ETV Bharat / state

ராஜகோபாலனிடம் 2ஆவது நாளாகத் தொடர்ந்து விசாரணை

author img

By

Published : Jun 2, 2021, 1:16 PM IST

சென்னை: பாலியல் குற்றச்சாட்டில் கைதான பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலனிடம் இரண்டாவது நாளாக துணை ஆணையர் ஹரிகிரண் பிரசாத் விசாரணை நடத்திவருகிறார்.

ராஜகோபாலனிடம் 2-வது நாளாக தொடர்ந்து விசாரணை
ராஜகோபாலனிடம் 2-வது நாளாக தொடர்ந்து விசாரணை

பள்ளி மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் கைதான பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலனிடம், சென்னை அசோக்நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் துணை ஆணையர் ஹரிகிரண் பிரசாத் இரண்டாவது நாளாக விசாரணை நடத்திவருகிறார். ராஜகோபாலனை மூன்று நாள் காவலில் எடுத்து விசாரிக்க காவல் துறையினர் அனுமதி பெற்றிருந்தனர்.

இந்நிலையில், அவர் மீது புகார் அளித்த ஐந்து மாணவிகளிடமிருந்த பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் ராஜகோபாலனிடம் காவல் துறையினர் விடிய விடிய விசாரணை நடத்திவருகின்றனர்.

அவரின் குற்றத்திற்கு உடந்தையாக இருந்த ஆசிரியர்கள் யார்? பள்ளி நிர்வாகத்திற்குத் தெரிந்தே நடந்ததா என்ற அடிப்படையில் விசாரணை நடத்திவருகின்றனர்.

ராஜகோபாலன் அளித்த வாட்ஸ்அப் ஆதாரங்களை சைபர் ஆய்வகம் மூலம் மீட்கப்பட்டு அந்தத் தகவல்களை வைத்தும் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. அவர் அளிக்கும் வாக்குமூலங்கள் காணொலியாகப் பதிவுசெய்யப்படுகின்றன.

விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்செய்ய காவல் துறையினர் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க: முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தலைமறைவு; ராமநாதபுரம் விரைந்த தனிப்படை

பள்ளி மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் கைதான பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலனிடம், சென்னை அசோக்நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் துணை ஆணையர் ஹரிகிரண் பிரசாத் இரண்டாவது நாளாக விசாரணை நடத்திவருகிறார். ராஜகோபாலனை மூன்று நாள் காவலில் எடுத்து விசாரிக்க காவல் துறையினர் அனுமதி பெற்றிருந்தனர்.

இந்நிலையில், அவர் மீது புகார் அளித்த ஐந்து மாணவிகளிடமிருந்த பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் ராஜகோபாலனிடம் காவல் துறையினர் விடிய விடிய விசாரணை நடத்திவருகின்றனர்.

அவரின் குற்றத்திற்கு உடந்தையாக இருந்த ஆசிரியர்கள் யார்? பள்ளி நிர்வாகத்திற்குத் தெரிந்தே நடந்ததா என்ற அடிப்படையில் விசாரணை நடத்திவருகின்றனர்.

ராஜகோபாலன் அளித்த வாட்ஸ்அப் ஆதாரங்களை சைபர் ஆய்வகம் மூலம் மீட்கப்பட்டு அந்தத் தகவல்களை வைத்தும் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. அவர் அளிக்கும் வாக்குமூலங்கள் காணொலியாகப் பதிவுசெய்யப்படுகின்றன.

விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்செய்ய காவல் துறையினர் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க: முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தலைமறைவு; ராமநாதபுரம் விரைந்த தனிப்படை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.