ETV Bharat / state

தொழிலாளர்களுக்கு மே தின வாழ்த்து கூறிய ஸ்டாலின்! - திமுக

சென்னை: உரிமைகளை நினைவு கூறும் மே.1 தேதியன்று அனைத்து தொழிலாளர்களுக்கும் மே தின வாழ்த்து தெரிவித்து சார்பாக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ஸ்டாலின்
author img

By

Published : Apr 30, 2019, 6:37 PM IST

இதுதொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’ஆளுங்கட்சியோ, எதிர்க்கட்சியோ எப்போதும் தொழிலாளர்களின் தோளோடு தோள் நின்று துணைபுரியும் இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம். திமுக ஆட்சியில்தான் மே தினத்தன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை தினம் என்று அறிவிக்கப்பட்டது. கலைஞர் முதன் முதலில் முதலமைச்சராக இருந்த போது தொழிலாளர் நலனுக்கு தனியாக ஒரு அமைச்சகம் ஏற்படுத்தப்பட்டது. “நேப்பியர் பூங்கா” மே தினப் பூங்கா என்று பெயர் சூட்டப்பட்டது. இன்றும் அது தொழிலாளர்களின் நினைவுபோற்றும் சின்னமாகத் திகழ்கிறது.

புதிதாக மத்தியிலும் - மாநிலத்திலும் அமையப் போகும் ஆட்சியில் தொழிலாளர்களின் முன்னேற்றத்திற்கான திட்டங்களை நிறைவேற்றவும், கடந்த ஐந்தாண்டுகளில் பா.ஜ.க. அரசிடம் இழந்துவிட்ட உரிமைகளை மீட்கவும் திராவிட முன்னேற்றக் கழகம் சபதமேற்றுள்ளது. தொழிலாளர்களின் வாழ்வில் இன்பம் பொங்கிடவும், மகிழ்ச்சி தவழ்ந்திடவும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மே தின வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்’ என கூறப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’ஆளுங்கட்சியோ, எதிர்க்கட்சியோ எப்போதும் தொழிலாளர்களின் தோளோடு தோள் நின்று துணைபுரியும் இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம். திமுக ஆட்சியில்தான் மே தினத்தன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை தினம் என்று அறிவிக்கப்பட்டது. கலைஞர் முதன் முதலில் முதலமைச்சராக இருந்த போது தொழிலாளர் நலனுக்கு தனியாக ஒரு அமைச்சகம் ஏற்படுத்தப்பட்டது. “நேப்பியர் பூங்கா” மே தினப் பூங்கா என்று பெயர் சூட்டப்பட்டது. இன்றும் அது தொழிலாளர்களின் நினைவுபோற்றும் சின்னமாகத் திகழ்கிறது.

புதிதாக மத்தியிலும் - மாநிலத்திலும் அமையப் போகும் ஆட்சியில் தொழிலாளர்களின் முன்னேற்றத்திற்கான திட்டங்களை நிறைவேற்றவும், கடந்த ஐந்தாண்டுகளில் பா.ஜ.க. அரசிடம் இழந்துவிட்ட உரிமைகளை மீட்கவும் திராவிட முன்னேற்றக் கழகம் சபதமேற்றுள்ளது. தொழிலாளர்களின் வாழ்வில் இன்பம் பொங்கிடவும், மகிழ்ச்சி தவழ்ந்திடவும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மே தின வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்’ என கூறப்பட்டுள்ளது.

 திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள மே தின வாழ்த்து செய்தி

உரிமைகளை நினைவு கூறும் மே 1-ஆம் தேதியன்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அனைத்துத் தொழிலாளர்களுக்கும், இதயம்நிறைந்த மே தின வாழ்த்துக்களைத்தெரிவித்துக் கொள்கிறேன்.  

தலைவர் கலைஞர் அவர்களும், திராவிடமுன்னேற்றக் கழகமும் எப்போதும்தொழிலாளர்களின் உற்ற தோழர்கள்என்பதையும் -அந்த தொழிலாளர்களின்வாழ்வாதாரத்தை ஒளிமயமாக்கிடஎண்ணற்ற நலத்திட்டங்களைநிறைவேற்றிக் கொடுத்த ஆட்சி திராவிடமுன்னேற்றக் கழக ஆட்சி என்பதையும் ஒட்டுமொத்த தொழிலாளர் வர்க்கமும் நன்குஅறிந்திருக்கும் சாதனைகளாகும்.

ஆளுங்கட்சியோ,எதிர்க்கட்சியோ எப்போதும்தொழிலாளர்களின் தோளோடு தோள்நின்று துணைபுரியும் இயக்கம் திராவிடமுன்னேற்றக் கழகம். உழைக்கும்தொழிலாளர்கள் தங்களின்உரிமைக்குரலை எழுப்பும் முன்பே ஓடோடிவந்து அவர்களுக்கு உரிமை வழங்கிமகிழ்வித்தவர் மட்டுமல்ல- மாநிலம்முன்னேறுவதற்கு ஏற்ற “தொழில்அமைதியை” ஏற்படுத்திக் கொடுத்தவர்தலைவர் கலைஞர். தொழிலார்களுக்குகழகம் நிறைவேற்றிய திட்டங்கள் பல. கழகஆட்சியில்தான் மே தினத்தன்றுஊதியத்துடன் கூடிய விடுமுறை தினம்என்று அறிவிக்கப்பட்டது. தலைவர் கலைஞர்அவர்கள் முதன் முதலில் முதலமைச்சராகஇருந்த போதுதான் தொழிலாளர்நலனுக்காக தனியாக ஒரு அமைச்சகம்தோற்றுவிக்கப்பட்டது. “நேப்பியர் பூங்கா”மே தினப் பூங்கா என்று பெயர் சூட்டப்பட்டது.இன்றும் அது தொழிலாளர்களின் நினைவுபோற்றும் சின்னமாகத் திகழ்கிறது.தொழிலாளர்களுக்கு 20 சதவீத போனஸ்;ஊக்கத் தொகை அளித்தது; விவசாயத்தொழிலாளர் நல வாரியம் உள்ளிட்ட 31அமைப்பு சாராத் தொழிலாளர்வாரியங்களை உருவாக்கி,தொழிலாளர்களுக்கு பல்வேறுநலத்திட்டங்களையும், உயிர் காக்கும்மருத்துவத் திட்டங்களையும் வழங்கியதுகழக அரசுதான்.

தொழிலாளர்களின்முன்னேற்றத்திற்காகவும், அவர்களின்நலன் காக்கவும் பல்வேறு முத்தானவாக்குறுதிகளை இந்த முறைநாடாளுமன்றத் தேர்தலுக்கான திராவிடமுன்னேற்றக் கழகத்தின் தேர்தல்அறிக்கையில் வெளியிட்டுள்ளது.தொழிலாளர்களின் போர்வாளாகவும்கேடயமாகவும்  எப்போதும் திராவிடமுன்னேற்றக் கழகம் திகழும் என்பதை இந்தநேரத்தில் சுட்டிக்காட்டி, புதிதாக மத்தியிலும்-மாநிலத்திலும் அமையப் போகும் ஆட்சியில்தொழிலாளர்களின் முன்னேற்றத்திற்கானதிட்டங்களை நிறைவேற்றவும்- கடந்தஐந்தாண்டுகளில் பா.ஜ.க. அரசிடம் இழந்துவிட்ட உரிமைகளை மீட்கவும் திராவிடமுன்னேற்றக்கழகம் சபதமேற்றுள்ளதுஎன்று தெரிவித்து, தொழிலாளர்களின்வாழ்வில் இன்பம் பொங்கிடவும், மகிழ்ச்சிதவழ்ந்திடவும் திராவிட முன்னேற்றக்கழகத்தின் சார்பில் மீண்டும் மே தினவாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.