ETV Bharat / state

மாணவியை கிண்டல் செய்த மாணவர் மீது தாக்குதல்

author img

By

Published : May 20, 2022, 7:02 AM IST

ஆவடியில் பள்ளி மாணவியை கேலி செய்ததாக கூறி மாணவர் ஒருவரை கும்பல் தாக்கிய சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மாணவரை தாக்கிய சக மாணவர்கள்
மாணவரை தாக்கிய சக மாணவர்கள்

சென்னை: சோராசேரி பஜனை கோயில் தெருவைச் சேர்ந்த சிபி அரசன் என்ற மாணவன் ஆவடி காமராஜ் நகரில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இங்கு பொதுத் தேர்வு எழுத கோணம்பேடு அரசுப் பள்ளியைச் சேர்ந்த சுமார் 15-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் வந்துள்ளனர். அப்போது, கோணம்பேடு பள்ளியைச் சேர்ந்த மாணவிகளை காமராஜர் நகர் அரசினர் பள்ளி மாணவர்கள் கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது.

இதனை அம்மாணவிகள் சக மாணவர்களிடம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் பத்தாம் வகுப்பு ஆங்கில தேர்வு முடித்துவிட்டு பள்ளி வாசலில் நின்று கொண்டிருந்த மாணவர் சிபி அரசனை, அதே பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மற்றும் உள்ளூரைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோர் சரமாரியாக தாக்கினர். இதனை தடுக்க சென்ற சிலரையும் அந்த கும்பல் கடுமையாக தாக்கியது.

மாணவரை தாக்கிய சக மாணவர்கள்

இதில் சிபி அரசனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மயக்கமடைந்ததார். இதனைத் தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக ஆவடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக அங்கிருந்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு மருத்துவர்கள் அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆவடி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

சிபி அரசனிடம் விசாரித்தபோது தாம் யாரையும் கேலி செய்யவில்லை எனவும் மாணவர்கள் குழுவாக செல்லும்போது யாரோ ஒருவர் செய்ததற்கு தன்னை தவறாக தாக்கியதாக தெரிவித்தார். இந்த சம்பவத்தை அங்கிருந்தவர்கள் தங்களது செல்போனில் வீடியோ எடுத்தனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: 'பேத்தியை காதலிக்காதே...' கண்டித்த தாத்தா படுகொலை!

சென்னை: சோராசேரி பஜனை கோயில் தெருவைச் சேர்ந்த சிபி அரசன் என்ற மாணவன் ஆவடி காமராஜ் நகரில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இங்கு பொதுத் தேர்வு எழுத கோணம்பேடு அரசுப் பள்ளியைச் சேர்ந்த சுமார் 15-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் வந்துள்ளனர். அப்போது, கோணம்பேடு பள்ளியைச் சேர்ந்த மாணவிகளை காமராஜர் நகர் அரசினர் பள்ளி மாணவர்கள் கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது.

இதனை அம்மாணவிகள் சக மாணவர்களிடம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் பத்தாம் வகுப்பு ஆங்கில தேர்வு முடித்துவிட்டு பள்ளி வாசலில் நின்று கொண்டிருந்த மாணவர் சிபி அரசனை, அதே பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மற்றும் உள்ளூரைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோர் சரமாரியாக தாக்கினர். இதனை தடுக்க சென்ற சிலரையும் அந்த கும்பல் கடுமையாக தாக்கியது.

மாணவரை தாக்கிய சக மாணவர்கள்

இதில் சிபி அரசனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மயக்கமடைந்ததார். இதனைத் தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக ஆவடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக அங்கிருந்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு மருத்துவர்கள் அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆவடி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

சிபி அரசனிடம் விசாரித்தபோது தாம் யாரையும் கேலி செய்யவில்லை எனவும் மாணவர்கள் குழுவாக செல்லும்போது யாரோ ஒருவர் செய்ததற்கு தன்னை தவறாக தாக்கியதாக தெரிவித்தார். இந்த சம்பவத்தை அங்கிருந்தவர்கள் தங்களது செல்போனில் வீடியோ எடுத்தனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: 'பேத்தியை காதலிக்காதே...' கண்டித்த தாத்தா படுகொலை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.