ETV Bharat / state

சாமானிய மக்களுக்காக தொழில்நுட்பத்தை மேம்படுத்த வேண்டும் - வெங்கையா நாயுடு

author img

By

Published : Jun 30, 2021, 5:48 PM IST

Updated : Jun 30, 2021, 10:56 PM IST

"தொழில்நுட்பங்களை, ‘கருத்துருக்களின் ஆதாரமாக' மட்டுமே கருதக்கூடாது. தொழில்நுட்பத்தால் மனிதனின் துயரத்தைக் களைந்து, சாதாரண மனிதனின் வாழ்க்கையை சுமுகமானதாகவும் மாற்ற முடியும். எந்த ஒரு ஆராய்ச்சியின் இறுதி நோக்கமும் அதுதான்" என குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு
குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு

சென்னை: குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு நான்கு நாள் பயணமாக நேற்று (ஜூன்.29) சென்னை வந்தடைந்தார்.

தொடர்ந்து, இன்று (ஜூன்.30) சென்னை ஐஐடியில் நடந்த நிகழ்வில் கலந்துகொண்ட அவர், அங்கு உருவாக்கப்பட்டுள்ள இந்தியாவின் முதல் முப்பரிமாண அச்சு வீட்டைப் பார்வையிட்டார்.

குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு
சென்னை ஐஐடியில் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு

அதனைத் தொடர்ந்து பேசிய அவர், ”தீவிரவாதம், மனித சமூகத்தின் எதிரியாக செயல்படுகிறது. ராணுவ ரேடார்களால் கண்டறிய முடியாத வகையில், தாழ்வாகப் பறக்கும் ட்ரோன்களைக் கண்டு தீவிரவாதிகள் பயன்படுகின்றனர்.

தீவிரவாதம் சம்பந்தமான துறைகளிலும் இந்தியத் தொழில்நுட்பக் கழகங்கள் போன்ற நிறுவனங்கள் கவனம் செலுத்த வேண்டும். தீவிரவாதிகளின் தாக்குதல்களை முறியடிக்கும் வகையிலான தீர்வுகளை உருவாக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

சாதாரண மக்களுக்கும் தொழில்நுட்பம் எட்ட வேண்டும்’

தொடர்ந்து, இந்தியாவின் முதல் முப்பரிமாண அச்சு வீட்டுத் திட்டத்தை இணைந்து உருவாக்கிய சென்னை இந்திய தொழில்நுட்பக்கழகம் - த்வஸ்தா தயாரிப்புத் தீர்வுகள் குழுவினரின் முயற்சிகளை பாராட்டிய வெங்கையா நாயுடு, ”வணிகரீதியான நம்பகத்தன்மையை அடையவும், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை அதிகரிக்கவும், தொழில் துறை நிறுவனங்கள் இடையேயான கூட்டணி முக்கியப் பாங்காற்றுகிறது.

அதிநவீன தொழில்நுட்பங்கள், எதிர்காலத்தைப் பற்றிய ஒரு பார்வையை முன்வைக்கின்றன. சாமானிய மக்களும் அணுகும் வகையில் அவற்றை மேம்படுத்த வேண்டும். தொழில்நுட்பங்களை, ‘கருத்துருக்களின் ஆதாரமாக' மட்டுமே கருதக்கூடாது. தொழில்நுட்பத்தால் மனிதனின் துயரத்தைக் களைந்து, சாதாரண மனிதனின் வாழ்க்கையை சுமுகமானதாகவும் மாற்ற முடியும். எந்த ஒரு ஆராய்ச்சியின் இறுதி நோக்கமும் அதுதான்” என்றார்.

’ஆவாஸ் யோஜானா திட்டத்தை செயல்படுத்த உதவும்’

மேலும், “பாரம்பரிய உற்பத்தி நடைமுறைகளை மாற்றும் செயல்திறன் கொண்ட முப்பரிமாண அச்சு மற்றும் ரோபோடிக்ஸ் போன்ற திறன்மிகு தொழில்நுட்பங்களின் கலவையை உள்ளடக்கிய நான்காவது தொழில் புரட்சியின் சாதகமான பலன்களை இந்தத் திட்டம் வெளிப்படுத்துகிறது.

கட்டுமானப் பணியில் முப்பரிமாண அச்சுத் தொழில்நுட்பம், ஒருவரது விருப்பத்தைப் பூர்த்தி செய்யும் வகையிலான வடிவமைப்பை வழங்குவதோடு, மனித இடையீடுகளையும் குறைப்பதாகவும் உள்ளது. இந்தியாவில் வீடுகளின் பற்றாக்குறையை எதிர்கொள்ளவும், பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் குறைந்த செலவிலான வீடுகளைக் கட்டமைக்கும் லட்சியத்தை நிறைவேற்றவும், இது போன்ற மேலும் பல தொழில்நுட்பப் புதுமைகள் உருவாக்கப்பட வேண்டும்” என்றார்.

உயர்கல்வி நிறுவனங்களுக்கு அறிவுரை

உயர்கல்வி குறித்துப் பேசுகையில், ”இந்திய தொழில்நுட்பக் கழகங்கள் போன்ற முன்னணி நிறுவனங்கள், வளர்ந்து வரும் தொழில்நுட்ப சீர்திருத்தங்களை முன்கூட்டியே கண்டறிந்து புதிய வாய்ப்புகளை பயன்படுத்துவதற்கு நம் நாட்டை தயார்படுத்த வேண்டும். பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு முழுமையான அணுகுமுறையை மாணவர்களிடையே ஏற்படுத்தும் வகையில் வகுப்பறைத் திட்டங்களையும் கடந்து உயர்கல்வி நிறுவனங்கள் செயல்பட வேண்டும். இதன் மூலம் அவர்கள் வேலையை தேடுபவர்களாக மட்டுமல்லாமல், அதனை உருவாக்குபவர்களாகவும் மாறுவார்கள்” என்றார்.

குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு
குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு

நாட்டின் முன்னுரிமைகள் மற்றும் உள்ளூர் தேவைகளைக் கருத்தில் கொண்டு, நம் நாட்டில் தொழில்நுட்ப இடையீடுகளில் கவனம் செலுத்துவதற்கான துறைகளை இந்திய தொழில்நுட்பக் கழகங்கள் கண்டறிய வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

பாராட்டுக்குரிய சென்னை ஐஐடி’

”தனது அதிநவீன ஆராய்ச்சிப் பூங்காவின் வாயிலாக துடிப்பான புதிய நிறுவனங்களுக்கான சூழலியலை மேம்படுத்தி, புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் சென்னை ஐஐடியின் நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவை. தகவல் தொழில்நுட்பத் தீர்வுகளையும் கடந்து வேளாண் தொழில்நுட்பம், உற்பத்தி, போக்குவரத்து மற்றும் கட்டுமானம் உள்ளிட்ட துறைகளிலும் இந்திய புதிய நிறுவனங்கள் தடம் பதித்து வருகின்றன” எனப் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு வருவாய் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், சென்னை இந்திய தொழில்நுட்பக் கழக இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்தி, பல்வேறு துறைகளின் தலைவர்கள் த்வஸ்தா மேனுஃபேக்ச்சரிங் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் பிரதிநிதிகள் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: புதிய மின்திட்டங்கள் - மத்திய அமைச்சரவை ஒப்புதல்

சென்னை: குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு நான்கு நாள் பயணமாக நேற்று (ஜூன்.29) சென்னை வந்தடைந்தார்.

தொடர்ந்து, இன்று (ஜூன்.30) சென்னை ஐஐடியில் நடந்த நிகழ்வில் கலந்துகொண்ட அவர், அங்கு உருவாக்கப்பட்டுள்ள இந்தியாவின் முதல் முப்பரிமாண அச்சு வீட்டைப் பார்வையிட்டார்.

குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு
சென்னை ஐஐடியில் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு

அதனைத் தொடர்ந்து பேசிய அவர், ”தீவிரவாதம், மனித சமூகத்தின் எதிரியாக செயல்படுகிறது. ராணுவ ரேடார்களால் கண்டறிய முடியாத வகையில், தாழ்வாகப் பறக்கும் ட்ரோன்களைக் கண்டு தீவிரவாதிகள் பயன்படுகின்றனர்.

தீவிரவாதம் சம்பந்தமான துறைகளிலும் இந்தியத் தொழில்நுட்பக் கழகங்கள் போன்ற நிறுவனங்கள் கவனம் செலுத்த வேண்டும். தீவிரவாதிகளின் தாக்குதல்களை முறியடிக்கும் வகையிலான தீர்வுகளை உருவாக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

சாதாரண மக்களுக்கும் தொழில்நுட்பம் எட்ட வேண்டும்’

தொடர்ந்து, இந்தியாவின் முதல் முப்பரிமாண அச்சு வீட்டுத் திட்டத்தை இணைந்து உருவாக்கிய சென்னை இந்திய தொழில்நுட்பக்கழகம் - த்வஸ்தா தயாரிப்புத் தீர்வுகள் குழுவினரின் முயற்சிகளை பாராட்டிய வெங்கையா நாயுடு, ”வணிகரீதியான நம்பகத்தன்மையை அடையவும், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை அதிகரிக்கவும், தொழில் துறை நிறுவனங்கள் இடையேயான கூட்டணி முக்கியப் பாங்காற்றுகிறது.

அதிநவீன தொழில்நுட்பங்கள், எதிர்காலத்தைப் பற்றிய ஒரு பார்வையை முன்வைக்கின்றன. சாமானிய மக்களும் அணுகும் வகையில் அவற்றை மேம்படுத்த வேண்டும். தொழில்நுட்பங்களை, ‘கருத்துருக்களின் ஆதாரமாக' மட்டுமே கருதக்கூடாது. தொழில்நுட்பத்தால் மனிதனின் துயரத்தைக் களைந்து, சாதாரண மனிதனின் வாழ்க்கையை சுமுகமானதாகவும் மாற்ற முடியும். எந்த ஒரு ஆராய்ச்சியின் இறுதி நோக்கமும் அதுதான்” என்றார்.

’ஆவாஸ் யோஜானா திட்டத்தை செயல்படுத்த உதவும்’

மேலும், “பாரம்பரிய உற்பத்தி நடைமுறைகளை மாற்றும் செயல்திறன் கொண்ட முப்பரிமாண அச்சு மற்றும் ரோபோடிக்ஸ் போன்ற திறன்மிகு தொழில்நுட்பங்களின் கலவையை உள்ளடக்கிய நான்காவது தொழில் புரட்சியின் சாதகமான பலன்களை இந்தத் திட்டம் வெளிப்படுத்துகிறது.

கட்டுமானப் பணியில் முப்பரிமாண அச்சுத் தொழில்நுட்பம், ஒருவரது விருப்பத்தைப் பூர்த்தி செய்யும் வகையிலான வடிவமைப்பை வழங்குவதோடு, மனித இடையீடுகளையும் குறைப்பதாகவும் உள்ளது. இந்தியாவில் வீடுகளின் பற்றாக்குறையை எதிர்கொள்ளவும், பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் குறைந்த செலவிலான வீடுகளைக் கட்டமைக்கும் லட்சியத்தை நிறைவேற்றவும், இது போன்ற மேலும் பல தொழில்நுட்பப் புதுமைகள் உருவாக்கப்பட வேண்டும்” என்றார்.

உயர்கல்வி நிறுவனங்களுக்கு அறிவுரை

உயர்கல்வி குறித்துப் பேசுகையில், ”இந்திய தொழில்நுட்பக் கழகங்கள் போன்ற முன்னணி நிறுவனங்கள், வளர்ந்து வரும் தொழில்நுட்ப சீர்திருத்தங்களை முன்கூட்டியே கண்டறிந்து புதிய வாய்ப்புகளை பயன்படுத்துவதற்கு நம் நாட்டை தயார்படுத்த வேண்டும். பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு முழுமையான அணுகுமுறையை மாணவர்களிடையே ஏற்படுத்தும் வகையில் வகுப்பறைத் திட்டங்களையும் கடந்து உயர்கல்வி நிறுவனங்கள் செயல்பட வேண்டும். இதன் மூலம் அவர்கள் வேலையை தேடுபவர்களாக மட்டுமல்லாமல், அதனை உருவாக்குபவர்களாகவும் மாறுவார்கள்” என்றார்.

குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு
குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு

நாட்டின் முன்னுரிமைகள் மற்றும் உள்ளூர் தேவைகளைக் கருத்தில் கொண்டு, நம் நாட்டில் தொழில்நுட்ப இடையீடுகளில் கவனம் செலுத்துவதற்கான துறைகளை இந்திய தொழில்நுட்பக் கழகங்கள் கண்டறிய வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

பாராட்டுக்குரிய சென்னை ஐஐடி’

”தனது அதிநவீன ஆராய்ச்சிப் பூங்காவின் வாயிலாக துடிப்பான புதிய நிறுவனங்களுக்கான சூழலியலை மேம்படுத்தி, புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் சென்னை ஐஐடியின் நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவை. தகவல் தொழில்நுட்பத் தீர்வுகளையும் கடந்து வேளாண் தொழில்நுட்பம், உற்பத்தி, போக்குவரத்து மற்றும் கட்டுமானம் உள்ளிட்ட துறைகளிலும் இந்திய புதிய நிறுவனங்கள் தடம் பதித்து வருகின்றன” எனப் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு வருவாய் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், சென்னை இந்திய தொழில்நுட்பக் கழக இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்தி, பல்வேறு துறைகளின் தலைவர்கள் த்வஸ்தா மேனுஃபேக்ச்சரிங் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் பிரதிநிதிகள் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: புதிய மின்திட்டங்கள் - மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Last Updated : Jun 30, 2021, 10:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.