இது தொடர்பாக புதுச்சேரி தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது, "காமராஜ் நகர் தொகுதியில் மொத்தம் 35,009 வாக்காளர்கள் உள்ளனர். 9 வேட்பாளர்கள் களத்தில் தேர்தலை சந்திக்கின்றனர்.
மொத்தம் உள்ள 32 வாக்குச்சாவடிகளில், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர் வாக்களிக்க தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளது. தேர்தல் நாளன்று தொகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் அனைத்துக்கும் பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது. மொத்தம் ஒன்பது பறக்கும் படைகள், 9 இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். இதுவரை 23 ஆயிரம் மதிப்புள்ள மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. காமராஜ் நகர் தொகுதி மக்களுக்கு காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார், இலவச கேபிள் இணைப்பு அளித்துள்ளதாக எழுந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகின்றது" என்றார்.
இதையும் படிங்க: இடைத்தேர்தல் களம்: இறுதிகட்ட வாகன பரப்புரையில் புதுச்சேரி முதலமைச்சர்