கண்காணிப்பு

ஒமைக்ரான் பரவல் வேகம் தான் அதன் பாதிப்பாக இருக்கிறது. இந்த வைரஸ் சுனாமி போல் பரவும் எனக்கூறப்படுகிறது.

இந்த வைரஸினால் பாதிப்பு எதுவும் இல்லை எனவும் கூற முடியாது. ஒமைக்ரானில் இருந்து உருமாறிய வைரஸ் வருவதற்கும் வாய்ப்புள்ளதாக என்பதையும் கண்காணிக்க வேண்டும். ஏற்கெனவே வந்த வைரஸ் தொற்றின்போது பிற நோய்கள் ஏற்பட்டது போல் வருமா? என்பதையும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

எஸ் ஜீன் டிராப்

3ஆவது அலையை எதிர்கொள்ளவும் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மருத்துவக்கட்டமைப்புகள், மருத்துவப்பணியாளர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டுத்தயார் நிலையில் உள்ளோம்.

தமிழ்நாட்டில் உள்ள நிறைய மருத்துவமனையில் எஸ் ஜீன் டிராப் கண்டறிவதற்கான வசதிகள் உள்ளன. அதன் அடிப்படையில் எஸ் ஜீன் டிராப் கண்டறியப்பட்ட நோயாளிகளுக்கு ஒமைக்ரான் வைரஸ் தொற்றுப் பாதிப்பிற்கான சிகிச்சை அளித்து வருகிறோம்.

இதனை உறுதி செய்ய மாநில மரபணு மாற்றம் கண்டறிவதற்கான ஆய்வகத்திற்கும் அனுப்பி வைக்கிறோம். அவர்கள் அதனை உறுதிசெய்து தெரிவிக்கின்றனர்" என்றார்.

3-வது அலை உச்சத்தை தொடுமா?

மருத்துவ சிகிச்சை

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக்கல்லூரி மைக்ரோ பயோலாஜி துறைத் தலைவர் தேவசேனா கூறும்போது, "தற்பொழுது கரோனா வைரஸ், டெல்டா, ஒமைக்கரான் அதிகளவில் உள்ளன.

2ஆவது அலையின்போது டெல்டா, டெல்டா பிளஸ் தான் இருந்தது. ஒமைக்ரான் டிசம்பர் 6ஆம் தேதி உலகளவில் சில இடங்களில் இருந்தது.

சென்னையில் டிசம்பர் 16ஆம் தேதி 4 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டது. டிசம்பர் 16ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரையில் ஒமைக்ரான் பாதிப்பு அதிகளவில் இருந்தது. பரிசோதனை ஆய்வகத்தில் டாக்பாத் மூலம் எஸ் ஜீன் டிராப் மூலம் கண்டுபிடிக்கிறோம்.

கோவிட் வைரஸ் தொற்றுக்கான ஜீன்களை ஆர்டிபிசிஆர் முறையில் கண்டுபிடிக்கிறோம். 250 மாதிரிகளில் எஸ் ஜீன் டிராப் 50 விழுக்காடு கண்டுபிடித்தாேம்.

188 ஒமைக்ரான் தொற்று பாதிப்புகளை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் பார்த்துள்ளோம். மேலும் டெல்டா வைரஸ் பாதிப்பையும் பார்த்துள்ளோம்.

ஒமைக்ரான் வைரஸ் சளி, காய்ச்சல் போன்றவையுடன் சென்று விடும் என பார்த்துக்கொண்டு இருந்தோம். ஆனால், தற்பொழுது சில பேருக்கு டெல்டா வைரஸ் போல் அபாயகரமானதாக வருகிறது.

ஒமைக்ரான் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கும் ரத்தம் உறைகிறது, உடல் உறுப்புகள் பாதிக்கப்படுகிறது.

மேலும் நீர்ச்சத்து இழப்பினாலும் தீவிரமான நோயாக மாறுவதற்கு வாய்ப்புள்ளது. ஒமைக்ரான், டெல்டா வைரஸ் பாதிப்பு உள்ளவர்களுக்கு ஒரே மாதிரியான மருத்துவ சிகிச்சை தான் அளிக்கப்படுகிறது.

புரோட்டீன் உணவு

மருத்துவர்கள் அறிவுரையின் அடிப்படையில் தான் மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும். கரோனா பரவல் அதிகளவில் வேகமாகப்பரவி வருகிறது.

இந்தப்பரவல் உச்சத்தைத்தொட்டு பிப்ரவரி 15ஆம் தேதிக்குப் பின்னர் குறைய ஆரம்பிக்கும். பொதுமக்கள் கரோனா பாதுகாப்பு வழிமுறைகளைத்தொடர்ந்து பின்பற்றி வருவதுடன், அதிகளவில் தண்ணீர், புரோட்டீன் அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

ஒமைக்ரான் வைரஸ் லோடு அதிகமானால், உடல் உறுப்புகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. ஆனால், மருத்துவர்களின் அறிவுரைப்படி மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும் புராேதச்சத்துள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

வீட்டுத் தனிமை

ஒமைக்ரான் வைரஸ் தொற்று வேகமாகப் பரவும் தன்மைக் கொண்டது. உடல் நலம் வலுவாக உள்ளவர்கள் மட்டும் தான் வீட்டுத்தனிமைக்கு அனுமதிக்கப்படுவார்கள்.

பிற இணை நோய் உள்ளவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைப்பெறுவது நல்லது. மேலும் தொண்டையில் வைரஸ் இருந்தால் மட்டுமே பரவும் தன்மை உள்ளது.

தற்பொழுது வரும் வைரஸ் தொற்று டெல்டாவா? ஒமைக்ரானா? எனக் கூற முடியாது. எனவே பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

வைரஸ் தொற்றின்போது 80 விழுக்காடு ஒமைக்ரான், 20 விழுக்காடு டெல்டாவாக 15 நாள்கள் இருந்தது. அதன் பின்னர் டெல்டா, ஒமைக்ரான் 50 விழுக்காடு என்ற அளவில் இருந்தது. தற்பொழுது டெல்டா வைரஸ் 60 விழுக்காடு, 40 விழுக்காடு ஒமைக்ரான் பாதிப்பு இருப்பதாக அரசு ஓமந்தூரார் மருத்துவமனையில் கண்டறிந்துள்ளோம்" என்றார்.

இதையும் படிங்க: நடிகை குஷ்புவிற்கு கரோனா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.