இது குறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாடு முழுவதும் மத்திய தேர்வாணையத்தால் நடத்தப்படும் அஞ்சல் துறைத்தேர்வுகள் தமிழ் உள்பட 15 மாநில மொழிகளில் நடத்தப்பட்டு வந்தது. தற்போது அஞ்சலகக் கணக்கர் பணியிடங்களுக்கான தேர்வுகள் இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
கடந்த 2016 - 17 ஆம் ஆண்டுக்கான அஞ்சல் துறைத் தேர்வில் மோசடி தொடர்பாக மத்தியப் புலனாய்வு விசாரணை நடைபெற்றது. பின்னர் நீதிமன்றம் உத்தரவுப்படி தேர்வுகள் மாநில மொழிகளில் நடைபெறும் என மத்திய அரசு நாடாளுமன்றத்தில் உறுதியளித்தது. ஆனால் அந்த உறுதிமொழி காற்றில் பறக்கவிட்டது மத்திய அரசு.
கேந்திரிய வித்தியாலயா பள்ளிகளில் தமிழைக் கற்க நிபந்தனை எனத் தமிழ்மொழியை இழிவுபடுத்தும் மத்திய அரசின் செயல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
முழுக்க முழுக்க மத்திய அரசுப் பணிகளிலிருந்து தமிழர்களை வடிகட்டி பார்க்கிறது.
ஒரு கோடிக்கும் மேற்பட்ட தமிழக இளைஞர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர். இப்போக்கு இனியும் தொடருமானால் மிகப்பெரும் எதிர்விளைவுகளை மத்திய அரசு எதிர்கொள்ள நேரிடும்" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: எல்லாத்திற்கும் தலையை ஆட்டிக்கொண்டிருக்காமல் வேளாண் சட்டங்களை முதலமைச்சர் எதிர்க்க வேண்டும்'- சீமான்