சென்னையில் நவம்பர் 24, 25 ஆகிய தேதிகளில் மின்தடைப் பணிகள் காரணமாக மூன்று புறநகர் மின்சார ரயில்களின் சேவைகள் இந்த இரண்டு நாள்களிலும் முற்றிலும் ரத்து செய்யப்பட உள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
அந்த அறிவிப்பின்படி, மூர் மார்க்கெட் - கும்மிடிப்பூண்டி, மூர் மார்க்கெட் - சூலூர்பேட்டை, கும்மிடிப்பூண்டி - மூர் மார்க்கெட், சூலூர்பேட்டை - மூர் மார்க்கெட் ஆகிய வழித்தடத்தில் ஓடும் புறநகர் மின்சார ரயில் சேவையை முற்றிலும் ரத்து செய்யப்படவுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.