ETV Bharat / state

புகார் அளிக்க வந்த பெண்ணிடம் பணம் வாங்கித்தராத காவல் ஆய்வாளர்... துறை ரீதியான நடவடிக்கைக்கு உத்தரவு

author img

By

Published : Aug 16, 2022, 10:31 PM IST

புகார் அளிக்க வந்த பெண்ணிடம் பல லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்ட காவல்துறை உதவி ஆய்வாளர் மீது குற்றவியல் மற்றும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு அரசுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

புகார் அளிக்க வந்த பெண்ணிடம் நெருங்கிப் பழகிய ஆய்வாளர்...பல லட்சம் ரூபாய் மோசடி
புகார் அளிக்க வந்த பெண்ணிடம் நெருங்கிப் பழகிய ஆய்வாளர்...பல லட்சம் ரூபாய் மோசடி

சென்னை: சென்னையைச்சேர்ந்த பானுமதி என்பவர் கிண்டியில் உள்ள தொழில்நுட்ப கல்வி இயக்குநரகத்தில் உதவியாளராகப் பணியாற்றி வருகிறார். இவர் வழக்கு ஒன்றுக்காக எம்.ஜி.ஆர். நகர் காவல் நிலையம் சென்ற போது இவருக்கும், உதவி ஆய்வாளராக பணியாற்றிய வீரமணிக்கும் கடந்த 2010ஆம் ஆண்டு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, மகளின் திருமணசெலவுக்காக கடன் பெறுவதற்கு உத்தரவாதம் வேண்டும் எனக்கோரி பானுமதியிடம் வெற்றுத்தாள் மற்றும் வங்கி காசோலையில் கையெழுத்து பெற்று 35 லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளார், வீரமணி. மேலும் பானுமதியிடமிருந்து 13 சவரன் நகை மற்றும் பத்து லட்சம் ரூபாய் பணமும் தனியாக வாங்கியுள்ளார்.

கடன் பெற்ற உதவி ஆய்வாளர் வீரமணி, முறையாக திரும்ப செலுத்தாத நிலையில் பணத்தை திரும்ப அளிக்குமாறு பானுமதி, உதவி ஆய்வாளர் வீரமணியிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர், தற்போது பணம் இல்லை எனக் கூறியுள்ளார். அத்துடன் பணத்தை திருப்பிக்கேட்டால் பொய் வழக்குப்பதிவு செய்து சிறையில் தள்ளிவிடுதாக உதவி ஆய்வாளர் வீரமணி மிரட்டியுள்ளார்.

இந்நிலையில் அந்தப்பெண் சென்னை மாநகர காவல் ஆணையரகத்தில் புகார் அளிக்க, அப்புகாரனது தரமணி காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து பானுமதி தரமணி காவல் நிலையம் சென்று நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதற்குப் பதிலளித்த தரமணி காவல் நிலைய அப்போதைய காவல் ஆய்வாளர் தேவராஜ், காவலர் மீது நடவடிக்கை எடுக்க முடியாது எனவும், வேண்டுமானால் நீதிமன்றம் செல்லுமாறும் கூறியுள்ளார். இதனையடுத்து மனித உரிமை மீறலால் பாதிக்கப்பட்ட தமக்கு நிவாரணம் கோரி பானுமதி மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் புகாரளித்தார். விசாரணையின்போது தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை சம்பந்தப்பட்ட காவல் துறையினர் மறுத்தனர்.

இந்தப்புகாரை விசாரித்த மனித உரிமை ஆணைய உறுப்பினர் சித்தரஞ்சன் மோகன்தாஸ், இரண்டு காவல் துறை அலுவலர்கள் மீதான குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறி அவர்கள் இருவர் மீதும் துறை ரீதியான மற்றும் குற்றவியல் நடவடிக்கைகளை எடுக்குமாறு தமிழ்நாடு உள்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடாக 3 லட்சம் ரூபாய் வழங்க வேண்டுமெனவும், இந்த தொகையை உதவி ஆய்வாளர் வீரமணி மற்றும் ஆய்வாளர் தேவராஜிடம் வசூலிக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:அரும்பாக்கம் வங்கியில் கொள்ளையடித்த நகைகள் முழுவதுமாக மீட்பு

சென்னை: சென்னையைச்சேர்ந்த பானுமதி என்பவர் கிண்டியில் உள்ள தொழில்நுட்ப கல்வி இயக்குநரகத்தில் உதவியாளராகப் பணியாற்றி வருகிறார். இவர் வழக்கு ஒன்றுக்காக எம்.ஜி.ஆர். நகர் காவல் நிலையம் சென்ற போது இவருக்கும், உதவி ஆய்வாளராக பணியாற்றிய வீரமணிக்கும் கடந்த 2010ஆம் ஆண்டு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, மகளின் திருமணசெலவுக்காக கடன் பெறுவதற்கு உத்தரவாதம் வேண்டும் எனக்கோரி பானுமதியிடம் வெற்றுத்தாள் மற்றும் வங்கி காசோலையில் கையெழுத்து பெற்று 35 லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளார், வீரமணி. மேலும் பானுமதியிடமிருந்து 13 சவரன் நகை மற்றும் பத்து லட்சம் ரூபாய் பணமும் தனியாக வாங்கியுள்ளார்.

கடன் பெற்ற உதவி ஆய்வாளர் வீரமணி, முறையாக திரும்ப செலுத்தாத நிலையில் பணத்தை திரும்ப அளிக்குமாறு பானுமதி, உதவி ஆய்வாளர் வீரமணியிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர், தற்போது பணம் இல்லை எனக் கூறியுள்ளார். அத்துடன் பணத்தை திருப்பிக்கேட்டால் பொய் வழக்குப்பதிவு செய்து சிறையில் தள்ளிவிடுதாக உதவி ஆய்வாளர் வீரமணி மிரட்டியுள்ளார்.

இந்நிலையில் அந்தப்பெண் சென்னை மாநகர காவல் ஆணையரகத்தில் புகார் அளிக்க, அப்புகாரனது தரமணி காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து பானுமதி தரமணி காவல் நிலையம் சென்று நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதற்குப் பதிலளித்த தரமணி காவல் நிலைய அப்போதைய காவல் ஆய்வாளர் தேவராஜ், காவலர் மீது நடவடிக்கை எடுக்க முடியாது எனவும், வேண்டுமானால் நீதிமன்றம் செல்லுமாறும் கூறியுள்ளார். இதனையடுத்து மனித உரிமை மீறலால் பாதிக்கப்பட்ட தமக்கு நிவாரணம் கோரி பானுமதி மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் புகாரளித்தார். விசாரணையின்போது தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை சம்பந்தப்பட்ட காவல் துறையினர் மறுத்தனர்.

இந்தப்புகாரை விசாரித்த மனித உரிமை ஆணைய உறுப்பினர் சித்தரஞ்சன் மோகன்தாஸ், இரண்டு காவல் துறை அலுவலர்கள் மீதான குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறி அவர்கள் இருவர் மீதும் துறை ரீதியான மற்றும் குற்றவியல் நடவடிக்கைகளை எடுக்குமாறு தமிழ்நாடு உள்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடாக 3 லட்சம் ரூபாய் வழங்க வேண்டுமெனவும், இந்த தொகையை உதவி ஆய்வாளர் வீரமணி மற்றும் ஆய்வாளர் தேவராஜிடம் வசூலிக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:அரும்பாக்கம் வங்கியில் கொள்ளையடித்த நகைகள் முழுவதுமாக மீட்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.