ETV Bharat / state

ஈசிஆரில் லாரி மோதியதில் பணியில் இருந்த பெண் தூய்மை பணியாளர் பலி!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 9, 2023, 1:46 PM IST

Sanitary Worker killed by accident: சென்னை திருவான்மியூரில் தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த பெண் பணியாளர் மீது லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

உயிரிழந்த பெண்
உயிரிழந்த பெண்

சென்னை: துரைப்பாக்கம் கண்ணகி நகரை சேர்ந்த சிவகாமி, தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார். இன்று அதிகாலை வழக்கம் போல் திருவான்மியூர் RTO அலுவலகம் அருகே, ECR பிரதான சாலையில் தூய்மை பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். இந்நிலையில் தனியார் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் மவுலிவாக்கம், திருவள்ளுவர் நகரை சேர்ந்த அஷ்வந்த் என்பவர், பணி முடித்துவிட்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது, தூய்மை பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த சிவகாமியின் மீது அஷ்வந்த் கார் மோதியதில், சிவகாமி நிலை தடுமாறி எதிரே உள்ள சாலையில் விழுந்தார். அப்போது அடையாளம் தெரியாத கனரக லாரி ஒன்று, சிவகாமியின் மீது ஏறி இறங்கியது. இந்த விபத்தில் சிவகாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்துக் குறித்து அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவான்மியூர் போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனை அடுத்து, சிவகாமியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து உள்ளனர். இதனைத் தொடர்ந்து இந்த விபத்துக் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கார் ஓட்டுநர் அஸ்வந்திடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அஸ்வந்தின் காரை பறிமுதல் செய்த போலீசார், விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுனரை தேடி வருகின்றனர்.

மேலும் இந்த விபத்து நிகழ்ந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவின் காட்சிப் பதிவுகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். தூய்மை பணியில் ஈடுபட்டு இருந்த பணியாளர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: தாம்பரத்தில் பிடிபட்ட உள்ளாடை திருடன்.. பல்லாவரத்தில் சிக்கிய செருப்பு திருடன்.. சென்னை குற்றச் செய்திகள்!

சென்னை: துரைப்பாக்கம் கண்ணகி நகரை சேர்ந்த சிவகாமி, தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார். இன்று அதிகாலை வழக்கம் போல் திருவான்மியூர் RTO அலுவலகம் அருகே, ECR பிரதான சாலையில் தூய்மை பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். இந்நிலையில் தனியார் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் மவுலிவாக்கம், திருவள்ளுவர் நகரை சேர்ந்த அஷ்வந்த் என்பவர், பணி முடித்துவிட்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது, தூய்மை பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த சிவகாமியின் மீது அஷ்வந்த் கார் மோதியதில், சிவகாமி நிலை தடுமாறி எதிரே உள்ள சாலையில் விழுந்தார். அப்போது அடையாளம் தெரியாத கனரக லாரி ஒன்று, சிவகாமியின் மீது ஏறி இறங்கியது. இந்த விபத்தில் சிவகாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்துக் குறித்து அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவான்மியூர் போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனை அடுத்து, சிவகாமியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து உள்ளனர். இதனைத் தொடர்ந்து இந்த விபத்துக் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கார் ஓட்டுநர் அஸ்வந்திடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அஸ்வந்தின் காரை பறிமுதல் செய்த போலீசார், விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுனரை தேடி வருகின்றனர்.

மேலும் இந்த விபத்து நிகழ்ந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவின் காட்சிப் பதிவுகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். தூய்மை பணியில் ஈடுபட்டு இருந்த பணியாளர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: தாம்பரத்தில் பிடிபட்ட உள்ளாடை திருடன்.. பல்லாவரத்தில் சிக்கிய செருப்பு திருடன்.. சென்னை குற்றச் செய்திகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.