ETV Bharat / state

சுகாதார தூதுவர்களாக களமிறங்கிய மாணவர்கள்- சென்னை மாநகராட்சி அதிரடி - சுகாதார தூதுவர்களாக மாணவர்கள் நியமனம்

சென்னை: தொற்று நோய் தடுப்புக் குறித்த விழிப்புணர்வில் சுகாதார தூதுவர்களாக அசத்தும் அரசுப் பள்ளி மாணவர்கள். அதுபற்றிய ஒரு சிறப்பு செய்தித் தொகுப்பு...

chennai students
author img

By

Published : Nov 17, 2019, 2:28 AM IST

பொதுவாகவே குழந்தைகளும், சிறுவர்களும் எந்தவொரு செயலைச் செய்யும்போதும் அதில், நேர்த்தியைவிட கவனத்தை ஈர்ப்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். பசிக்காக குழந்தை அழுவதில் தொடங்கும் இந்தவித கவனஈர்ப்பு யுத்திகளை, அப்பருவத்தை கடந்த நாம் மறந்துபோயிருந்தாலும், சென்னை மாநகராட்சி நிர்வாகம் இதனை மறந்திருக்கவில்லை.

சுகாதார தூதுவர்களாக அசத்தும் மாணவர்கள்

எனவேதான், தொற்று நோய்த் தடுப்புக் குறித்த விழிப்புணர்வை மாணவர்கள் மூலம் செய்தால், மக்களிடம் எளிதாக எடுத்துச்செல்ல முடியும் என சென்னை மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்படி பொதுமக்கள், தங்களின் வீடுகளையும், தெருக்களையும் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துக்கொண்டால் டெங்கு மற்றும் தொற்று நோய்களிலிருந்து தற்காத்துக்கொள்ள முடியும் என்பதை அரசுப்பள்ளி மாணவ, மாணவிகளை சுகாதார தூதுவர்களாக நியமித்து, அவர்கள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

’சுத்தமான சென்னை - சுகாதாரமான சென்னை’ என்ற விழிப்புணர்வு பரப்புரையை சென்னை மாநகராட்சியின் பள்ளி மாணவர்களை சுகாதாரத் தூதுவர்களாக முன்னிறுத்தும் பன்முக ஊடகப் பரப்புரை சென்னை மாநகர பகுதிகளில் முழுமையாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக, அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, "ஒவ்வொரு பள்ளியிலும் 25 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியை என்ற விகிதத்தில் குழுக்கள் அமைக்கப்பட்டு, சுமார் 20 ஆயிரம் பள்ளி மாணவர்கள் சுகாதாரத் தூதுவர்களாக நியமிக்கப்படுவார்கள். இதன் மூலம், காய்ச்சல் தடுப்பு, தொற்று நோய் ஒழிப்பு மற்றும் குடியிருப்புகள், பொது இடங்களை தூய்மையாக பராமரித்தல் குறித்த விழிப்புணர்வு மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்படும்" என்று தெரிவித்தார்.

முதலில் தங்கள் வீட்டை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துக்கொள்ள அவர்களின் பெற்றோருக்கு அறிவுறுத்தும் இந்த மாணவத் தூதுவர்கள், அதனைத்தொடர்ந்து, தாங்கள் வசிக்கும் பகுதிகளை சுத்தமாக வைத்துக்கொள்ளவும், நோய்த் தொற்றுகளிலிருந்து காத்துக்கொள்ளவும், பொதுமக்களிடம் தங்கள் ஆசிரியையின் உதவியுடன் இந்த விழிப்புணர்வை பள்ளி நாட்களுக்கு பாதிப்பின்றி செயல்படுத்தி வருகின்றனர்.

சுகாதாரத்தை மேம்படுத்த பல்வேறு வழிகளில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் மாநகராட்சி நிர்வாகம், பள்ளி மாணவர்கள் மூலம் தொடங்கியுள்ள இந்த விழிப்புணர்வு பரப்புரை, பொதுமக்களுக்கு சுகாதாரத்தை எப்படிப் பேண வேண்டும் என்கிற பொறுப்புணர்வை ஏற்படுத்தும் என்பதை முழுமையாக நம்பலாம்.

பொதுவாகவே குழந்தைகளும், சிறுவர்களும் எந்தவொரு செயலைச் செய்யும்போதும் அதில், நேர்த்தியைவிட கவனத்தை ஈர்ப்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். பசிக்காக குழந்தை அழுவதில் தொடங்கும் இந்தவித கவனஈர்ப்பு யுத்திகளை, அப்பருவத்தை கடந்த நாம் மறந்துபோயிருந்தாலும், சென்னை மாநகராட்சி நிர்வாகம் இதனை மறந்திருக்கவில்லை.

சுகாதார தூதுவர்களாக அசத்தும் மாணவர்கள்

எனவேதான், தொற்று நோய்த் தடுப்புக் குறித்த விழிப்புணர்வை மாணவர்கள் மூலம் செய்தால், மக்களிடம் எளிதாக எடுத்துச்செல்ல முடியும் என சென்னை மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்படி பொதுமக்கள், தங்களின் வீடுகளையும், தெருக்களையும் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துக்கொண்டால் டெங்கு மற்றும் தொற்று நோய்களிலிருந்து தற்காத்துக்கொள்ள முடியும் என்பதை அரசுப்பள்ளி மாணவ, மாணவிகளை சுகாதார தூதுவர்களாக நியமித்து, அவர்கள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

’சுத்தமான சென்னை - சுகாதாரமான சென்னை’ என்ற விழிப்புணர்வு பரப்புரையை சென்னை மாநகராட்சியின் பள்ளி மாணவர்களை சுகாதாரத் தூதுவர்களாக முன்னிறுத்தும் பன்முக ஊடகப் பரப்புரை சென்னை மாநகர பகுதிகளில் முழுமையாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக, அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, "ஒவ்வொரு பள்ளியிலும் 25 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியை என்ற விகிதத்தில் குழுக்கள் அமைக்கப்பட்டு, சுமார் 20 ஆயிரம் பள்ளி மாணவர்கள் சுகாதாரத் தூதுவர்களாக நியமிக்கப்படுவார்கள். இதன் மூலம், காய்ச்சல் தடுப்பு, தொற்று நோய் ஒழிப்பு மற்றும் குடியிருப்புகள், பொது இடங்களை தூய்மையாக பராமரித்தல் குறித்த விழிப்புணர்வு மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்படும்" என்று தெரிவித்தார்.

முதலில் தங்கள் வீட்டை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துக்கொள்ள அவர்களின் பெற்றோருக்கு அறிவுறுத்தும் இந்த மாணவத் தூதுவர்கள், அதனைத்தொடர்ந்து, தாங்கள் வசிக்கும் பகுதிகளை சுத்தமாக வைத்துக்கொள்ளவும், நோய்த் தொற்றுகளிலிருந்து காத்துக்கொள்ளவும், பொதுமக்களிடம் தங்கள் ஆசிரியையின் உதவியுடன் இந்த விழிப்புணர்வை பள்ளி நாட்களுக்கு பாதிப்பின்றி செயல்படுத்தி வருகின்றனர்.

சுகாதாரத்தை மேம்படுத்த பல்வேறு வழிகளில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் மாநகராட்சி நிர்வாகம், பள்ளி மாணவர்கள் மூலம் தொடங்கியுள்ள இந்த விழிப்புணர்வு பரப்புரை, பொதுமக்களுக்கு சுகாதாரத்தை எப்படிப் பேண வேண்டும் என்கிற பொறுப்புணர்வை ஏற்படுத்தும் என்பதை முழுமையாக நம்பலாம்.

Intro:Body:ச.சிந்தலைபெருமாள், செய்தியாளர்
சென்னை - 14.11.19

தொற்று நோய் தடுப்பு விழிப்புணர்வில் சுகாதார தூதவர்களாக அசத்தும் அரசுப் பள்ளி மாணவர்கள்.. சிறப்பு செய்தித் தொகுப்பு..

பொதுவாகவே சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் மூலமாக எந்தவொரு விசயத்தையும் மக்கள் மத்தியில் எளிதாக எடுத்துச் செல்ல முடியும் எனக் கருதிய சென்னை மாநகராட்சி நிர்வாகம், பொதுமக்கள் தங்களின் வீடுகளையும், அவர்கள் வசிக்கும் தெருக்களையும் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துக்கொண்டால் டெங்கு மற்றும் இன்னபிற தொற்று நோய்களிலிருந்து தங்களை காத்துக்கொள்ள முடியும் என்பதை அவர்களுக்கு விளக்க அரசுப் பள்ளி மாணவ, மாணவியரை சுகாதார தூதவர்களாக நியமித்து அவர்கள் மூலம் சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.
சுத்தமான சென்னை -சுகாதாரமான சென்னை என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தை முன்னெடுக்கும் வகையில் சென்னை மாநகராட்சியின் பள்ளி மாணவ சுகாதார தூதவர்களை முன்னிறுத்தும் பன்முக ஊடகப் பிரச்சாரம் சென்னை மாநகர பகுதிகளில் முழுமையாக செயல்படுத்தபட்டு வருகிறது.
இது தொடர்பாக அன்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணியும் பள்ளி மாணவர்கள் மூலம் பொதுமக்கள் மத்தியில் சுகாதார விழிப்புணர்வு செய்யப்படும் போது அவை எளிதில் மக்களை சென்று சேறும் என்று கூறியுள்ளார். ஒவ்வொரு பள்ளியிலும் 25 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியை என்ற விகிதத்தில் குழுக்கள் அமைக்கப்பட்டு சுமார் 20 ஆயிரம் பள்ளி மாணவ சுகாதார தூதவர்கள் மூலம் அனைத்து வீதிகள் வழியாக சென்று காய்ச்சல் தடுப்பு, தொற்று நோய் ஒழிப்பு மற்றும் குடியிருப்புகள், பொது இடங்களை தூய்மையாக பராமரித்தல் குறித்த விழிப்புணர்வு மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்படுகிறது.

இந்த மாணவர்களுக்கு முதலில் அவர்களின் வீட்டை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துக்கொள்ள அவர்களின் பெற்றோருக்கு அறிவுறுத்தும் இவர்கள், அதனை தொடர்ந்து தாங்கள் வசிக்கும் தெருக்களை சுத்தமாக வைத்து நோய் தொற்றுக்களை தவிர்க்கவும் பொதுமக்கள் மத்தியில் தங்கள் பள்ளியின் சுகாதார குழு மேற்பார்வையாளர் எனக் கருதப்படும் ஆசிரியை உதவியுடன் பள்ளி நாட்களுக்கு பாதிப்பின்றி பொது இடங்களில் இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை செயல்படுத்தி வருகின்றனர்..

சுகாதாரத்தை மேம்படுத்த பல்வேறு வழிகளில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் மாநகராட்சி நிர்வாகம், பள்ளி மாணவர்கள் மூலம் செயல்பாடுத்தத் துவங்கியுள்ள இந்த விழிப்புணர்வு பிராசாரம் பொதுமக்களுக்கு மட்டுமல்லாமல் அவர்களின் எதிர்காலத்திலும் சுகாதாரத்தை எப்படிப் பேண வேண்டும் என்கிற பொறுப்புணர்வினை ஏற்படுத்தும் என நம்பலாம்...

tn_che_01_special_story_of_students_as_sanitary_ambassadors_script_7204894Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.