ETV Bharat / state

மளிகை கடையின் ஷட்டர் உடைப்பு - கல்லாவில் பணம் இல்லாத விரக்தியில் கடலைமிட்டாய் திருட்டு

author img

By

Published : Sep 30, 2022, 6:37 PM IST

மளிகைக் கடையின் கல்லா பெட்டியில் பணம் இல்லாத விரக்தியில் கடையில் இருந்த சிகரெட் பாக்கெட்டுகள், பெர்வியூம், கடலை மிட்டாய் டப்பாக்களை திருடிச் சென்ற இளைஞர்களை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Etv Bharat
Etv Bharat

சென்னை புரசைவாக்கம் பகுதியை சேர்ந்தவர் ராம்குமார். இவர் அதே பகுதியில் உள்ள பிரசன்ன விநாயகர் கோயில் தெருவில் மளிகைக் கடை நடத்தி வருகிறார். கடந்த 28ஆம் தேதி இரவு ராம்குமார் மளிகை கடையை பூட்டிவிட்டு வீட்டிற்குச் சென்று பின் மறுநாள் காலை வந்து பார்த்தபோது கடையின் ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் ராம்குமார் கடையினுள் சென்று சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் கடையின் ஷட்டரை உடைத்து இருவர் உள்ளே செல்வதும், பின் கடையின் விளக்கை போட்டுவிட்டு கல்லா பெட்டியில் பணம் இல்லாத விரக்தியில் கடையில் இருந்து சிகரெக் பாக்கெட், பெர்பியூம் பாட்டில்கள் மற்றும் கடலை மிட்டாய் டப்பா ஆகியவற்றை எடுத்துச் சென்றது பதிவாகியிருந்தது.

இதுதொடர்பாக ராம்குமார் காவல் துறை அவசர எண்ணுக்கு தகவல் தெரிவித்தார். அதனடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற வேப்பேரி காவல் துறையினர், கடையில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி, அதில் இருந்த 3 இளைஞர்கள் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

காவல் துறையினரின் முதற்கட்ட விசாரணையில் இதே கும்பல் சம்பவ இடத்துக்கு அருகே உள்ள கந்தப்பா தெருவில் உள்ள துணிக் கடையின் ஷட்டரை உடைக்க முயன்று, பின்னர் முடியாததால் மளிகைக் கடைக்கு வந்து ஷட்டரை உடைத்து திருடியது தெரியவந்துள்ளது.

சிசிடிவி

புரசைவாக்கம் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள பல கடைகளில் சமீப காலங்களாக ஷட்டர் உடைப்பு சம்பவங்கள் அதிகம் நடைபெறுவதாக அப்பகுதிவாசிகள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், இரவு நேர ரோந்து காவலர்களை அதிகப்படுத்தி திருட்டு நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

இதையும் படிங்க: வளர்ப்பு மகனை அடித்துக்கொன்ற தந்தை - போலீஸ் விசாரணை

சென்னை புரசைவாக்கம் பகுதியை சேர்ந்தவர் ராம்குமார். இவர் அதே பகுதியில் உள்ள பிரசன்ன விநாயகர் கோயில் தெருவில் மளிகைக் கடை நடத்தி வருகிறார். கடந்த 28ஆம் தேதி இரவு ராம்குமார் மளிகை கடையை பூட்டிவிட்டு வீட்டிற்குச் சென்று பின் மறுநாள் காலை வந்து பார்த்தபோது கடையின் ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் ராம்குமார் கடையினுள் சென்று சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் கடையின் ஷட்டரை உடைத்து இருவர் உள்ளே செல்வதும், பின் கடையின் விளக்கை போட்டுவிட்டு கல்லா பெட்டியில் பணம் இல்லாத விரக்தியில் கடையில் இருந்து சிகரெக் பாக்கெட், பெர்பியூம் பாட்டில்கள் மற்றும் கடலை மிட்டாய் டப்பா ஆகியவற்றை எடுத்துச் சென்றது பதிவாகியிருந்தது.

இதுதொடர்பாக ராம்குமார் காவல் துறை அவசர எண்ணுக்கு தகவல் தெரிவித்தார். அதனடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற வேப்பேரி காவல் துறையினர், கடையில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி, அதில் இருந்த 3 இளைஞர்கள் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

காவல் துறையினரின் முதற்கட்ட விசாரணையில் இதே கும்பல் சம்பவ இடத்துக்கு அருகே உள்ள கந்தப்பா தெருவில் உள்ள துணிக் கடையின் ஷட்டரை உடைக்க முயன்று, பின்னர் முடியாததால் மளிகைக் கடைக்கு வந்து ஷட்டரை உடைத்து திருடியது தெரியவந்துள்ளது.

சிசிடிவி

புரசைவாக்கம் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள பல கடைகளில் சமீப காலங்களாக ஷட்டர் உடைப்பு சம்பவங்கள் அதிகம் நடைபெறுவதாக அப்பகுதிவாசிகள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், இரவு நேர ரோந்து காவலர்களை அதிகப்படுத்தி திருட்டு நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

இதையும் படிங்க: வளர்ப்பு மகனை அடித்துக்கொன்ற தந்தை - போலீஸ் விசாரணை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.