ETV Bharat / state

வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ள 'சபரி' படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

வரலட்சுமி சரத்குமார் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'சபரி' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

author img

By

Published : Dec 21, 2022, 3:24 PM IST

Updated : Dec 21, 2022, 4:28 PM IST

வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ள சபரி படத்தின் படப்பிடிப்பு நிறைவு
வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ள சபரி படத்தின் படப்பிடிப்பு நிறைவு

சென்னை: நடிகை வரலட்சுமி சரத்குமார் தற்போது ‘சபரி’ என்கிற படத்தில் இதற்கு முன்பு ஏற்றிடாத வித்தியாசமான ஒரு கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். மஹா மூவிஸ் பேனரின்கீழ், இந்தப் படத்தை மகேந்திரநாத் கொண்டலா தயாரிக்க அறிமுக இயக்குநர் அனில் கட்ஸ் இந்தப் படத்தை இயக்கி இருக்கிறார். மஹரிஷி கொண்டலா இந்தப் படத்தை வழங்குகிறார். தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் இந்தி என உருவாகி வந்த இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளது.

படத்தின் கதாநாயகி வரலட்சுமி சரத்குமார் கூறுகையில், “எங்கள் ‘சபரி’ படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. மகேந்திரன் போன்ற தயாரிப்பாளர் எங்களுக்கு கிடைத்திருப்பது அதிர்ஷ்டம். வலுவான இந்தக் கதையை நம்பி, படத்திற்கு நிறைய செலவு செய்திருக்கிறார். நான் வேலை பார்த்த தயாரிப்பாளர்களில் மிகச் சிறந்தவர். அவர் கொடுத்த ஒவ்வொரு ரூபாயையும் இயக்குநர் அனில் கட்ஸ் படமாக திரையில் கொண்டு வந்துள்ளார்.

பல இடங்களில் இந்தக் கதையை நாங்கள் படமாக்கி உள்ளோம். படம் நன்றாக வந்துள்ளது. இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்ததில் மிக்க மகிழ்ச்சி. இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் டப்பிங் பணிகள் தொடங்கும். விரைவில் திரையரங்குகளில் படத்தை வெளியிடுவோம்” என்றார். இந்தப் படத்தில் வரலட்சுமி சரத்குமார் உடன் கணேஷ் வெங்கட்ராம், மைம் கோபி, சுனைனா உட்படப் பலர் நடித்துள்ளனர்.

இதையும் படிங்க: நடிகை ரகுல் ப்ரீத் சிங் லேட்டஸ்ட் கிளிக்ஸ்

சென்னை: நடிகை வரலட்சுமி சரத்குமார் தற்போது ‘சபரி’ என்கிற படத்தில் இதற்கு முன்பு ஏற்றிடாத வித்தியாசமான ஒரு கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். மஹா மூவிஸ் பேனரின்கீழ், இந்தப் படத்தை மகேந்திரநாத் கொண்டலா தயாரிக்க அறிமுக இயக்குநர் அனில் கட்ஸ் இந்தப் படத்தை இயக்கி இருக்கிறார். மஹரிஷி கொண்டலா இந்தப் படத்தை வழங்குகிறார். தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் இந்தி என உருவாகி வந்த இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளது.

படத்தின் கதாநாயகி வரலட்சுமி சரத்குமார் கூறுகையில், “எங்கள் ‘சபரி’ படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. மகேந்திரன் போன்ற தயாரிப்பாளர் எங்களுக்கு கிடைத்திருப்பது அதிர்ஷ்டம். வலுவான இந்தக் கதையை நம்பி, படத்திற்கு நிறைய செலவு செய்திருக்கிறார். நான் வேலை பார்த்த தயாரிப்பாளர்களில் மிகச் சிறந்தவர். அவர் கொடுத்த ஒவ்வொரு ரூபாயையும் இயக்குநர் அனில் கட்ஸ் படமாக திரையில் கொண்டு வந்துள்ளார்.

பல இடங்களில் இந்தக் கதையை நாங்கள் படமாக்கி உள்ளோம். படம் நன்றாக வந்துள்ளது. இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்ததில் மிக்க மகிழ்ச்சி. இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் டப்பிங் பணிகள் தொடங்கும். விரைவில் திரையரங்குகளில் படத்தை வெளியிடுவோம்” என்றார். இந்தப் படத்தில் வரலட்சுமி சரத்குமார் உடன் கணேஷ் வெங்கட்ராம், மைம் கோபி, சுனைனா உட்படப் பலர் நடித்துள்ளனர்.

இதையும் படிங்க: நடிகை ரகுல் ப்ரீத் சிங் லேட்டஸ்ட் கிளிக்ஸ்

Last Updated : Dec 21, 2022, 4:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.