துபாயிலிருந்து ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் மீட்பு விமானம் இன்று (டிச.19) காலை சென்னை சர்வதேச விமான நிலைத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்கத்துறை அலுவலர்கள் சோதணையிட்டனர்.
அப்போது சந்தேகத்திற்கு இடமான முறையில் வந்த ஐந்து பேரை தடுத்தி நிறுத்திய அலுவலர்கள் அவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் ராமநாதபுரத்தைச் சேர்ந்த நோபர் (28), அகமது அலி (31), காஞ்சிபுரத்தைச் சேர்ந்த நந்தகுமார் (23), சென்னையைச் சேர்ந்த முருகானந்தம் மோகன் (38), புதுக்கோட்டையைச் சேர்ந்த சதாம் உசேன் (25) என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர்களை சோதணை செய்தபோது உள்ளாடைகள், பேண்ட் பாக்கெட்களில் மறைத்து வைத்திருந்த தங்கக் கட்டிகள், தங்க பேஸ்ட்களை கைப்பற்றினர். அதோடு அவர்களில் காஞ்சிபுரம், சென்னையைச் சேர்ந்த இரண்டு பயணிகள் தங்கக்கட்டிகளை தங்களுடைய கால்களின் அடி பாதங்களில் மறைத்து வைத்து பேண்ட்டெய்ட் போட்டு ஒட்டியிருந்தனர்.
பின்னர், அவர்களிடமிருந்த 87 லட்சத்து 6 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 1.7 கிலோ எடைகொண்ட தங்கத்தை பறிமுதல் செய்த அலுவலர்கள், அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: விமான நிலையத்தில் ரூ.49 லட்சம் மதிப்பிலான தங்கம் கடத்தல்!