ETV Bharat / state

ஆர்.எஸ்.எஸ் பேரணி அனுமதியை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு!

author img

By

Published : Feb 21, 2023, 1:17 PM IST

Updated : Feb 21, 2023, 1:33 PM IST

ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு அனுமதித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு மனுத் தாக்கல் செய்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்.
ஆர்.எஸ்.எஸ்.

சென்னை: தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு ஊர்வலம் நடத்த அனுமதி வழங்கிய சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து உள்ளது.

கோவை, நாகர்கோயில் உள்பட தமிழகத்தில் 50 இடங்களில் ஊர்வலம் நடத்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் திட்டமிட்டு இருந்தனர். இதற்கு காவல் துறையினர் தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டது. ஊர்வலம் செல்ல அனுமதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் மனுத் தாக்கல் செய்தனர்.

கோவை, பல்லடம், நாகர்கோயில் உள்ளிட்ட 6 இடங்களில் அணிவகுப்புக்கு அனுமதி மறுத்தும், இதர 44 இடங்களில் சுற்றுச் சுவருக்குள் அணிவகுப்பு நடத்தி கொள்ளவும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு அனுமதி வழங்கி சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி அமர்வு உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசரித்த நீதிபதிகள் மகாதேவன் மற்றும் சத்யநாராயண பிரசாத் அடங்கிய அமர்வு, கடும் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் பேரணியை நடத்த அனுமதிக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டனர்.

மேலும் அணிவகுப்பு நடத்துவது தொடர்பாக 3 தேதிகளை குறிப்பிட்டு, போலீசாரிடம் புதிய விண்ணப்பம் வழங்க வேண்டும் என்றும், அதில் ஒரு தேதியை தேர்வு செய்து போலீசார் அனுமதி வழங்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர். அதன்படி பிப்ரவரி 12, 19, அல்லது மார்ச் 5 ஆகிய தேதிகளில் ஏதாவது ஒரு நாளில் பேரணி நடத்த அனுமதி வழங்க வேண்டும் என ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சார்பில் கடந்த 11ஆம் தேதி போலீசாரிடம் மனு அளிக்கப்பட்டது.

ஊர்வலத்திற்கு போலீசார் அனுமதி வழங்காததால், தமிழக டிஜிபி சைலேந்திர பாபு மற்றும் ஆவடி காவல் ஆணையர் ஆகியோருக்கு நீதிமன்ற அவமதிப்பு எச்சரிக்கை நோட்டீஸ் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு சார்பில் அனுப்பப்பட்டது. மேலும் மார்ச் 5ஆம் தேதி ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கப்படாவிட்டல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர நேரிடும் என அமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஊர்வலத்திற்கு அனுமதி அளித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி அளித்தால் பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படும் என தமிழக அரசின் மனுவில் தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அதை ஏண்டா தொட்ட! விமானத்தின் எமர்ஜென்சி கதவை தொட்ட பொறியியல் மாணவர் மீது வழக்கு!

சென்னை: தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு ஊர்வலம் நடத்த அனுமதி வழங்கிய சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து உள்ளது.

கோவை, நாகர்கோயில் உள்பட தமிழகத்தில் 50 இடங்களில் ஊர்வலம் நடத்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் திட்டமிட்டு இருந்தனர். இதற்கு காவல் துறையினர் தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டது. ஊர்வலம் செல்ல அனுமதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் மனுத் தாக்கல் செய்தனர்.

கோவை, பல்லடம், நாகர்கோயில் உள்ளிட்ட 6 இடங்களில் அணிவகுப்புக்கு அனுமதி மறுத்தும், இதர 44 இடங்களில் சுற்றுச் சுவருக்குள் அணிவகுப்பு நடத்தி கொள்ளவும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு அனுமதி வழங்கி சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி அமர்வு உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசரித்த நீதிபதிகள் மகாதேவன் மற்றும் சத்யநாராயண பிரசாத் அடங்கிய அமர்வு, கடும் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் பேரணியை நடத்த அனுமதிக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டனர்.

மேலும் அணிவகுப்பு நடத்துவது தொடர்பாக 3 தேதிகளை குறிப்பிட்டு, போலீசாரிடம் புதிய விண்ணப்பம் வழங்க வேண்டும் என்றும், அதில் ஒரு தேதியை தேர்வு செய்து போலீசார் அனுமதி வழங்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர். அதன்படி பிப்ரவரி 12, 19, அல்லது மார்ச் 5 ஆகிய தேதிகளில் ஏதாவது ஒரு நாளில் பேரணி நடத்த அனுமதி வழங்க வேண்டும் என ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சார்பில் கடந்த 11ஆம் தேதி போலீசாரிடம் மனு அளிக்கப்பட்டது.

ஊர்வலத்திற்கு போலீசார் அனுமதி வழங்காததால், தமிழக டிஜிபி சைலேந்திர பாபு மற்றும் ஆவடி காவல் ஆணையர் ஆகியோருக்கு நீதிமன்ற அவமதிப்பு எச்சரிக்கை நோட்டீஸ் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு சார்பில் அனுப்பப்பட்டது. மேலும் மார்ச் 5ஆம் தேதி ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கப்படாவிட்டல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர நேரிடும் என அமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஊர்வலத்திற்கு அனுமதி அளித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி அளித்தால் பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படும் என தமிழக அரசின் மனுவில் தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அதை ஏண்டா தொட்ட! விமானத்தின் எமர்ஜென்சி கதவை தொட்ட பொறியியல் மாணவர் மீது வழக்கு!

Last Updated : Feb 21, 2023, 1:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.