ETV Bharat / state

'மின்னிணைப்பில் ஆர்.சி.டி. சாதனம் நிறுவ வேண்டும்'

author img

By

Published : Dec 2, 2022, 6:39 AM IST

மனித உயிர் பாதுகாப்பின் அடிப்படை தேவையான ஆர்.சி.டி சாதனத்தை அவரவர் மின்னிணைப்பில் நிறுவ வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Residual Current Device
Residual Current Device

சென்னை: தமிழ்நாட்டில் மின்பழுது மற்றும் மின்கசிவினால் மின்விபத்துகள் ஏற்படுகிறது. இதனால், உண்டாகும் மனித உயிரிழப்புகளை தடுக்க, தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம், மின்சாரப் பகிர்மான விதித் தொகுப்பு 16(2A)ன் படி புதிய வழியை தேர்ந்தெடுத்துள்ளது.

அதன்படி, புதிய மின்னிணைப்பு பெறுபவர்கள் ஆர்சிடி (RCD) என்றழைக்கக்கூடிய ரெசிடுயல் கரண்ட் டிவைஸ் (Residual Current Device) என்ற உயிர்காக்கும் சாதனத்தை தங்களுடைய மின்னிணைப்பில் பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியான செய்திக்குறிப்பில், நடப்பு மழைக்காலங்களில் அதிகரித்துவரும் மின்விபத்துகள் மற்றும் அதன் காரணத்தால் ஏற்படும் மனித உயிரிழப்புகளைத் தடுப்பதற்கு புதிய மின்நுகர்வோர்கள் மட்டுமல்லாது தற்போதுள்ள அனைத்து மின்நுகர்வோர்களும் ஆர்சிடி (RCD) எனும் உயிர்காக்கும் சாதனத்தை அவரவர்கள் மின்னிணைப்பில் தவறாமல் பொருத்தி விபத்தை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் கடந்த சில மழைக்கால மாதங்களில் பல வகைகளில் மின்விபத்துகளால் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அவற்றுள் சில வயதான தம்பதியர் தற்செயலாக அடுக்குமாடி வீட்டின் முன்புறம் உள்ள இரும்பு கேட்டை (Gate) திறக்க முற்பட்ட போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்.

ஒரு தொழிலாளி கடையின் ஷட்டரை (Shutter) திறக்க முற்பட்ட போது உயிரிழந்தார். ஒரு பெண் அவரது வீட்டில் உள்ள கொடிக் கம்பியில் துணிகளை உலர்த்த முற்பட்ட போது உயிரிழந்தார். ஒரு சிறுவன் பூங்காவில் உள்ள மின்விளக்குக் கம்பத்தை தொட்ட போது உயிரிழந்தார். அரசு ஊழியர் ஒருவர் மழைப் பெய்யும் நேரத்தில் மோட்டரை (Motor) இயக்க முற்பட்ட போதும், மாணவர் ஒருவர் வீட்டிலுள்ள UPS பழுது பார்க்க முற்பட்ட போதும் உயிரிழந்தனர்.

இந்த விபத்துகள் சில உதாரணங்களே தவிர முழுமையானதல்ல. ஆர்சிடி (RCD) எனும் உயிர்காக்கும் சாதனத்தை மின்னிணைப்பில் பொருத்தியிருந்தால் இது போல மின்விபத்துகளைத் தவிர்த்திருக்க முடியும். சில ஆயிரங்கள் செலவில் ஆர்சிடியை (RCD) நிறுவுவதன் மூலம் விலைமதிப்பற்ற மனித உயிர்கள் காப்பாற்றப்படும்.

எனவே, வீடு, கடை, தொழில், பண்ணை வீடு, கல்வி நிறுவனங்கள், பொது இடங்கள் மற்றும் தற்போதுள்ள அனைத்து வகையான மின்நுகர்வோர்களும், மனித உயிர் பாதுகாப்பின் அடிப்படைத் தேவையான ஆர்.சி.டி (RCD) சாதனத்தை அவரவர் மின்னிணைப்பில் நிறுவ அறிவுறுத்தப்படுகிறார்கள் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சி.விஜயபாஸ்கர் சொத்துக்கள் முடக்கம்: உயர் நீதிமன்றத்தில் வருமான வரித்துறை விளக்கம்!

சென்னை: தமிழ்நாட்டில் மின்பழுது மற்றும் மின்கசிவினால் மின்விபத்துகள் ஏற்படுகிறது. இதனால், உண்டாகும் மனித உயிரிழப்புகளை தடுக்க, தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம், மின்சாரப் பகிர்மான விதித் தொகுப்பு 16(2A)ன் படி புதிய வழியை தேர்ந்தெடுத்துள்ளது.

அதன்படி, புதிய மின்னிணைப்பு பெறுபவர்கள் ஆர்சிடி (RCD) என்றழைக்கக்கூடிய ரெசிடுயல் கரண்ட் டிவைஸ் (Residual Current Device) என்ற உயிர்காக்கும் சாதனத்தை தங்களுடைய மின்னிணைப்பில் பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியான செய்திக்குறிப்பில், நடப்பு மழைக்காலங்களில் அதிகரித்துவரும் மின்விபத்துகள் மற்றும் அதன் காரணத்தால் ஏற்படும் மனித உயிரிழப்புகளைத் தடுப்பதற்கு புதிய மின்நுகர்வோர்கள் மட்டுமல்லாது தற்போதுள்ள அனைத்து மின்நுகர்வோர்களும் ஆர்சிடி (RCD) எனும் உயிர்காக்கும் சாதனத்தை அவரவர்கள் மின்னிணைப்பில் தவறாமல் பொருத்தி விபத்தை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் கடந்த சில மழைக்கால மாதங்களில் பல வகைகளில் மின்விபத்துகளால் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அவற்றுள் சில வயதான தம்பதியர் தற்செயலாக அடுக்குமாடி வீட்டின் முன்புறம் உள்ள இரும்பு கேட்டை (Gate) திறக்க முற்பட்ட போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்.

ஒரு தொழிலாளி கடையின் ஷட்டரை (Shutter) திறக்க முற்பட்ட போது உயிரிழந்தார். ஒரு பெண் அவரது வீட்டில் உள்ள கொடிக் கம்பியில் துணிகளை உலர்த்த முற்பட்ட போது உயிரிழந்தார். ஒரு சிறுவன் பூங்காவில் உள்ள மின்விளக்குக் கம்பத்தை தொட்ட போது உயிரிழந்தார். அரசு ஊழியர் ஒருவர் மழைப் பெய்யும் நேரத்தில் மோட்டரை (Motor) இயக்க முற்பட்ட போதும், மாணவர் ஒருவர் வீட்டிலுள்ள UPS பழுது பார்க்க முற்பட்ட போதும் உயிரிழந்தனர்.

இந்த விபத்துகள் சில உதாரணங்களே தவிர முழுமையானதல்ல. ஆர்சிடி (RCD) எனும் உயிர்காக்கும் சாதனத்தை மின்னிணைப்பில் பொருத்தியிருந்தால் இது போல மின்விபத்துகளைத் தவிர்த்திருக்க முடியும். சில ஆயிரங்கள் செலவில் ஆர்சிடியை (RCD) நிறுவுவதன் மூலம் விலைமதிப்பற்ற மனித உயிர்கள் காப்பாற்றப்படும்.

எனவே, வீடு, கடை, தொழில், பண்ணை வீடு, கல்வி நிறுவனங்கள், பொது இடங்கள் மற்றும் தற்போதுள்ள அனைத்து வகையான மின்நுகர்வோர்களும், மனித உயிர் பாதுகாப்பின் அடிப்படைத் தேவையான ஆர்.சி.டி (RCD) சாதனத்தை அவரவர் மின்னிணைப்பில் நிறுவ அறிவுறுத்தப்படுகிறார்கள் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சி.விஜயபாஸ்கர் சொத்துக்கள் முடக்கம்: உயர் நீதிமன்றத்தில் வருமான வரித்துறை விளக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.