ETV Bharat / state

விளையாட்டு பிரிவு ஒதுக்கீடு: அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது - உயர்நீதிமன்றம்!

author img

By

Published : Jun 1, 2023, 3:12 PM IST

தமிழ்நாட்டில் உயர்கல்வி மாணவர் சேர்க்கையில், விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டை அதிகரிப்பது, அரசின் கொள்கை முடிவு என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

High court
உயர்நீதிமன்றம்

சென்னை: சேலம் மாவட்ட இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், "தமிழ்நாட்டில் பல பள்ளி மாணவர்கள் விளையாட்டை தங்களது வாழ்க்கையாக தேர்ந்தெடுத்து பள்ளியில் இருந்தே பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் அவ்வாறு இருக்கக் கூடிய மாணவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த கூடிய வகையில் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட மேற்படிப்புகளில் உரிய இடஒதுக்கீடு வழங்கப்படுவதில்லை.

தற்போது மருத்துவப் படிப்பில் 7 இடங்களும், மூன்று ஆண்டுகள் சட்டப்படிப்பில் 6 இடங்களும், ஐந்து ஆண்டுகள் சட்டப்படிப்பில் 7 இடங்களும் ஒதுக்கப்படுகின்றன. பல ஆண்டுகளுக்கு முன் இந்த இடஒதுக்கீடு வழங்கப்பட்ட நிலையில், தற்போது மாணவர் சேர்க்கை எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதற்கு ஏற்ப விளையாட்டு பிரிவில் இட ஒதுக்கீட்டு எண்ணிக்கையை அதிகரிக்க உத்தரவிட வேண்டும்" என வலியுறுத்தப்பட்டிருந்தது.

இந்த மனு இன்று (ஜூன் 1) தலைமை நீதிபதி எஸ்.வி. கங்கா பூர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு பிளீடர் முத்துக்குமார் வாதாடுகையில், "விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கு கலை மற்றும் அறிவியல், பொறியியல் உள்ளிட்ட பிரிவுகளில் 3 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. மனுதாரரின் கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு பதிலளிக்கப்பட்டு விட்டது" என கூறினார்.

வாதங்களை கேட்ட நீதிபதிகள், "விளையாட்டு வீரர்களுக்கு உயர் கல்வியில் இட ஒதுக்கீட்டை அதிகரிப்பது என்பது அரசின் கொள்கை முடிவு. இந்த விவகாரத்தில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியாது" என குறிப்பிட்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: சாலை விபத்தில் தம்பதி உடல் நசுங்கி பலி.. ராணிப்பேட்டையில் நிகழ்ந்த சோகம்

சென்னை: சேலம் மாவட்ட இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், "தமிழ்நாட்டில் பல பள்ளி மாணவர்கள் விளையாட்டை தங்களது வாழ்க்கையாக தேர்ந்தெடுத்து பள்ளியில் இருந்தே பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் அவ்வாறு இருக்கக் கூடிய மாணவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த கூடிய வகையில் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட மேற்படிப்புகளில் உரிய இடஒதுக்கீடு வழங்கப்படுவதில்லை.

தற்போது மருத்துவப் படிப்பில் 7 இடங்களும், மூன்று ஆண்டுகள் சட்டப்படிப்பில் 6 இடங்களும், ஐந்து ஆண்டுகள் சட்டப்படிப்பில் 7 இடங்களும் ஒதுக்கப்படுகின்றன. பல ஆண்டுகளுக்கு முன் இந்த இடஒதுக்கீடு வழங்கப்பட்ட நிலையில், தற்போது மாணவர் சேர்க்கை எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதற்கு ஏற்ப விளையாட்டு பிரிவில் இட ஒதுக்கீட்டு எண்ணிக்கையை அதிகரிக்க உத்தரவிட வேண்டும்" என வலியுறுத்தப்பட்டிருந்தது.

இந்த மனு இன்று (ஜூன் 1) தலைமை நீதிபதி எஸ்.வி. கங்கா பூர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு பிளீடர் முத்துக்குமார் வாதாடுகையில், "விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கு கலை மற்றும் அறிவியல், பொறியியல் உள்ளிட்ட பிரிவுகளில் 3 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. மனுதாரரின் கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு பதிலளிக்கப்பட்டு விட்டது" என கூறினார்.

வாதங்களை கேட்ட நீதிபதிகள், "விளையாட்டு வீரர்களுக்கு உயர் கல்வியில் இட ஒதுக்கீட்டை அதிகரிப்பது என்பது அரசின் கொள்கை முடிவு. இந்த விவகாரத்தில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியாது" என குறிப்பிட்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: சாலை விபத்தில் தம்பதி உடல் நசுங்கி பலி.. ராணிப்பேட்டையில் நிகழ்ந்த சோகம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.