ETV Bharat / state

வலியால் துடித்த கர்ப்பிணி பெண்: சாலையின் நடுவே பிரசவம் பார்த்த காவலர் - மருத்துவமனை

சென்னை: பிரசவ வலியால் நடுரோட்டில் துடித்த கர்ப்பிணி பெண்ணுக்கு காவல் ஆய்வாளர் பிரசவம் பார்த்த சம்பவம் பொது மக்களிடையே பெரும் பாராட்டை பெற்றுள்ளது.

chitra
author img

By

Published : Sep 16, 2019, 1:47 PM IST

Updated : Sep 16, 2019, 7:36 PM IST

சென்னை சூளைமேடு செளராஷ்டிரா நகரைச் சேர்ந்தவர் பானுமதி. இவர் நிறைமாத கர்ப்பிணி. பானுமதிக்கு வீட்டில் யாரும் இல்லாத நிலையில், நேற்றிரவு பிரசவ வலி ஏற்பட்டது. இதனையடுத்து பானுமதி சாலைக்கு வந்து ஆட்டோவிற்காக நிற்கும் போது பிரசவ வலி மேலும் அதிகரிக்கவே சாலையில் சரிந்து விழுந்து விட்டார்.

அதேநேரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த சூளைமேடு காவல் ஆய்வாளர் சித்ரா, பானுமதி சாலையில் விழுந்து கிடைப்பதை பார்த்து அவரை மருத்துவமனைக்கு கொண்டுச்செல்ல முயன்றார்.

ஆனால் அதற்குள் பிரசவலி அதிகமாகவே தனது ஜீப்பில் வைத்து ஒட்டுநர் பெண் காவலரும் சித்தராவும் பிரசவம் பார்த்தனர். இதில் பானுமதிக்கு ஆண்குழந்தை பிறந்தது. பின்னர் தாய் சேய் இருவரையும் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். பின் பானுமதி குறித்து அவரது வீட்டாருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து உறவினர்கள் வந்தனர்.

ஆய்வாளர் சித்ராவை பாராட்டும் காவல் ஆணையர்

மருத்துவமனையில் தாயும் சேயும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பிரசவவலியால் துடித்த கர்ப்பிணி பெண்ணுக்கு சாதூர்யமாக செயல்பட்டு பிரசவம் பார்த்த காவல் ஆய்வாளர் சித்ராவை அப்பகுதி பொதுமக்கள் வெகுவாக பாராட்டியுள்ளார்.

சென்னை சூளைமேடு செளராஷ்டிரா நகரைச் சேர்ந்தவர் பானுமதி. இவர் நிறைமாத கர்ப்பிணி. பானுமதிக்கு வீட்டில் யாரும் இல்லாத நிலையில், நேற்றிரவு பிரசவ வலி ஏற்பட்டது. இதனையடுத்து பானுமதி சாலைக்கு வந்து ஆட்டோவிற்காக நிற்கும் போது பிரசவ வலி மேலும் அதிகரிக்கவே சாலையில் சரிந்து விழுந்து விட்டார்.

அதேநேரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த சூளைமேடு காவல் ஆய்வாளர் சித்ரா, பானுமதி சாலையில் விழுந்து கிடைப்பதை பார்த்து அவரை மருத்துவமனைக்கு கொண்டுச்செல்ல முயன்றார்.

ஆனால் அதற்குள் பிரசவலி அதிகமாகவே தனது ஜீப்பில் வைத்து ஒட்டுநர் பெண் காவலரும் சித்தராவும் பிரசவம் பார்த்தனர். இதில் பானுமதிக்கு ஆண்குழந்தை பிறந்தது. பின்னர் தாய் சேய் இருவரையும் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். பின் பானுமதி குறித்து அவரது வீட்டாருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து உறவினர்கள் வந்தனர்.

ஆய்வாளர் சித்ராவை பாராட்டும் காவல் ஆணையர்

மருத்துவமனையில் தாயும் சேயும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பிரசவவலியால் துடித்த கர்ப்பிணி பெண்ணுக்கு சாதூர்யமாக செயல்பட்டு பிரசவம் பார்த்த காவல் ஆய்வாளர் சித்ராவை அப்பகுதி பொதுமக்கள் வெகுவாக பாராட்டியுள்ளார்.

Intro:Body:சூளைமேட்டில் நடுரோட்டில் பிரசவ வலியால் துடித்த பெண்ணிற்கு பிரசவம் பார்த்த காவல் ஆய்வாளர்.

சூளைமேடு சௌராஷ்டிரா நகரைச் சேர்ந்தவர் பானுமதி நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவர் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இவருக்கு உதவி செய்யக்கூட அக்கம்பக்கத்தில் யாரும் இல்லாத நிலை இருந்தது. 
இந்நிலையில் இரவு நேரத்தில் இவருக்குப் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனால் உதவி கேட்க யாரும் இல்லாமல் வேறு வழியின்றி தானே நடந்து அவரது வீட்டிலிருந்து நெடுஞ்சாலை பகுதிக்கு வந்துள்ளார். அங்கு ஏதாவது வாகனத்தைப் பிடித்து மருத்துவமனை சென்று விடலாம் எனக் கருதியுள்ளார். 

நெடுஞ்சாலைக்கு வந்ததும் பானுமதியால் நடக்கவே முடியவில்லை அந்த அளவிற்குப் பிரசவ வலி அதிகமாகிவிட்டது. இதனால் அவர் அங்கேயே நிலைதடுமாறி விழுந்துவிட்டார். 

இந்த நேரம் அப்பகுதியில் சூளைமேடு குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சித்ரா அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அவர் ஒரு கர்ப்பிணிப் பெண் ரோட்டில் விழுந்து கிடப்பதைப் பார்த்து அவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முடிவு செய்தார். 

ஆனால் பானுமதியைத் தூக்கும்போது தான் மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்குள் பிரசவ வலி அதிகமானதால் தன்னுடைய கார் பெண் ஓட்டுனர் வைத்து பிரசவம் பார்த்தார் சித்ரா.அப்பொழுது பானுமதிக்கு ஆண்குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த பின்னர் சித்ரா, பானுமதியையும் பிறந்த குழந்தையையும் தன் காரிலேயே ஏற்றிக்கொண்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்து சித்ரா குறித்த விபரங்களை அறிந்து அவரது வீட்டாருக்குத் தகவலைச் சொல்லி மருத்துவமனைக்கு வரச்சொன்னார். 

தற்போது தாயும் சேயும் மிக நலமாக இருக்கின்றனர். சாதூர்யமாக செயல்பட்டு கர்ப்பிணிப் பெண்ணிற்கு தானே பிரசவம் பார்த்துக் காப்பாற்றிய காவல் ஆய்வாளர் சித்ராவைப் பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.மேலும் காவல் ஆணையர் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதியும் வழங்கினார்.Conclusion:
Last Updated : Sep 16, 2019, 7:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.