ETV Bharat / state

பாலிடெக்னிக் படிப்புகளில் சேர மாணவர்கள் ஆர்வம்!

பாலிடெக்னிக் படிப்புகளில் சேர்வதற்கு 12 ஆயிரத்து 261 மாணவர்கள் விண்ணப்பங்களை பதிவு செய்தனர். அதில், 9 ஆயிரத்து 933 பேர் முழுமையாகப் பூர்த்தி செய்து சமர்பித்துள்ளனர்.

author img

By

Published : Jul 6, 2021, 1:30 PM IST

பாலிடெக்னிக் படிப்புகளில் சேர மாணவர்கள் ஆர்வம்
பாலிடெக்னிக் படிப்புகளில் சேர மாணவர்கள் ஆர்வம்

சென்னை: தமிழ்நாட்டிலுள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு, பகுதி நேரம், இரண்டாம் ஆண்டில் மாணவர்கள் சேர்வதற்கு ஜூன் 25 ஆம் தேதி முதல் https://tngptc.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறையை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தொடங்கிவைத்தார். ஜூலை 12 ஆம் தேதி வரை விண்ணப்பிக்க கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கை

2020-21ஆம் கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்புத் பொதுத் தேர்வு எழுதாத மாணவர்களுக்கு ஒன்பதாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

1

தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் 51 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளுடன், மேலும் மூன்று இணைப்புப் கல்லூரிகள் இந்தாண்டு ஆன்லைன் கலந்தாய்வில் சேர்க்கப்பட உள்ளனர். பாலிடெக்னிக் கல்லூரிகளில் உள்ள 18 ஆயிரத்து 120 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

கலந்தாய்வு

ஜூன் 25 ஆம் தேதி முதல் ஜூலை 5 ஆம் தேதி வரையில் 12 ஆயிரத்து 261 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். இவர்களில் 9 ஆயிரத்து 933 மாணவர்கள் முழுமையாக விண்ணப்பத்தை பூர்த்தி செய்து ஆன்லைனில் சமர்பித்துள்ளனர்.

சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 19 ஆம் தேதி தொடங்க உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 9 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கை

சென்னை: தமிழ்நாட்டிலுள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு, பகுதி நேரம், இரண்டாம் ஆண்டில் மாணவர்கள் சேர்வதற்கு ஜூன் 25 ஆம் தேதி முதல் https://tngptc.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறையை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தொடங்கிவைத்தார். ஜூலை 12 ஆம் தேதி வரை விண்ணப்பிக்க கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கை

2020-21ஆம் கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்புத் பொதுத் தேர்வு எழுதாத மாணவர்களுக்கு ஒன்பதாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

1

தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் 51 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளுடன், மேலும் மூன்று இணைப்புப் கல்லூரிகள் இந்தாண்டு ஆன்லைன் கலந்தாய்வில் சேர்க்கப்பட உள்ளனர். பாலிடெக்னிக் கல்லூரிகளில் உள்ள 18 ஆயிரத்து 120 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

கலந்தாய்வு

ஜூன் 25 ஆம் தேதி முதல் ஜூலை 5 ஆம் தேதி வரையில் 12 ஆயிரத்து 261 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். இவர்களில் 9 ஆயிரத்து 933 மாணவர்கள் முழுமையாக விண்ணப்பத்தை பூர்த்தி செய்து ஆன்லைனில் சமர்பித்துள்ளனர்.

சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 19 ஆம் தேதி தொடங்க உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 9 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.