கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உறுப்பினரும் தொழிலதிபருமான வசந்தகுமார் (வயது 70), கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி நேற்று (ஆக. 28) உயிரிழந்தார். அவரது மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் நடிகர் ராதாரவி விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பது, "அண்ணன் வசந்தகுமார் எம்.பி காலமாகிவிட்டார் என்ற செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சியுற்றேன். அவர் மீண்டு வந்துவிட வேண்டும் என்று மனம் மிகவும் ஏங்கியது. எனது குடும்ப நண்பரை இழந்துவிட்டேன். ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கே அவருடைய இழப்பு ஈடுசெய்ய முடியாதது.
ஏனென்றால், ஒவ்வொருவருடைய குடும்பத்திலும் கலந்து விட்டவர் வசந்தகுமார். நம் வீட்டில் இருக்கும் ஏதோ ஒரு பொருள் அவரை நினைவுப்படுத்தும். அந்த அளவுக்கு தமிழ்நாட்டில் வியாபாரத்தில் கொடிகட்டிப் பறந்தார். மேலும் அவர் எனக்கு தயாரிப்பாளரும்கூட. அவர் தயாரித்த படத்தில் நான் நடித்துள்ளேன்.
தன் வாழ்நாளில் அரசியல், தனிப்பட்ட வாழ்க்கை, தொழில் என அனைத்தையும் சீரான முறையில் கையாண்டவர் வசந்தகுமார். எப்போது சென்றாலும் சிரித்த முகத்துடன் வரவேற்பவர். அவர் முகத்தில் சிரிப்பு இல்லாமல் நான் பார்த்த நாட்களை விரல்விட்டு எண்ணி விடலாம். அந்த அளவுக்கு புன்னகையுடனே இருந்தவர்.
இப்போது அந்த சிரிப்பு இல்லாத முகத்தை நான் எப்படிக் காண்பேன்? பணிவானவர், நேர்மையானவர், தொலைநோக்குப் பார்வை கொண்ட மனிதர் என வசந்தகுமாரைப் பற்றி வார்த்தைகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.
அவரை இழந்து வாடும் அவருடைய அண்ணன் குமரி ஆனந்தன், அண்ணன் மகளும் மேதகு தெலங்கானா மாநில ஆளுநருமான தமிழிசை செளந்தரராஜன், மகன்கள் விஜய் வசந்த், வினோத், மகள் தங்க மலர், குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், வசந்த் அண்ட் கோ ஊழியர்கள் என அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
முகத்தில் சிரிப்பு இல்லாமல் வசந்தகுமாரை பார்க்க முடியாது - நடிகர் ராதாரவி இரங்கல் - மக்களவை உறுப்பினர் வசந்தகுமார்
சென்னை : தன் வாழ்நாளில் அரசியல், தனிப்பட்ட வாழ்க்கை, தொழில் என அனைத்தையும் சீரான முறையில் கையாண்டவர் வசந்தகுமார் என நடிகர் ராதாரவி இரங்கல் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உறுப்பினரும் தொழிலதிபருமான வசந்தகுமார் (வயது 70), கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி நேற்று (ஆக. 28) உயிரிழந்தார். அவரது மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் நடிகர் ராதாரவி விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பது, "அண்ணன் வசந்தகுமார் எம்.பி காலமாகிவிட்டார் என்ற செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சியுற்றேன். அவர் மீண்டு வந்துவிட வேண்டும் என்று மனம் மிகவும் ஏங்கியது. எனது குடும்ப நண்பரை இழந்துவிட்டேன். ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கே அவருடைய இழப்பு ஈடுசெய்ய முடியாதது.
ஏனென்றால், ஒவ்வொருவருடைய குடும்பத்திலும் கலந்து விட்டவர் வசந்தகுமார். நம் வீட்டில் இருக்கும் ஏதோ ஒரு பொருள் அவரை நினைவுப்படுத்தும். அந்த அளவுக்கு தமிழ்நாட்டில் வியாபாரத்தில் கொடிகட்டிப் பறந்தார். மேலும் அவர் எனக்கு தயாரிப்பாளரும்கூட. அவர் தயாரித்த படத்தில் நான் நடித்துள்ளேன்.
தன் வாழ்நாளில் அரசியல், தனிப்பட்ட வாழ்க்கை, தொழில் என அனைத்தையும் சீரான முறையில் கையாண்டவர் வசந்தகுமார். எப்போது சென்றாலும் சிரித்த முகத்துடன் வரவேற்பவர். அவர் முகத்தில் சிரிப்பு இல்லாமல் நான் பார்த்த நாட்களை விரல்விட்டு எண்ணி விடலாம். அந்த அளவுக்கு புன்னகையுடனே இருந்தவர்.
இப்போது அந்த சிரிப்பு இல்லாத முகத்தை நான் எப்படிக் காண்பேன்? பணிவானவர், நேர்மையானவர், தொலைநோக்குப் பார்வை கொண்ட மனிதர் என வசந்தகுமாரைப் பற்றி வார்த்தைகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.
அவரை இழந்து வாடும் அவருடைய அண்ணன் குமரி ஆனந்தன், அண்ணன் மகளும் மேதகு தெலங்கானா மாநில ஆளுநருமான தமிழிசை செளந்தரராஜன், மகன்கள் விஜய் வசந்த், வினோத், மகள் தங்க மலர், குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், வசந்த் அண்ட் கோ ஊழியர்கள் என அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.