ETV Bharat / state

சென்னை விமான நிலையத்தில் அரிய வகை விலங்குகள் பறிமுதல்

author img

By

Published : May 17, 2022, 9:03 AM IST

சென்னை விமான நிலையத்திற்கு தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்ட அரிய வகை வெள்ளை முள்ளம்பன்றி மற்றும் டாமரின் குரங்கு ஆகியவற்றை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்த அரியவகை முள்ளம்பன்றி, குரங்கு பறிமுதல் செய்தனர்
தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்த அரியவகை முள்ளம்பன்றி, குரங்கு பறிமுதல் செய்தனர்

சென்னை: தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில் இருந்து தாய் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் மே 15 ஆம் தேதி நள்ளிரவு சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளையும், அவர்கள் உடமைகளையும் சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது சென்னையை சேர்ந்த ஆண் பயணியின் உடமைகளை சுங்க அதிகாரிகள் பரிசோதித்தனர். அவரின் கூடைக்குள் வெள்ளை நிற முள்ளம்பன்றி, மற்றும் டாமரின் மங்கி எனப்படும் வெளிநாட்டு குரங்கு குட்டியையும் வைத்திருந்தார். இதையடுத்து அதிர்ச்சி அடைந்த சுங்க அதிகாரிகள் அவரை நிறுத்தி விசாரணை நடத்தினர்.

அப்போது அவர், இதைத் தான் வளர்ப்பதற்காக வாங்கி வருவதாக கூறினார். ஆனால் அவரிடம் அதற்கான முறையான ஆவணங்கள் இல்லை. மேலும் இதே போன்று வெளிநாட்டிலிருந்து வனவிலங்கு போன்ற உயிரினங்களை வாங்கி வரும்போது, அவர்கள் முறையாக சர்வதேச வன விலங்குப் பாதுகாப்பு துறையிடம் தெரிவித்து, இந்திய வனவிலங்குப் பாதுகாப்புத் துறைக்கும் தெரிவித்து அனுமதி பெற வேண்டும்.

அந்த உயிரினங்களில் நோய்க்கிருமிகள் எதுவும் இல்லை என்ற மருத்துவப் பரிசோதனை சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். ஆனால், அவரிடம் அவைகள் எதுவும் இல்லை. இதையடுத்து சுங்க அதிகாரிகள் உயிரினங்களான வெள்ளை முள்ளம் பன்றியையும், குரங்கு குட்டியையும் பறிமுதல் செய்தனர்.

அத்தோடு சென்னையில் உள்ள மத்திய வனவிலங்கு பாதுகாப்பு குற்றப்பிரிவுக்கும் தகவல் கொடுத்தனர். முறையான மருத்துவப் பரிசோதனை இல்லாமல் வந்துள்ளதால் இந்த விலங்குகள் மூலம் வெளிநாட்டு நோய்க்கிருமிகள், நம் நாட்டு விலங்குகளுக்கு பரவினால் ஏதும் ஆபத்து நேரிடலாம்.

இதை மீண்டும் தாய்லாந்து நாட்டுக்கே திருப்பி அனுப்புவது சரியாக இருக்கும் என்று அலுவலர்கள் முடிவெடுத்துள்ளனர். எனவே திருப்பி அனுப்புவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்த வன விலங்குகளை கடத்தி வந்தவரை சுங்க அதிகாரிகளும், மத்திய வனஉயிரினப் பாதுகாப்பு குற்றப்பிரிவு அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:குரங்குகளின் அட்டகாசம் - சுற்றுலாப் பயணிகள் அவதி!

சென்னை: தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில் இருந்து தாய் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் மே 15 ஆம் தேதி நள்ளிரவு சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளையும், அவர்கள் உடமைகளையும் சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது சென்னையை சேர்ந்த ஆண் பயணியின் உடமைகளை சுங்க அதிகாரிகள் பரிசோதித்தனர். அவரின் கூடைக்குள் வெள்ளை நிற முள்ளம்பன்றி, மற்றும் டாமரின் மங்கி எனப்படும் வெளிநாட்டு குரங்கு குட்டியையும் வைத்திருந்தார். இதையடுத்து அதிர்ச்சி அடைந்த சுங்க அதிகாரிகள் அவரை நிறுத்தி விசாரணை நடத்தினர்.

அப்போது அவர், இதைத் தான் வளர்ப்பதற்காக வாங்கி வருவதாக கூறினார். ஆனால் அவரிடம் அதற்கான முறையான ஆவணங்கள் இல்லை. மேலும் இதே போன்று வெளிநாட்டிலிருந்து வனவிலங்கு போன்ற உயிரினங்களை வாங்கி வரும்போது, அவர்கள் முறையாக சர்வதேச வன விலங்குப் பாதுகாப்பு துறையிடம் தெரிவித்து, இந்திய வனவிலங்குப் பாதுகாப்புத் துறைக்கும் தெரிவித்து அனுமதி பெற வேண்டும்.

அந்த உயிரினங்களில் நோய்க்கிருமிகள் எதுவும் இல்லை என்ற மருத்துவப் பரிசோதனை சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். ஆனால், அவரிடம் அவைகள் எதுவும் இல்லை. இதையடுத்து சுங்க அதிகாரிகள் உயிரினங்களான வெள்ளை முள்ளம் பன்றியையும், குரங்கு குட்டியையும் பறிமுதல் செய்தனர்.

அத்தோடு சென்னையில் உள்ள மத்திய வனவிலங்கு பாதுகாப்பு குற்றப்பிரிவுக்கும் தகவல் கொடுத்தனர். முறையான மருத்துவப் பரிசோதனை இல்லாமல் வந்துள்ளதால் இந்த விலங்குகள் மூலம் வெளிநாட்டு நோய்க்கிருமிகள், நம் நாட்டு விலங்குகளுக்கு பரவினால் ஏதும் ஆபத்து நேரிடலாம்.

இதை மீண்டும் தாய்லாந்து நாட்டுக்கே திருப்பி அனுப்புவது சரியாக இருக்கும் என்று அலுவலர்கள் முடிவெடுத்துள்ளனர். எனவே திருப்பி அனுப்புவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்த வன விலங்குகளை கடத்தி வந்தவரை சுங்க அதிகாரிகளும், மத்திய வனஉயிரினப் பாதுகாப்பு குற்றப்பிரிவு அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:குரங்குகளின் அட்டகாசம் - சுற்றுலாப் பயணிகள் அவதி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.