ETV Bharat / state

Chennai rain red alert: நவ. 18 ஆம் தேதி சென்னைக்கு ரெட் அலர்ட்!

author img

By

Published : Nov 16, 2021, 2:37 PM IST

சென்னையில் நவம்பர் 18 ஆம் தேதி அதி கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதால் வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நவ. 18 ஆம் தேதி சென்னைக்கு ரெட் அலர்ட்
நவ. 18 ஆம் தேதி சென்னைக்கு ரெட் அலர்ட்

சென்னை: நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆய்வு மையத்தில் சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் புவியரசன் இன்று (நவ.16) செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த இரண்டு நாள்களில் மேற்கு திசையில் நகர்ந்து வரும் 18ஆம் தேதி தெற்கு ஆந்திரா - வட தமிழக கடற்கரை நோக்கி நகரக்கூடும்.

இதன் காரணமாக இன்று கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, தர்மபுரி, அரியலூர், பெரம்பலூர், கடலூர், தஞ்சாவூர், திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நவ. 18 ஆம் தேதி சென்னைக்கு ரெட் அலர்ட்

நாளை (நவ.17) மழை

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, சேலம், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

நவம்பர் 18 மழை

திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும். செங்கல்பட்டு, திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கள்ளக்குறிச்சி, கடலூர் மற்றும் புதுவை பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் பெய்யும். டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

நவம்பர் 19 மழை

அரியலூர், பெரம்பலூர், திருச்சி, சேலம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

நவம்பர் 20 மழை

திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை

அடுத்த 24 மணி நேரத்திற்கு நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். அந்தமான் கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக வருகின்ற 18ஆம் தேதி சென்னையில் ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை: வங்கக் கடல் பகுதிகள்

இன்று (நவ.16) : தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

நவ.17, 18 : மத்திய மேற்கு, தென்மேற்கு வங்க கடல், தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழக கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
அரபிக் கடல் பகுதிகள்

இன்று (நவ.16) : மத்திய கிழக்கு, தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் மற்றும் கர்நாடக கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மதுரையில் மழைப்பதிவு குறைவு

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 1 முதல் தற்போது வரை இயல்பாக கிடைக்கும் அளவு 29% ஆனால் தற்போது 44% அளவு மழைப் பொழிவு கிடைத்துள்ளது. இது இயல்பை விட 54% அதிகம்.

சென்னையை பொறுத்தவரை அக்டோபர் 1 முதல் தற்போது வரை 49% மழைப் பொழிவு இருக்க வேண்டும். ஆனால் தற்போது வரை 82% கிடைத்துள்ளது. இது இயல்பான அளவை விட 67% அதிகமாகும். விருதுநகர் மாவட்டத்தில் 27% மழைப்பொழிவு வேண்டும், 24 சதவீதம் மட்டுமே மழைப்பதிவாகி உள்ளது. மேலும் மதுரை மாவட்டத்திலும் குறைந்த அளவு மழைப்பதிவாகி உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு

மதுக்கூர், செட்டிகுளம் தலா 10 செ.மீ, திருத்துறைப்பூண்டி, லக்கூர் ) தலா 7 செ.மீ, கிராண்ட் அணை, மணலூர்பேட்டை தலா 6 செ.மீ, சிவகங்கை, கள்ளிக்குடி, கிருஷ்ணகிரி, தென்பரநாடு, புதுக்கோட்டை, வீரகனூர், திருப்புவனம், சிற்றார், லால்குடி திருச்சி, திருக்காட்டுப்பள்ளி, மணம்பூண்டி, சிவலோகம் தலா 5 செ.மீ, மருங்காபுரி, ஆலங்குடி, விராலிமலை, சங்கராபுரம் , மலையூர் , பேச்சிப்பாறை, திருவையாறு , பெருஞ்சாணி அணை, திருச்சி, வெட்டிக்காடு தலா 4 செ.மீ, வேப்பூர், பெருங்களூர், திண்டுக்கல் , காரைக்குடி, திருமானூர் , துறையூர் , காமாட்சிபுரம், பட்டுக்கோட்டை , சேலம், சுருளக்கோடு, ஓமலூர் , சமயபுரம் , தொழுதூர் , பாலவிடுதி , பழனி, அரிமளம், மஞ்சளாறு தலா 3 செ.மீ மழை பெய்துள்ளது.

இதையும் படிங்க: Cauvery Delta Crop Damage: ஸ்டாலினிடம் அறிக்கை சமர்ப்பித்த அமைச்சர் குழு

சென்னை: நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆய்வு மையத்தில் சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் புவியரசன் இன்று (நவ.16) செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த இரண்டு நாள்களில் மேற்கு திசையில் நகர்ந்து வரும் 18ஆம் தேதி தெற்கு ஆந்திரா - வட தமிழக கடற்கரை நோக்கி நகரக்கூடும்.

இதன் காரணமாக இன்று கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, தர்மபுரி, அரியலூர், பெரம்பலூர், கடலூர், தஞ்சாவூர், திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நவ. 18 ஆம் தேதி சென்னைக்கு ரெட் அலர்ட்

நாளை (நவ.17) மழை

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, சேலம், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

நவம்பர் 18 மழை

திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும். செங்கல்பட்டு, திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கள்ளக்குறிச்சி, கடலூர் மற்றும் புதுவை பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் பெய்யும். டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

நவம்பர் 19 மழை

அரியலூர், பெரம்பலூர், திருச்சி, சேலம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

நவம்பர் 20 மழை

திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை

அடுத்த 24 மணி நேரத்திற்கு நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். அந்தமான் கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக வருகின்ற 18ஆம் தேதி சென்னையில் ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை: வங்கக் கடல் பகுதிகள்

இன்று (நவ.16) : தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

நவ.17, 18 : மத்திய மேற்கு, தென்மேற்கு வங்க கடல், தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழக கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
அரபிக் கடல் பகுதிகள்

இன்று (நவ.16) : மத்திய கிழக்கு, தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் மற்றும் கர்நாடக கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மதுரையில் மழைப்பதிவு குறைவு

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 1 முதல் தற்போது வரை இயல்பாக கிடைக்கும் அளவு 29% ஆனால் தற்போது 44% அளவு மழைப் பொழிவு கிடைத்துள்ளது. இது இயல்பை விட 54% அதிகம்.

சென்னையை பொறுத்தவரை அக்டோபர் 1 முதல் தற்போது வரை 49% மழைப் பொழிவு இருக்க வேண்டும். ஆனால் தற்போது வரை 82% கிடைத்துள்ளது. இது இயல்பான அளவை விட 67% அதிகமாகும். விருதுநகர் மாவட்டத்தில் 27% மழைப்பொழிவு வேண்டும், 24 சதவீதம் மட்டுமே மழைப்பதிவாகி உள்ளது. மேலும் மதுரை மாவட்டத்திலும் குறைந்த அளவு மழைப்பதிவாகி உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு

மதுக்கூர், செட்டிகுளம் தலா 10 செ.மீ, திருத்துறைப்பூண்டி, லக்கூர் ) தலா 7 செ.மீ, கிராண்ட் அணை, மணலூர்பேட்டை தலா 6 செ.மீ, சிவகங்கை, கள்ளிக்குடி, கிருஷ்ணகிரி, தென்பரநாடு, புதுக்கோட்டை, வீரகனூர், திருப்புவனம், சிற்றார், லால்குடி திருச்சி, திருக்காட்டுப்பள்ளி, மணம்பூண்டி, சிவலோகம் தலா 5 செ.மீ, மருங்காபுரி, ஆலங்குடி, விராலிமலை, சங்கராபுரம் , மலையூர் , பேச்சிப்பாறை, திருவையாறு , பெருஞ்சாணி அணை, திருச்சி, வெட்டிக்காடு தலா 4 செ.மீ, வேப்பூர், பெருங்களூர், திண்டுக்கல் , காரைக்குடி, திருமானூர் , துறையூர் , காமாட்சிபுரம், பட்டுக்கோட்டை , சேலம், சுருளக்கோடு, ஓமலூர் , சமயபுரம் , தொழுதூர் , பாலவிடுதி , பழனி, அரிமளம், மஞ்சளாறு தலா 3 செ.மீ மழை பெய்துள்ளது.

இதையும் படிங்க: Cauvery Delta Crop Damage: ஸ்டாலினிடம் அறிக்கை சமர்ப்பித்த அமைச்சர் குழு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.