ETV Bharat / state

சமூக நீதிக் கொள்கை எல்லா இடங்களிலும் செழித்து வருகிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

author img

By

Published : Jul 5, 2022, 3:52 PM IST

சமூகநீதி என்ற தத்துவமே பிள்ளைகளின் கல்விக்காகத் தான், இளைஞர்களின் வேலை வாய்ப்புக்காகத்தான் உருவாக்கப்பட்டது. இன்றைக்கு சாமானியர்களைக் கைதூக்கி விடும் சமூகநீதிக் கொள்கை எல்லா இடங்களிலும் செழித்து வரும் நிலையில், அந்த வாய்ப்பை மாணவர்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாநிலக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

சமூக நீதிக் கொள்கை எல்லா இடங்களிலும் செழித்து வருகிறது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சமூக நீதிக் கொள்கை எல்லா இடங்களிலும் செழித்து வருகிறது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: சென்னை மாநிலக் கல்லூரியில் இன்று நடந்த பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். இவ்விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

இந்தப் பட்டமளிப்பு விழாவில் கலை பிரிவில் 1613 மாணவர்களும், அறிவியல் பிரிவில் 1597 பேர் என மொத்தம் 3210 பேர் பட்டம் பெற்றனர். அவர்களில் கலை மற்றும் அறிவியல், M.Phil உள்ளிட்ட பாடப் பிரிவுகளில் முதலிடம் பெற்ற 78 பேருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பட்டங்களை வழங்கி பேசும்போது, தமிழகத்தினுடைய முதலமைச்சராகப் பொறுப்பேற்று, பல்வேறு நிகழ்ச்சிகளில் நான் கலந்து கொண்டு இருக்கிறேன். அப்போது அடையும் மகிழ்ச்சியை விட பல மடங்கு நான் படித்த கல்லூரியான இந்த மாநிலக் கல்லூரியில் நடைபெறக்கூடிய நிகழ்ச்சியில் பங்கேற்று அதிகமான மகிழ்ச்சியை நான் அடைந்து கொண்டு இருக்கிறேன். இன்னும் சொல்ல வேண்டுமென்றால், சிறிது இறுமாப்புடன் நின்று கொண்டிருக்கிறேன்.

சென்னை மாநிலக் கல்லூரியில் இன்று நடந்த பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை மாநிலக் கல்லூரியில் இன்று நடந்த பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சீனியர் என்ற முறையில் வாழ்த்து: தமிழ்நாட்டின் முதலமைச்சராக மட்டும் நான் உங்களை வாழ்த்த வரவில்லை. இந்தக் கல்லூரியின் முன்னாள் மாணவர் என்ற முறையிலும் உங்களை வாழ்த்துவதற்காக நான் வந்திருக்கிறேன். உங்களுடைய சீனியர் என்ற அடிப்படையில் என்னுடைய வாழ்த்துகளை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

1972-ஆம் ஆண்டு, ஜூன் மாதம் 15-ஆம் நாள், இந்தக் கல்லூரியில் அரசியல் அறிவியல் பாட மாணவனாகச் நான் சேர்ந்து படித்தேன். முழுமையாக என்னைக் கல்வியில் ஈடுபடுத்திக் கொண்டேனா என்றால் இல்லை. ஏனென்றால், அப்போதே எனக்கு அரசியல் ஆர்வம் வந்துவிட்டது. அதுவும் அதிகமான ஆர்வம் கொண்டவனாக, நான் நேரடியாக அரசியலில் இறங்கி விட்டேன்.

போலீஸ் பாதுகாப்புடன் வந்து பரிட்சை எழுதினேன்: 1971-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், திமுக வெற்றிக்காக, அதனுடைய பிரச்சாரத்திற்காக தேர்தல் பிரச்சார நாடகங்களை ஊர் ஊராக, தொகுதி தொகுதியாகச் சென்று நான் நடத்தினேன். அந்தக் காரணத்தால், என்னால் முழுமையாகப் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் போய்விட்டது.

படிப்பில் முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளாத நான், இந்தியாவில் நெருக்கடி நிலை ஏற்பட்ட நேரத்தில், மிசா என்ற அந்த கொடுமையான சட்டத்தை, நெருக்கடி நிலையை, திமுக ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது, அதை எதிர்த்த காரணத்தால், கருணாநிதி தலைமையில் நடைபெற்றுக் கொண்டிருந்த ஆட்சி கலைக்கப்பட்டது. கலைக்கப்பட்டவுடன் 500-க்கும் மேற்பட்ட திமுகவை சார்ந்தவர்கள் கைது செய்யப்பட்டு, மிசா கைதிகளாக சிறையில் அடைக்கப்பட்டனர்.

சமூக நீதிக் கொள்கை எல்லா இடங்களிலும் செழித்து வருகிறது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

நான் சென்னை சிறைச்சாலையில் ஓராண்டு காலம் இருந்தேன். அந்த மிசா சட்டத்தில் சென்னை சிறையில் சிறைவாசியாக இருந்தபோது தான், அங்கிருந்து போலீஸ் பாதுகாப்போடு இந்தக் கல்லூரிக்கு வந்து நான் பரிட்சை எழுதிவிட்டுச் சென்றேன். அதையெல்லாம் இப்போது நான் நினைத்துப் பார்க்கிறேன்.

இப்போது தமிழ்நாட்டினுடைய முதலமைச்சராக உயர்ந்துள்ளேன் என்று சொல்லி, இதனையே நீங்கள் அனைவரும் முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. விதிவிலக்குகள் என்பது விதிகள் ஆகாது! அந்த வகையில் கல்வியைக் கட்டாயக் கடமையாக வலியுறுத்தி, இன்று ஒரு இயக்கமாகவே அதை நான் தொடங்கியிருக்கிறேன். கல்விதான் யாராலும் திருட முடியாத உண்மையான சொத்து. அத்தகைய அறிவுச் சொத்துக்களை உருவாக்கித் தரக்கூடிய மகத்தான கல்லூரிதான், இந்த மாநிலக் கல்லூரி.

சென்னை மாகாணத்தின் முதல் கல்லூரி, இந்த மாநிலக் கல்லூரி! 1840-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கல்லூரி இது. பொதுவாகப் பல்கலைக்கழகங்களுக்குக் கீழ்தான் எல்லாக் கல்லூரிகளும் வரும். ஆனால், சென்னைப் பல்கலைக்கழகம் உருவாக்கப்படுவதற்கு முன்பே தொடங்கப்பட்ட கல்லூரிதான் இந்த மாநிலக் கல்லூரி!

மாநிலக் கல்லூரி தொடங்கப்பட்டு 14 ஆண்டுகள் கழித்துதான் சென்னைப் பல்கலைக்கழகமே தொடங்கப்பட்டது. எனவே, இதனை சென்னைப் பல்கலைக்கழகத்தின் தாய் நிறுவனம் என்று சொல்வர். தாய் நிறுவனத்தில் படித்த பிள்ளைகள் நீங்கள். உங்களது எதிர்காலம் நிச்சயம் சிறப்பாகத்தான் அமையும். கடந்த 182 ஆண்டுகால வரலாற்றில் பல லட்சம் பேருக்குக் கல்வியை வழங்கியதன் மூலமாக, பல தலைமுறைக்கும் கல்வியை வழங்கிய மாபெரும் கல்லூரியாக இது அமைந்திருக்கிறது.

மாநிலக் கல்லூரி பெரும்பாலும் முதல் தலைமுறைப் பட்டதாரிகள் அதிகம் படிக்கக்கூடிய கல்லூரி, விளிம்புநிலை மக்கள் அதிகம் படிக்கக்கூடிய கல்லூரி, ஒடுக்கப்பட்ட சமூகத்து மாணவர்கள் அதிகம் படிக்கக்கூடிய கல்லூரி, புறநகர்ப் பகுதியைச் சேர்ந்தவர்கள் அதிகம் படிக்கக்கூடிய கல்லூரி என்கிற வகையில் சமூகநீதிக் கல்லூரியாகவும் இது அமைந்திருப்பது உள்ளபடியே பெருமைக்குரிய ஒன்றாக விளங்கிக் கொண்டிருக்கிறது.

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தைத்தான் நான் மிக மிக முக்கியமானதாகக் கருதுகிறேன். பார்வை குறைபாடுடைய மாற்றுத்திறனாளி மாணவர்கள் 94 பேரும், செவித்திறன், பேச்சுத்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளி மாணவர்கள் 200-க்கும் மேற்பட்டோரும் பயின்று வருகின்றனர்.

இவர்களுக்காக பி.காம், பி.சி.ஏ. ஆகிய பாடப்பிரிவுகள் இருக்கிறது. செவித்திறன், பேச்சுத்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான எம்.காம்., படிப்புக்கும், தமிழ்நாடு அரசு இப்போது அனுமதி வழங்கி இருக்கிறது. இந்தியாவில் இப்படி ஒரு வாய்ப்பு எந்த மாநிலத்திலும் கிடையாது. மாற்றுத்திறனாளிகளின் கல்விக்கு உதவுவதன் மூலமாக, மாநிலக் கல்லூரி மனித நேயக் கல்லூரியாகவும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. கல்லூரியாக இருந்தாலும், மாநிலக் கல்லூரி பல்கலைக்கழகம் போல இது செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

இந்த சிறப்புக்குரிய மாநிலக் கல்லூரியின் மேம்பாட்டுக்காக, 2000 பேர் அமரக்கூடிய வகையில், நம்முடைய முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பெயரால் மாபெரும் அரங்கம் மாநிலக் கல்லூரி வளாகத்தில் கட்டித் தரப்படும். சிற்றுண்டிச்சாலையை சீர்செய்ய நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறனையும், சட்டமன்ற உறுப்பினராகக்கூடிய உதயநிதியையும் நான் கேட்டுக் கொள்கிறேன். உங்களால் இயன்ற அளவு அந்த தொகுதி மேம்பாட்டு நிதியை அதற்கு நீங்கள் வழங்கிட வேண்டும்.

300-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி மாணவர்கள் இங்கே படிக்கின்றனர். தமிழ்நாட்டின் பல்வேறு ஊர்களில் இருந்து அவர்கள் இங்கே வந்து, தங்கிப் படித்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அவர்களுக்கென்று விடுதி கிடையாது. அவர்களுக்கான விடுதி, மாநிலக் கல்லூரி வளாகத்திலேயே அமைத்துத் தரப்படும்.

சமூகநீதி என்ற தத்துவமே பிள்ளைகளின் கல்விக்காகத் தான், இளைஞர்களின் வேலை வாய்ப்புக்காகத்தான் உருவாக்கப்பட்டது. இன்றைக்கு சாமானியர்களைக் கை தூக்கி விடும் சமூகநீதிக் கொள்கை எல்லா இடங்களிலும் செழித்து வரும் நிலையில், அந்த வாய்ப்பை மாணவர்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

பெண்கள் கல்வி கற்பது என்பது, வேலைக்குப் போவதோடு முடிந்து விடுவது இல்லை, பெண்களுக்குத் தன்னம்பிக்கை அளிப்பதாக, தைரியத்தை வழங்குவதாக கல்வி அமைகிறது. எனவே, பெண் பிள்ளைகள் நிச்சயமாக படிக்க வேண்டும், பட்டங்களைப் பெற வேண்டும். கலை, இலக்கியம், நாடகம், நாட்டியம், விளையாட்டு போன்றவற்றில் இருக்கக்கூடிய விருப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து விடுகின்றனர். அப்படி இல்லாமல் தங்களது விருப்பங்களை, அறிவாற்றலை வாழ்நாள் முழுக்கப் பயன்படுத்தக்கூடிய சூழலை தங்களுக்குத் தாங்களே உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் கல்வி பெற்றவர்களுடைய விழுக்காடு என்ன? இன்றைய விழுக்காடு என்ன என்பதைப் பார்த்தால்தான், திராவிட மாடல் என்றால் என்ன என்பது புரியும். இதைச் சொல்வதால், நான் அரசியல் பேசுவதாக யாரும் தயவுசெய்து தவறாகக் கருதிவிடக்கூடாது. எத்தகைய அறிவுச்சூழல் தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது.

கடந்த ஓராண்டு காலத்தில் பள்ளிக்கல்வித் துறை துள்ளி எழுந்திருக்கிறது. உயர்கல்வித்துறை புதிய உத்வேகத்தோடு நடைபோட்டுக் கொண்டிருக்கிறது. கடைக்கோடி மனிதரையும் கல்வி பெற வைத்து, உலகச் சமுதாயத்தின் போட்டிக் களத்தில் அவர்களையும் போட்டியாளர்களாக மாற்றும் ஆட்சிதான் இந்த ஆட்சி என பேசினார்.

இதையும் படிங்க: பொதுக் குழுவுக்கு தடையா?: ஓபிஎஸ் மனு நாளை விசாரணை

சென்னை: சென்னை மாநிலக் கல்லூரியில் இன்று நடந்த பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். இவ்விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

இந்தப் பட்டமளிப்பு விழாவில் கலை பிரிவில் 1613 மாணவர்களும், அறிவியல் பிரிவில் 1597 பேர் என மொத்தம் 3210 பேர் பட்டம் பெற்றனர். அவர்களில் கலை மற்றும் அறிவியல், M.Phil உள்ளிட்ட பாடப் பிரிவுகளில் முதலிடம் பெற்ற 78 பேருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பட்டங்களை வழங்கி பேசும்போது, தமிழகத்தினுடைய முதலமைச்சராகப் பொறுப்பேற்று, பல்வேறு நிகழ்ச்சிகளில் நான் கலந்து கொண்டு இருக்கிறேன். அப்போது அடையும் மகிழ்ச்சியை விட பல மடங்கு நான் படித்த கல்லூரியான இந்த மாநிலக் கல்லூரியில் நடைபெறக்கூடிய நிகழ்ச்சியில் பங்கேற்று அதிகமான மகிழ்ச்சியை நான் அடைந்து கொண்டு இருக்கிறேன். இன்னும் சொல்ல வேண்டுமென்றால், சிறிது இறுமாப்புடன் நின்று கொண்டிருக்கிறேன்.

சென்னை மாநிலக் கல்லூரியில் இன்று நடந்த பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை மாநிலக் கல்லூரியில் இன்று நடந்த பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சீனியர் என்ற முறையில் வாழ்த்து: தமிழ்நாட்டின் முதலமைச்சராக மட்டும் நான் உங்களை வாழ்த்த வரவில்லை. இந்தக் கல்லூரியின் முன்னாள் மாணவர் என்ற முறையிலும் உங்களை வாழ்த்துவதற்காக நான் வந்திருக்கிறேன். உங்களுடைய சீனியர் என்ற அடிப்படையில் என்னுடைய வாழ்த்துகளை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

1972-ஆம் ஆண்டு, ஜூன் மாதம் 15-ஆம் நாள், இந்தக் கல்லூரியில் அரசியல் அறிவியல் பாட மாணவனாகச் நான் சேர்ந்து படித்தேன். முழுமையாக என்னைக் கல்வியில் ஈடுபடுத்திக் கொண்டேனா என்றால் இல்லை. ஏனென்றால், அப்போதே எனக்கு அரசியல் ஆர்வம் வந்துவிட்டது. அதுவும் அதிகமான ஆர்வம் கொண்டவனாக, நான் நேரடியாக அரசியலில் இறங்கி விட்டேன்.

போலீஸ் பாதுகாப்புடன் வந்து பரிட்சை எழுதினேன்: 1971-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், திமுக வெற்றிக்காக, அதனுடைய பிரச்சாரத்திற்காக தேர்தல் பிரச்சார நாடகங்களை ஊர் ஊராக, தொகுதி தொகுதியாகச் சென்று நான் நடத்தினேன். அந்தக் காரணத்தால், என்னால் முழுமையாகப் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் போய்விட்டது.

படிப்பில் முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளாத நான், இந்தியாவில் நெருக்கடி நிலை ஏற்பட்ட நேரத்தில், மிசா என்ற அந்த கொடுமையான சட்டத்தை, நெருக்கடி நிலையை, திமுக ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது, அதை எதிர்த்த காரணத்தால், கருணாநிதி தலைமையில் நடைபெற்றுக் கொண்டிருந்த ஆட்சி கலைக்கப்பட்டது. கலைக்கப்பட்டவுடன் 500-க்கும் மேற்பட்ட திமுகவை சார்ந்தவர்கள் கைது செய்யப்பட்டு, மிசா கைதிகளாக சிறையில் அடைக்கப்பட்டனர்.

சமூக நீதிக் கொள்கை எல்லா இடங்களிலும் செழித்து வருகிறது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

நான் சென்னை சிறைச்சாலையில் ஓராண்டு காலம் இருந்தேன். அந்த மிசா சட்டத்தில் சென்னை சிறையில் சிறைவாசியாக இருந்தபோது தான், அங்கிருந்து போலீஸ் பாதுகாப்போடு இந்தக் கல்லூரிக்கு வந்து நான் பரிட்சை எழுதிவிட்டுச் சென்றேன். அதையெல்லாம் இப்போது நான் நினைத்துப் பார்க்கிறேன்.

இப்போது தமிழ்நாட்டினுடைய முதலமைச்சராக உயர்ந்துள்ளேன் என்று சொல்லி, இதனையே நீங்கள் அனைவரும் முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. விதிவிலக்குகள் என்பது விதிகள் ஆகாது! அந்த வகையில் கல்வியைக் கட்டாயக் கடமையாக வலியுறுத்தி, இன்று ஒரு இயக்கமாகவே அதை நான் தொடங்கியிருக்கிறேன். கல்விதான் யாராலும் திருட முடியாத உண்மையான சொத்து. அத்தகைய அறிவுச் சொத்துக்களை உருவாக்கித் தரக்கூடிய மகத்தான கல்லூரிதான், இந்த மாநிலக் கல்லூரி.

சென்னை மாகாணத்தின் முதல் கல்லூரி, இந்த மாநிலக் கல்லூரி! 1840-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கல்லூரி இது. பொதுவாகப் பல்கலைக்கழகங்களுக்குக் கீழ்தான் எல்லாக் கல்லூரிகளும் வரும். ஆனால், சென்னைப் பல்கலைக்கழகம் உருவாக்கப்படுவதற்கு முன்பே தொடங்கப்பட்ட கல்லூரிதான் இந்த மாநிலக் கல்லூரி!

மாநிலக் கல்லூரி தொடங்கப்பட்டு 14 ஆண்டுகள் கழித்துதான் சென்னைப் பல்கலைக்கழகமே தொடங்கப்பட்டது. எனவே, இதனை சென்னைப் பல்கலைக்கழகத்தின் தாய் நிறுவனம் என்று சொல்வர். தாய் நிறுவனத்தில் படித்த பிள்ளைகள் நீங்கள். உங்களது எதிர்காலம் நிச்சயம் சிறப்பாகத்தான் அமையும். கடந்த 182 ஆண்டுகால வரலாற்றில் பல லட்சம் பேருக்குக் கல்வியை வழங்கியதன் மூலமாக, பல தலைமுறைக்கும் கல்வியை வழங்கிய மாபெரும் கல்லூரியாக இது அமைந்திருக்கிறது.

மாநிலக் கல்லூரி பெரும்பாலும் முதல் தலைமுறைப் பட்டதாரிகள் அதிகம் படிக்கக்கூடிய கல்லூரி, விளிம்புநிலை மக்கள் அதிகம் படிக்கக்கூடிய கல்லூரி, ஒடுக்கப்பட்ட சமூகத்து மாணவர்கள் அதிகம் படிக்கக்கூடிய கல்லூரி, புறநகர்ப் பகுதியைச் சேர்ந்தவர்கள் அதிகம் படிக்கக்கூடிய கல்லூரி என்கிற வகையில் சமூகநீதிக் கல்லூரியாகவும் இது அமைந்திருப்பது உள்ளபடியே பெருமைக்குரிய ஒன்றாக விளங்கிக் கொண்டிருக்கிறது.

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தைத்தான் நான் மிக மிக முக்கியமானதாகக் கருதுகிறேன். பார்வை குறைபாடுடைய மாற்றுத்திறனாளி மாணவர்கள் 94 பேரும், செவித்திறன், பேச்சுத்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளி மாணவர்கள் 200-க்கும் மேற்பட்டோரும் பயின்று வருகின்றனர்.

இவர்களுக்காக பி.காம், பி.சி.ஏ. ஆகிய பாடப்பிரிவுகள் இருக்கிறது. செவித்திறன், பேச்சுத்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான எம்.காம்., படிப்புக்கும், தமிழ்நாடு அரசு இப்போது அனுமதி வழங்கி இருக்கிறது. இந்தியாவில் இப்படி ஒரு வாய்ப்பு எந்த மாநிலத்திலும் கிடையாது. மாற்றுத்திறனாளிகளின் கல்விக்கு உதவுவதன் மூலமாக, மாநிலக் கல்லூரி மனித நேயக் கல்லூரியாகவும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. கல்லூரியாக இருந்தாலும், மாநிலக் கல்லூரி பல்கலைக்கழகம் போல இது செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

இந்த சிறப்புக்குரிய மாநிலக் கல்லூரியின் மேம்பாட்டுக்காக, 2000 பேர் அமரக்கூடிய வகையில், நம்முடைய முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பெயரால் மாபெரும் அரங்கம் மாநிலக் கல்லூரி வளாகத்தில் கட்டித் தரப்படும். சிற்றுண்டிச்சாலையை சீர்செய்ய நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறனையும், சட்டமன்ற உறுப்பினராகக்கூடிய உதயநிதியையும் நான் கேட்டுக் கொள்கிறேன். உங்களால் இயன்ற அளவு அந்த தொகுதி மேம்பாட்டு நிதியை அதற்கு நீங்கள் வழங்கிட வேண்டும்.

300-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி மாணவர்கள் இங்கே படிக்கின்றனர். தமிழ்நாட்டின் பல்வேறு ஊர்களில் இருந்து அவர்கள் இங்கே வந்து, தங்கிப் படித்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அவர்களுக்கென்று விடுதி கிடையாது. அவர்களுக்கான விடுதி, மாநிலக் கல்லூரி வளாகத்திலேயே அமைத்துத் தரப்படும்.

சமூகநீதி என்ற தத்துவமே பிள்ளைகளின் கல்விக்காகத் தான், இளைஞர்களின் வேலை வாய்ப்புக்காகத்தான் உருவாக்கப்பட்டது. இன்றைக்கு சாமானியர்களைக் கை தூக்கி விடும் சமூகநீதிக் கொள்கை எல்லா இடங்களிலும் செழித்து வரும் நிலையில், அந்த வாய்ப்பை மாணவர்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

பெண்கள் கல்வி கற்பது என்பது, வேலைக்குப் போவதோடு முடிந்து விடுவது இல்லை, பெண்களுக்குத் தன்னம்பிக்கை அளிப்பதாக, தைரியத்தை வழங்குவதாக கல்வி அமைகிறது. எனவே, பெண் பிள்ளைகள் நிச்சயமாக படிக்க வேண்டும், பட்டங்களைப் பெற வேண்டும். கலை, இலக்கியம், நாடகம், நாட்டியம், விளையாட்டு போன்றவற்றில் இருக்கக்கூடிய விருப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து விடுகின்றனர். அப்படி இல்லாமல் தங்களது விருப்பங்களை, அறிவாற்றலை வாழ்நாள் முழுக்கப் பயன்படுத்தக்கூடிய சூழலை தங்களுக்குத் தாங்களே உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் கல்வி பெற்றவர்களுடைய விழுக்காடு என்ன? இன்றைய விழுக்காடு என்ன என்பதைப் பார்த்தால்தான், திராவிட மாடல் என்றால் என்ன என்பது புரியும். இதைச் சொல்வதால், நான் அரசியல் பேசுவதாக யாரும் தயவுசெய்து தவறாகக் கருதிவிடக்கூடாது. எத்தகைய அறிவுச்சூழல் தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது.

கடந்த ஓராண்டு காலத்தில் பள்ளிக்கல்வித் துறை துள்ளி எழுந்திருக்கிறது. உயர்கல்வித்துறை புதிய உத்வேகத்தோடு நடைபோட்டுக் கொண்டிருக்கிறது. கடைக்கோடி மனிதரையும் கல்வி பெற வைத்து, உலகச் சமுதாயத்தின் போட்டிக் களத்தில் அவர்களையும் போட்டியாளர்களாக மாற்றும் ஆட்சிதான் இந்த ஆட்சி என பேசினார்.

இதையும் படிங்க: பொதுக் குழுவுக்கு தடையா?: ஓபிஎஸ் மனு நாளை விசாரணை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.