தமிழ்நாட்டில் நேற்று (ஜூலை 15) மேலும் 4 ஆயிரத்து 496 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 51 ஆயிரத்து 820ஆக அதிகரித்துள்ளது. கரோனாவுக்கு நேற்று 68 பேர் உயிரிழந்ததால், இறப்பு எண்ணிக்கை 2 ஆயிரத்து 167ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 5,000 பேர் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர். இதன்மூலம் தமிழ்நாட்டில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 02 ஆயிரத்து 310ஆக அதிகரித்துள்ளது.
சென்னையைத் தவிர்த்து பிற மாவட்டங்களில் நேற்று 3 ஆயிரத்து 205 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஆயிரத்து 291 பேருக்கு புதிதாக கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 80 ஆயிரத்து 961ஆக அதிகரித்துள்ளது.