ETV Bharat / state

தமிழ்நாட்டுக்கு பேராபத்து! - எச்சரிக்கும் சித்தர்கள்

author img

By

Published : Dec 9, 2019, 6:44 PM IST

சென்னை: பெரிய கோயில் பேராபத்தை தடுக்க, சித்தர்நெறியில் தமிழ் வேதாகம முறையில் குடமுழுக்கு நடைபெற வேண்டும் என்று கருவூரார் சித்தர் வாரிசுகள் எச்சரித்துள்ளனர்.

hindhu vedha group press meet
hindhu vedha group press meet

இந்து வேத மறுமலர்ச்சி இயக்கத்தைச் சேர்ந்த சித்தர் கருவூரார் குருவழி வாரிசுகள் சென்னை சேப்பாக்கத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய அவர்கள், "தஞ்சை பெரிய கோவிலை கருவறை கோயிலாகவும் கருங்கல் கோயிலாகவும் கட்டியவர் சித்தர் கருவூரார். அவர்தான் ராஜராஜ சோழனுக்கு ஆணையிட்டவர்.

பூஜைகள், குடமுழுக்குகள் அனைத்தும் தமிழ் முறைப்படிதான் செய்ய வேண்டும் எனக் கருவூரார் அன்றே மன்னனுக்கு உத்தரவிட்டார். அது நடக்காததால் கருவூரார் சாபம் விட்டுவிட்டார். அதாவது, அரசாளுபவர்கள் யாரும் கோயிலுக்குள் சென்றால் அவர்களுக்கு ஆபத்துகள் வரும் எனச் சாபமிட்டார். எனவே முறையாக தமிழ் முறைப்படி குடமுழுக்கு செய்யப்படாவிட்டால் பேராபத்துகள் நிகழும்.

தஞ்சாவூர் பெரியகோயிலில் 1997ஆம் ஆண்டு நடைபெற்ற குடமுழுக்கின்போது யாகத்தீயில் விபத்து ஏற்பட்டு 48 பேர் மரணமடைந்தனர். அதன்பின் இரண்டே நாள்களில் எந்தவித முறையான பரிகாரமும் செய்யப்படாமல் அவசரகோலத்தில் குடமுழுக்கு நடத்தப்பட்டது மறக்க முடியாத வரலாறு.

அதன்பின் முறைப்படி குடமுழுக்கு நிகழ்த்தப்படாத நிலையில், இப்பொழுது 22 ஆண்டுகளுக்குப் பின் 05.02.2020 அன்று குடமுழுக்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அவ்வாறு நடத்தப்படுவது மக்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் பெருந்தீங்கு ஏற்படும். எனவே இதை மக்களின் கவனத்திற்கு எடுத்துச்செல்ல நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.

சித்தர் கருவூரார் குருவழி வாரிசுகள் செய்தியாளர் சந்திப்பு

மேலும், பரிகார பரிந்துரையாக இக்குடமுழுக்கின் யாகங்கள் அனைத்தும் சித்தர் நெறியின்படி செந்தமிழ் நெறியின் மூலம் மட்டுமே நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்துகிறோம். தமிழ்மொழியில் குடமுழுக்கு நடத்துவதற்கென்றே மந்திரங்கள் பல சித்தர்களால் கூறப்பட்டுள்ளன. சாதி, மொழி, இன, வேத பாகுபாடுகள் தமிழ் மொழியில் இல்லை என்பதால், சித்தர் கருவூரார் சாபம் நீங்க முறையான குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும் என அரசுக்கு கோரிக்கையாக வைத்து எச்சரிக்கிறோம்" என்று கூறினர்.

இதையும் படிங்க: நடுகல் கூறும் வரலாறு: திருச்சியில் நூல் வெளியீட்டு விழா!

இந்து வேத மறுமலர்ச்சி இயக்கத்தைச் சேர்ந்த சித்தர் கருவூரார் குருவழி வாரிசுகள் சென்னை சேப்பாக்கத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய அவர்கள், "தஞ்சை பெரிய கோவிலை கருவறை கோயிலாகவும் கருங்கல் கோயிலாகவும் கட்டியவர் சித்தர் கருவூரார். அவர்தான் ராஜராஜ சோழனுக்கு ஆணையிட்டவர்.

பூஜைகள், குடமுழுக்குகள் அனைத்தும் தமிழ் முறைப்படிதான் செய்ய வேண்டும் எனக் கருவூரார் அன்றே மன்னனுக்கு உத்தரவிட்டார். அது நடக்காததால் கருவூரார் சாபம் விட்டுவிட்டார். அதாவது, அரசாளுபவர்கள் யாரும் கோயிலுக்குள் சென்றால் அவர்களுக்கு ஆபத்துகள் வரும் எனச் சாபமிட்டார். எனவே முறையாக தமிழ் முறைப்படி குடமுழுக்கு செய்யப்படாவிட்டால் பேராபத்துகள் நிகழும்.

தஞ்சாவூர் பெரியகோயிலில் 1997ஆம் ஆண்டு நடைபெற்ற குடமுழுக்கின்போது யாகத்தீயில் விபத்து ஏற்பட்டு 48 பேர் மரணமடைந்தனர். அதன்பின் இரண்டே நாள்களில் எந்தவித முறையான பரிகாரமும் செய்யப்படாமல் அவசரகோலத்தில் குடமுழுக்கு நடத்தப்பட்டது மறக்க முடியாத வரலாறு.

அதன்பின் முறைப்படி குடமுழுக்கு நிகழ்த்தப்படாத நிலையில், இப்பொழுது 22 ஆண்டுகளுக்குப் பின் 05.02.2020 அன்று குடமுழுக்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அவ்வாறு நடத்தப்படுவது மக்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் பெருந்தீங்கு ஏற்படும். எனவே இதை மக்களின் கவனத்திற்கு எடுத்துச்செல்ல நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.

சித்தர் கருவூரார் குருவழி வாரிசுகள் செய்தியாளர் சந்திப்பு

மேலும், பரிகார பரிந்துரையாக இக்குடமுழுக்கின் யாகங்கள் அனைத்தும் சித்தர் நெறியின்படி செந்தமிழ் நெறியின் மூலம் மட்டுமே நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்துகிறோம். தமிழ்மொழியில் குடமுழுக்கு நடத்துவதற்கென்றே மந்திரங்கள் பல சித்தர்களால் கூறப்பட்டுள்ளன. சாதி, மொழி, இன, வேத பாகுபாடுகள் தமிழ் மொழியில் இல்லை என்பதால், சித்தர் கருவூரார் சாபம் நீங்க முறையான குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும் என அரசுக்கு கோரிக்கையாக வைத்து எச்சரிக்கிறோம்" என்று கூறினர்.

இதையும் படிங்க: நடுகல் கூறும் வரலாறு: திருச்சியில் நூல் வெளியீட்டு விழா!

Intro:Body:ச.சிந்தலைபெருமாள், செய்தியாளர்
சென்னை - 09.12.19

தஞ்சை பெரிய கோவில் பேராபத்தை தடுக்க, சித்தர்நெறியில் தமிழ் வேதாகம முறையில் குடமுழுக்கு நடைபெற வேண்டும்... எச்சரிக்கும் கருவூரார் சித்தர் வாரிசுகள்...!!

இந்து வேத மறுமலர்ச்சி இயக்கத்தை சேர்ந்தவர்கள், சித்தர் கருவூரார் குருவழி வாரிசுகள் சென்னை சேப்பாக்கத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது பேசிய அவர்கள்,

தஞ்சை பெரிய கோவிலை கருவறை கோவிலாகவும், கருங்கல் கோவிலாகவும் கட்டியவர் சித்தர் கருவூரார். அவர்தான் ராஜராஜ ழோழனுக்கு ஆணையிட்டவர். பூஜைகள் குடமுழுக்குகள் அனைத்தும் தமிழ் முறைப்படிதான் செய்ய வேண்டும் என கருவூரார் அன்றே மன்னனுக்கு உத்தரவிட்டார். அது நடக்காததால் கருவூரார் சாபம் விட்டுவிட்டார். அதாவது, அரசாளுபவர்கள் யாரும் கோவிலுக்குள் சென்றால் அவர்களுக்கு ஆபத்துக்கள் வரும் எனச் சாபமிட்டார். எனவே முறையாக தமிழ் முறைப்படி குடமுழுக்கு செய்யப்படாவிட்டால் பேரபத்துக்கள் நிகழும்,

தஞ்சாவூர் பெரியகோவிலில் கடந்த 1997ஆம் ஆண்டு நடைபெற்ற குடமுழுக்கின் போது யாகத்தீயில் விபத்து ஏற்பட்டு 48 பேர் மரணமடைந்தனர். அதன் பின் இரண்டே நாட்களில் எந்தவித முறையான பரிகாரமும் செய்யப்படாமல் அவசரகோலத்தில் குடமுழுக்கு நிகழ்த்தப்பட்டது மறக்க முடியாத வரலாறு. அதன்பின் முறைப்படி 12, 16, 18 வது ஆண்டுக்ளில் குடமுழுக்கு நிகழ்த்தப்படாத நிலையில், இப்பொழுது 22 ஆண்டுகளுக்குப் பின் எங்கள் குருதேவர் பன்னிரெண்டாவது பதினொன் சித்தர் மடாதிபதி கருவூரார் அவர்கள் அப்பொழுது வழங்கிய எச்சரிக்கையை ஏற்று தற்போது அப்பரிகார பூஜைகள் நடத்தாமல் சித்தர் நெரிக்கு மாறாக மேலும், மக்கள் மற்றும் ஆட்சியாளர்கள் நலனை மனதில் கொள்ளாமல் 05.02.2020 அன்று குடமுழுக்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அவ்வாறு நடத்தப்படுவது மக்களுக்கும், ஆட்சியாளர்களுக்கும் பெருந்தீங்கும், பேரிழப்பும் ஏற்படும் எனதை கருத்திக் கொண்டு, 1772 லிருந்து பாரம்பரியமாக இயங்கி வரும் இந்து வேத மறுமலர்ச்சி இயக்கம் சுட்டிக்காட்டி, இந்த அவசர அவசியக் குருவாணை பெற்ற பெருந்தீங்கு முன் எச்சரிக்கை திருவோலையை மக்களின் கவனத்திற்கு எடுத்துச்செல்ல கடமைப்ப்ட்டுள்ளோம்..

மேலும், பரிகார பரிந்துரையாக இக்குடமுழுக்கின் யாகங்கள் அனைத்தும் சித்தர் நெறியின்படி செந்தமிழ் நெறியின் மூலம் கோவிலின் வளாகத்தில் மட்டுமே நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்துகிறோம்..

யாகத் தீயின் மூலம் ஏற்பட்ட தீயில் 48 பேர் பலியாகியும், அதற்கான எந்தப் பரிகாரமும் செய்யாமல் முறையில்லாமல் குடமுழுக்கு தொடர்வதால் மட்டுமே பேராபத்து ஏற்படும் என முதல்வர் உள்ளிட்டோருக்கு தெரியப்படுத்தியுள்ளோம்..

தமிழ்மொழியில் குடமுழுக்கு நடத்துவதற்கென்றே மந்திரங்கள் பல சித்தர்களால் கூறப்பட்டுள்ளது. சாதி, மொழி, இன, வேத பாகுபாடுகள் தமிழ் மொழியில் இல்லை.. எனதால், சித்தர் கருவூரார் சாபம் நீங்க முறையான குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும் என அரசுக்கு கோரிக்கையாக வைத்து எச்சரிக்கிறோம் என்றனர்..

tn_che_01_demanding_tamil_procession_at_thanjur_big_temple_script_7204894

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.