ETV Bharat / state

மேகதாது அணைக்கு தமிழகம் ஒருபோதும் உடன்படாது - அமைச்சர் துரைமுருகன்

author img

By

Published : Jul 6, 2023, 9:41 AM IST

பேச்சுவார்த்தை நடத்தினாலும் சரி, எழுத்து மூலமாக தெரிவித்தாலும் சரி மேகதாது அணை கட்டுவதற்கு நாங்கள் ஒருபோதும் சம்மதிக்க மாட்டோம் என நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் டெல்லி பயணம் குறித்து பேச்சு
நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் டெல்லி பயணம் குறித்து பேச்சு
நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் டெல்லி பயணம் குறித்து பேச்சு

சென்னை: கர்நாடகா - தமிழ்நாடு இடையே பல ஆண்டுகால போராட்டமாக, காவிரி நீரைப் பங்கிடுவதில் பிரச்னை இருந்து வருகிறது. நீரை முறையாக பங்கிட்டு தர நடுவர் மன்றம் தீர்ப்பு வழங்கியும், அதற்கு உடன்படாத கர்நாடக அரசு, உச்ச நீதிமன்றத்தை நாடியது. தற்போது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையும் ஏற்காத அரசு, குறைவான அளவில் தமிழ்நாட்டிற்கு நீரை வழங்கி வருகிறது.

ஒவ்வொரு மாதமும் தமிழ்நாட்டிற்கு குறிப்பிட்ட அளவிலான டிஎம்சி தண்ணீரை கர்நாடக அரசு வழங்க வேண்டும். ஆனால், தற்போது ஜூன் மாதம் வழங்கப்பட வேண்டிய 10 டிஎம்சி தண்ணீரில் 4 டிஎம்சி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. நீர் குறைப்பு போதாது என காவிரி குறுக்கே 9 ஆயிரம் ரூபாய் செலவில் மேகதாது அணையைக் கட்டி, தமிழ்நாட்டிற்கு கிடைக்கும் தண்ணீரின் அளவை முழுவதுமாக குறைத்து பாலைவனமாக மாற்றும் முயற்சியிலும் கர்நாடகா ஈடுபட்டு வருகிறது.

எனவே, இதனைக் கண்டித்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், காவிரி மேலாண்மை வாரியத்தில் கர்நாடக அரசின் செயல் குறித்து புகார் தெரிவிக்கப் போவதாகவும், நியாயம் கேட்கப் போவதாகவும் டெல்லி சென்றார். அதனைத்தொடர்ந்து, நேற்று (ஜூலை 5) நள்ளிரவு டெல்லியில் இருந்து சென்னை விமான நிலையம் வந்தடைந்தார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் “பொதுவாக ஒவ்வொரு நாளும் தமிழ்நாட்டிற்கு கர்நாடகா தர வேண்டிய தண்ணீரின் அளவு குறைந்து கொண்டே வருகிறது. ஒரு நாளைக்கு ஒரு டிஎம்சி தண்ணீர் நமக்கு வர வேண்டும். இந்த மாதம் மூன்றாம் தேதி வரையிலும் 12.213 டி.எம்.சி தண்ணீர் நமக்கு கிடைத்திருக்க வேண்டும். ஆனால், அவர்கள் 2.993 டி.எம்.சி தண்ணீர்தான் கொடுத்துள்ளார்கள்.

அப்படி என்றால் நமக்கு 9.220 டி.எம்.சி தண்ணீர் பற்றாக்குறையாக இருந்திருக்கிறது. இந்த நிலை நீடித்தால் விவசாயம் முற்றிலுமாக பாதிக்கும். எனவே, டெல்டா மாவட்டம் பயிர்களை காப்பாற்ற வேண்டும் என்றால், கர்நாடகம் உடனடியாக தமிழ்நாட்டிற்கு தண்ணீரை திறந்து விட வேண்டும். இதுகுறித்து காவேரி மேலாண்மை ஆணையம் கர்நாடக அரசோடு பேச வேண்டும் அல்லது ஆணையிட வேண்டும்.

மத்திய அரசின் ஜல் சக்தி அமைச்சரிடம் நான் கேட்டுக் கொண்டேன். அவரும் உடனடியாக அதிகாரிகளை வரவழைத்து, அவர்களிடம் பேசி என்ன நிலைமை என்று என்னிடம் தெரிவிக்கின்றேன் என கூறினார். இது சாதாரண விஷயம் இல்லை. உயிர் பிரச்னை என்று அமைச்சரிடம் நான் தெரிவித்தேன். உச்ச நீதிமன்றத்தின் ஆணைப்படி தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய தண்ணீரை தராமல் இருப்பது சட்டப்படி குற்றம் என்று நான் தெரிவித்திருக்கிறேன்” என்றார்.

மேகதாது அணை கட்டுவது தொடர்பாக தமிழ்நாட்டிலும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என டி.கே.சிவக்குமார் கூறியிருப்பது தொடர்பான கேள்விக்கு, பேச்சுவார்த்தை நடத்தினாலும் சரி, எழுத்து மூலமாக தெரிவித்தாலும் சரி மேகதாது அணை கட்டுவதற்கு தமிழ்நாட்டில் ஒருபோதும் சம்மதிக்க மாட்டோம் என கூறினார்.

இதையும் படிங்க: அடுத்த டார்கெட் முதலமைச்சர்... அஜித் பவார் ஓபன் டாக்... சரத் பவார் ஓய்வு பெற அறிவுறுத்தல்!

நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் டெல்லி பயணம் குறித்து பேச்சு

சென்னை: கர்நாடகா - தமிழ்நாடு இடையே பல ஆண்டுகால போராட்டமாக, காவிரி நீரைப் பங்கிடுவதில் பிரச்னை இருந்து வருகிறது. நீரை முறையாக பங்கிட்டு தர நடுவர் மன்றம் தீர்ப்பு வழங்கியும், அதற்கு உடன்படாத கர்நாடக அரசு, உச்ச நீதிமன்றத்தை நாடியது. தற்போது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையும் ஏற்காத அரசு, குறைவான அளவில் தமிழ்நாட்டிற்கு நீரை வழங்கி வருகிறது.

ஒவ்வொரு மாதமும் தமிழ்நாட்டிற்கு குறிப்பிட்ட அளவிலான டிஎம்சி தண்ணீரை கர்நாடக அரசு வழங்க வேண்டும். ஆனால், தற்போது ஜூன் மாதம் வழங்கப்பட வேண்டிய 10 டிஎம்சி தண்ணீரில் 4 டிஎம்சி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. நீர் குறைப்பு போதாது என காவிரி குறுக்கே 9 ஆயிரம் ரூபாய் செலவில் மேகதாது அணையைக் கட்டி, தமிழ்நாட்டிற்கு கிடைக்கும் தண்ணீரின் அளவை முழுவதுமாக குறைத்து பாலைவனமாக மாற்றும் முயற்சியிலும் கர்நாடகா ஈடுபட்டு வருகிறது.

எனவே, இதனைக் கண்டித்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், காவிரி மேலாண்மை வாரியத்தில் கர்நாடக அரசின் செயல் குறித்து புகார் தெரிவிக்கப் போவதாகவும், நியாயம் கேட்கப் போவதாகவும் டெல்லி சென்றார். அதனைத்தொடர்ந்து, நேற்று (ஜூலை 5) நள்ளிரவு டெல்லியில் இருந்து சென்னை விமான நிலையம் வந்தடைந்தார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் “பொதுவாக ஒவ்வொரு நாளும் தமிழ்நாட்டிற்கு கர்நாடகா தர வேண்டிய தண்ணீரின் அளவு குறைந்து கொண்டே வருகிறது. ஒரு நாளைக்கு ஒரு டிஎம்சி தண்ணீர் நமக்கு வர வேண்டும். இந்த மாதம் மூன்றாம் தேதி வரையிலும் 12.213 டி.எம்.சி தண்ணீர் நமக்கு கிடைத்திருக்க வேண்டும். ஆனால், அவர்கள் 2.993 டி.எம்.சி தண்ணீர்தான் கொடுத்துள்ளார்கள்.

அப்படி என்றால் நமக்கு 9.220 டி.எம்.சி தண்ணீர் பற்றாக்குறையாக இருந்திருக்கிறது. இந்த நிலை நீடித்தால் விவசாயம் முற்றிலுமாக பாதிக்கும். எனவே, டெல்டா மாவட்டம் பயிர்களை காப்பாற்ற வேண்டும் என்றால், கர்நாடகம் உடனடியாக தமிழ்நாட்டிற்கு தண்ணீரை திறந்து விட வேண்டும். இதுகுறித்து காவேரி மேலாண்மை ஆணையம் கர்நாடக அரசோடு பேச வேண்டும் அல்லது ஆணையிட வேண்டும்.

மத்திய அரசின் ஜல் சக்தி அமைச்சரிடம் நான் கேட்டுக் கொண்டேன். அவரும் உடனடியாக அதிகாரிகளை வரவழைத்து, அவர்களிடம் பேசி என்ன நிலைமை என்று என்னிடம் தெரிவிக்கின்றேன் என கூறினார். இது சாதாரண விஷயம் இல்லை. உயிர் பிரச்னை என்று அமைச்சரிடம் நான் தெரிவித்தேன். உச்ச நீதிமன்றத்தின் ஆணைப்படி தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய தண்ணீரை தராமல் இருப்பது சட்டப்படி குற்றம் என்று நான் தெரிவித்திருக்கிறேன்” என்றார்.

மேகதாது அணை கட்டுவது தொடர்பாக தமிழ்நாட்டிலும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என டி.கே.சிவக்குமார் கூறியிருப்பது தொடர்பான கேள்விக்கு, பேச்சுவார்த்தை நடத்தினாலும் சரி, எழுத்து மூலமாக தெரிவித்தாலும் சரி மேகதாது அணை கட்டுவதற்கு தமிழ்நாட்டில் ஒருபோதும் சம்மதிக்க மாட்டோம் என கூறினார்.

இதையும் படிங்க: அடுத்த டார்கெட் முதலமைச்சர்... அஜித் பவார் ஓபன் டாக்... சரத் பவார் ஓய்வு பெற அறிவுறுத்தல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.