ETV Bharat / state

சென்னை அருகே லவ் பேர்ட்ஸ் பறவைகளை கொன்றுவிட்டு திருட்டு.. மடக்கிப்பிடித்த காவல்துறை! - tambaram police station

தாம்பரம் அருகே லவ் பேர்ட்ஸ் பறவைகளை கொலை செய்துவிட்டு வீட்டில் கொள்ளையடித்த திருடனை பீர்க்கங்கரனை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

தாம்பரம் அருகே லவ் பேர்ட்ஸ் பறவைகளை கொலை செய்து திருட்டு
தாம்பரம் அருகே லவ் பேர்ட்ஸ் பறவைகளை கொலை செய்து திருட்டு
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 22, 2023, 10:31 PM IST

சென்னை: தாம்பரம் அருகே லவ் பேர்ட்ஸ் பறவைகளைக் கொலை செய்து வீட்டில் கொள்ளை அடித்த திருடனை அதிரடியாகக் கைது செய்துள்ளது காவல் துறை. சென்னை தாம்பரம் அடுத்த புது பெருங்களத்தூர் வ.உ.சி தெருவில் முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை சுமார் 3:00 மணி அளவில் மர்ம நபர் ஒருவர் கோயில் உண்டியலை சம்பட்டியால் உடைத்துக் கொண்டு இருப்பதை அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் பார்த்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், உடனே அருகில் உள்ள பீர்க்கங்கரனை காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தார்.

தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர், உண்டியலை உடைத்துக் கொண்டிருந்த மர்ம நபரை மடக்கிப் பிடித்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட அந்த நபரை, காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பெருங்களத்தூர் காந்தி ரோடு காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் (வயது-25) என்பது தெரியவந்தது. இவர் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு அதே கோயிலின் பூட்டை உடைத்து உண்டியல் பணத்தைக் கொள்ளை அடித்துச் சென்றதும், மீண்டும் அவரது கைவரிசையை காட்டுவதற்காகக் கோயிலுக்கு வந்து கொள்ளைச் சம்பவத்தை அரங்கேற்றும் போது போலீசில் சிக்கியதும் தெரியவந்தது.

மேலும் விசாரணையில், கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு பீர்க்கன்காரணை காவல் நிலையம் அருகே உள்ள கட்ட பொம்மன் தெருவில் வசிக்கும் கணேஷ் (வயது-35) என்பவரின் வீட்டில் திருடச் சென்ற போது (லவ் பேர்ட்ஸ்) பறவைகளைக் கொலை செய்து விட்டு, திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரிய வந்தது. இது மட்டுமின்றி, கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட விக்னேஷ், விமான நிலையத்தில் தனியார் காண்ட்ராக்டில், டீம் லீடராக பணியாற்றி வருவதும் அவருக்கு 5 மாதங்கள் முன்பு தான் திருமணம் முடிந்துள்ளது என்பது தெரிய வந்தது.

மேலும் அவர் இரவில் மட்டும் திருட்டு சம்பவங்களை அரங்கேற்றுவதை வழக்கமாகக் கொண்டு வந்துள்ளார் என்பது காவல் துறையின் கிடிக்குப்பிடி விசாரணையில் தெரிய வந்தது. தொடர்ந்து மூன்று முறை கோயில் உண்டியலை உடைத்து உள்ளார். அது மட்டுமின்றி கொடூரமாக லவ் பேர்ட்ஸ் பறவைகளைக் கொலை செய்து விட்டு, திருட்டு சம்பவத்தை நடத்தி உள்ளார் என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து விக்னேஷ் மீது வழக்கு பதிவு செய்து தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: "சாது மிரண்டால் காடு கொள்ளாது" : ட்ரெண்டாகும் பாகுபலி யானையின் கியூட் வீடியோ!

சென்னை: தாம்பரம் அருகே லவ் பேர்ட்ஸ் பறவைகளைக் கொலை செய்து வீட்டில் கொள்ளை அடித்த திருடனை அதிரடியாகக் கைது செய்துள்ளது காவல் துறை. சென்னை தாம்பரம் அடுத்த புது பெருங்களத்தூர் வ.உ.சி தெருவில் முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை சுமார் 3:00 மணி அளவில் மர்ம நபர் ஒருவர் கோயில் உண்டியலை சம்பட்டியால் உடைத்துக் கொண்டு இருப்பதை அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் பார்த்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், உடனே அருகில் உள்ள பீர்க்கங்கரனை காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தார்.

தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர், உண்டியலை உடைத்துக் கொண்டிருந்த மர்ம நபரை மடக்கிப் பிடித்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட அந்த நபரை, காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பெருங்களத்தூர் காந்தி ரோடு காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் (வயது-25) என்பது தெரியவந்தது. இவர் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு அதே கோயிலின் பூட்டை உடைத்து உண்டியல் பணத்தைக் கொள்ளை அடித்துச் சென்றதும், மீண்டும் அவரது கைவரிசையை காட்டுவதற்காகக் கோயிலுக்கு வந்து கொள்ளைச் சம்பவத்தை அரங்கேற்றும் போது போலீசில் சிக்கியதும் தெரியவந்தது.

மேலும் விசாரணையில், கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு பீர்க்கன்காரணை காவல் நிலையம் அருகே உள்ள கட்ட பொம்மன் தெருவில் வசிக்கும் கணேஷ் (வயது-35) என்பவரின் வீட்டில் திருடச் சென்ற போது (லவ் பேர்ட்ஸ்) பறவைகளைக் கொலை செய்து விட்டு, திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரிய வந்தது. இது மட்டுமின்றி, கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட விக்னேஷ், விமான நிலையத்தில் தனியார் காண்ட்ராக்டில், டீம் லீடராக பணியாற்றி வருவதும் அவருக்கு 5 மாதங்கள் முன்பு தான் திருமணம் முடிந்துள்ளது என்பது தெரிய வந்தது.

மேலும் அவர் இரவில் மட்டும் திருட்டு சம்பவங்களை அரங்கேற்றுவதை வழக்கமாகக் கொண்டு வந்துள்ளார் என்பது காவல் துறையின் கிடிக்குப்பிடி விசாரணையில் தெரிய வந்தது. தொடர்ந்து மூன்று முறை கோயில் உண்டியலை உடைத்து உள்ளார். அது மட்டுமின்றி கொடூரமாக லவ் பேர்ட்ஸ் பறவைகளைக் கொலை செய்து விட்டு, திருட்டு சம்பவத்தை நடத்தி உள்ளார் என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து விக்னேஷ் மீது வழக்கு பதிவு செய்து தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: "சாது மிரண்டால் காடு கொள்ளாது" : ட்ரெண்டாகும் பாகுபலி யானையின் கியூட் வீடியோ!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.