ETV Bharat / state

கறுப்பர் கூட்டம் செந்தில்வாசனுக்கு 4 நாள்கள் காவல்: நீதிமன்றம் அனுமதி!

author img

By

Published : Jul 24, 2020, 4:07 PM IST

சென்னை: கந்த சஷ்டி கவச பாடலை இழிவுப்படுத்திய புகாரில் செந்தில்வாசனை 4 நாள்கள் போலீஸ் காவலில் எடுக்க எழும்பூர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

கறுப்பர் கூட்டம் செந்தில் வாசனுக்கு 4 நாட்கள் காவல்: நீதிமன்றம் அனுமதி!
கறுப்பர் கூட்டம் செந்தில் வாசனுக்கு 4 நாட்கள் காவல்: நீதிமன்றம் அனுமதி!

கந்த சஷ்டி கவசத்தை அவமதிப்பு செய்து கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனல் வீடியோ வெளியிட்டது. இது தொடர்பாக அந்த சேனலின் நிர்வாகி செந்தில்வாசன், தொப்பாளர் சுரேந்தர், ஒளிப்பதிவாளர் சோமசுந்தரம், வீடியோ எடிட்டர் குகன் ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் கறுப்பர் கூட்டம் யூ டியூப் சேனலின் நிர்வாகி செந்தில் வாசன், சுரேந்தர் ஆகிய இருவரை சைபர் கிரைம் காவல் துறையினர் தங்களுடைய கட்டுப்பாட்டில் எடுத்து விசாரிக்க அனுமதிக்கக்கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். அதேவேளையில், தன்னை காவல் துறையின் கட்டுப்பாட்டில் விசாரணைக்கு எடுக்க அனுமதிக்கக் கூடாது என சுரேந்திரன் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுக்கள் நீதிபதி ரோஸ்லின் துரை முன்பாக விசாரணைக்கு வந்தபோது, காவல் துறை தரப்பில், இந்த விவகாரத்தில் நான்கு பேர் மட்டுமே கைதாகி சிறையில் உள்ளனர். மற்றவர்கள் கைது செய்யப்பட வேண்டியுள்ளது. இவர்களுக்கு பின்னணியில் யாரும் உள்ளார்களா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டிய அவசியம் உள்ளதால் 5 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

இதில் கறுப்பர் கூட்டம் தரப்பில், நீதிமன்றத்தில் சரணடைந்திருந்தால் மட்டுமே காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்றும் காவல் துறை கட்டுப்பாட்டில் இருந்தபோது போதிய விசாரணை நடத்தபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் உள்நோக்கத்துடன் சிலர் பிறபிக்கும் உத்தரவுகளுக்கு ஏற்ப வழக்கின் பிரிவுகளை மாற்றுவதற்காக காவலில் எடுக்க மனுத்தாக்கல் செய்துள்ளதால் அதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கக்கூடாது என தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, சுரேந்திரனை காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி கோரிய மனுவை தள்ளுபடி செய்தார். அதேவேளையில் கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலின் நிர்வாகி செந்தில்வாசனை மட்டும் 4 நாள்கள் காவல் துறை கட்டுப்பாட்டில் எடுத்து விசாரிக்க சைபர் கிரைம் காவல் துறைக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

இதையும் படிங்க...சன் ஃபார்மா விரிவாக்கத்துக்கு தடை! தமிழ்நாடு அரசு அறிவிப்பு

கந்த சஷ்டி கவசத்தை அவமதிப்பு செய்து கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனல் வீடியோ வெளியிட்டது. இது தொடர்பாக அந்த சேனலின் நிர்வாகி செந்தில்வாசன், தொப்பாளர் சுரேந்தர், ஒளிப்பதிவாளர் சோமசுந்தரம், வீடியோ எடிட்டர் குகன் ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் கறுப்பர் கூட்டம் யூ டியூப் சேனலின் நிர்வாகி செந்தில் வாசன், சுரேந்தர் ஆகிய இருவரை சைபர் கிரைம் காவல் துறையினர் தங்களுடைய கட்டுப்பாட்டில் எடுத்து விசாரிக்க அனுமதிக்கக்கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். அதேவேளையில், தன்னை காவல் துறையின் கட்டுப்பாட்டில் விசாரணைக்கு எடுக்க அனுமதிக்கக் கூடாது என சுரேந்திரன் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுக்கள் நீதிபதி ரோஸ்லின் துரை முன்பாக விசாரணைக்கு வந்தபோது, காவல் துறை தரப்பில், இந்த விவகாரத்தில் நான்கு பேர் மட்டுமே கைதாகி சிறையில் உள்ளனர். மற்றவர்கள் கைது செய்யப்பட வேண்டியுள்ளது. இவர்களுக்கு பின்னணியில் யாரும் உள்ளார்களா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டிய அவசியம் உள்ளதால் 5 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

இதில் கறுப்பர் கூட்டம் தரப்பில், நீதிமன்றத்தில் சரணடைந்திருந்தால் மட்டுமே காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்றும் காவல் துறை கட்டுப்பாட்டில் இருந்தபோது போதிய விசாரணை நடத்தபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் உள்நோக்கத்துடன் சிலர் பிறபிக்கும் உத்தரவுகளுக்கு ஏற்ப வழக்கின் பிரிவுகளை மாற்றுவதற்காக காவலில் எடுக்க மனுத்தாக்கல் செய்துள்ளதால் அதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கக்கூடாது என தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, சுரேந்திரனை காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி கோரிய மனுவை தள்ளுபடி செய்தார். அதேவேளையில் கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலின் நிர்வாகி செந்தில்வாசனை மட்டும் 4 நாள்கள் காவல் துறை கட்டுப்பாட்டில் எடுத்து விசாரிக்க சைபர் கிரைம் காவல் துறைக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

இதையும் படிங்க...சன் ஃபார்மா விரிவாக்கத்துக்கு தடை! தமிழ்நாடு அரசு அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.