ETV Bharat / state

முடிச்சூரில் தேங்கிய மழை நீரால் பொதுமக்கள் கடும் அவதி!

முடிச்சூரில் தேங்கிய மழை நீரால் பொது மக்கள் கடும் அவதிப்படுகின்றனர். மழைநீரில் மறைந்திருக்கும் பள்ளங்களால் பொதுமக்கள் தடுமாறி விழும் சம்பவங்களும் நடக்கின்றன.

author img

By

Published : Oct 6, 2022, 7:26 PM IST

முடிச்சூரில் தேங்கிய மழை நீரால் பொதுமக்கள் கடும் அவதி...
முடிச்சூரில் தேங்கிய மழை நீரால் பொதுமக்கள் கடும் அவதி...

சென்னை புறநகர் பகுதிகளில் காலையில் பெய்த மழையால் தாம்பரம் அடுத்த முடிச்சூர் ஊராட்சிக்கு உட்பட்ட லட்சுமி நகர் முதல் தெருவில் சாலைகளில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது. இப்பகுதிகளில் மழைநீர் வடிகால் அமைப்பதற்காக பள்ளங்கள் தோண்டப்பட்டிருந்தன.

பள்ளங்கள் தோண்டப்பட்டு பணிகள் கிடப்பில் போடப்பட்டதால், இந்தப் பள்ளங்கள் மற்றும் சாலைகள் முழுவதும் மழைநீர் தேங்கி இருந்தது. இதனால் பள்ளம் இருக்கும் இடம்தெரியாமல் பொதுமக்கள் தடுக்கி, தடுமாறி விழுந்தனர். மேலும் வாகனங்களில் பயணித்தவர்களும் ஆபத்தான மழைநீர் மூடிய பள்ளங்களைக் கடந்து சென்றனர்.

தன் வீட்டில் இருந்து வெளியே வரும் பெண் ஒருவர் மழைநீர் மூடிய வடிகாலுக்கு தோண்டப்பட்ட பள்ளத்தில் விழும் காட்சி அங்குள்ள சிசிடிவியில் பதிவாகி இருந்தது. தற்போது அந்தக் காணொலி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

முடிச்சூர் ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

முடிச்சூரில் தேங்கிய மழை நீரால் பொதுமக்கள் கடும் அவதி...

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு...

சென்னை புறநகர் பகுதிகளில் காலையில் பெய்த மழையால் தாம்பரம் அடுத்த முடிச்சூர் ஊராட்சிக்கு உட்பட்ட லட்சுமி நகர் முதல் தெருவில் சாலைகளில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது. இப்பகுதிகளில் மழைநீர் வடிகால் அமைப்பதற்காக பள்ளங்கள் தோண்டப்பட்டிருந்தன.

பள்ளங்கள் தோண்டப்பட்டு பணிகள் கிடப்பில் போடப்பட்டதால், இந்தப் பள்ளங்கள் மற்றும் சாலைகள் முழுவதும் மழைநீர் தேங்கி இருந்தது. இதனால் பள்ளம் இருக்கும் இடம்தெரியாமல் பொதுமக்கள் தடுக்கி, தடுமாறி விழுந்தனர். மேலும் வாகனங்களில் பயணித்தவர்களும் ஆபத்தான மழைநீர் மூடிய பள்ளங்களைக் கடந்து சென்றனர்.

தன் வீட்டில் இருந்து வெளியே வரும் பெண் ஒருவர் மழைநீர் மூடிய வடிகாலுக்கு தோண்டப்பட்ட பள்ளத்தில் விழும் காட்சி அங்குள்ள சிசிடிவியில் பதிவாகி இருந்தது. தற்போது அந்தக் காணொலி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

முடிச்சூர் ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

முடிச்சூரில் தேங்கிய மழை நீரால் பொதுமக்கள் கடும் அவதி...

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.