ETV Bharat / state

காணாமல் போன முதியவர் கோயில் குளத்தில் சடலமாக மீட்பு - போலீசார் தீவிர விசாரணை!

author img

By

Published : Aug 8, 2020, 5:45 PM IST

சென்னை : கோயில் குளத்தில் கால்கள் கட்டப்பட்ட நிலையில் முதியவர் ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்ட நிலையில், காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதியவர் கொலை
முதியவர் கொலை

சென்னை, தாம்பரத்தை அடுத்த பள்ளிக்கரணை, ஜெயச்சந்திரன் நகரைச் சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 72). இவர் தன்னுடைய மகள் வீட்டில் தங்கி வந்துள்ளார்.

கடந்த ஜூலை 29ஆம் தேதி மாலை நடைப்பயிற்சிக்கு செல்வதாகக் கூறி வெளியே சென்ற அவர், அதன் பிறகு வீடு திரும்பவில்லை. இதுதொடர்பாக அவரது மருமகன் சந்திரசேகர் பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் ஏற்கனவே புகார் அளித்திருந்தார்.

இதனிடையே கடந்த ஆகஸ்ட் ஒன்றாம் தேதி தாம்பரம் முடிச்சூர் சாலை அருகேயுள்ள பழைய தாம்பரம் கோயில் குளத்தில் கால்கள் கட்டப்பட்ட நிலையில் அடையாளம் தெரியாத முதியவர் ஒருவரின் உடல் இருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அத்தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையின் முதியவரின் உடலைக் கைப்பற்றி, உடற்கூறு ஆய்விற்காக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தற்போது முதியவரின் உடற்கூறு ஆய்வில், குளத்தில் பிணமாகக் கிடந்தவர் பள்ளிக்கரணையில் காணாமல் போன சந்திரசேகர் என்பது தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து முதியவரின் உறவினர்களிடம் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் முதியவரின் கால்கள் கட்டப்பட்டு இருந்ததால் அவர் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க: அங்கோடா லொக்கா யார்? மரணத்தில் இருக்கும் சந்தேகம் என்ன? வழக்கின் போக்கு...

சென்னை, தாம்பரத்தை அடுத்த பள்ளிக்கரணை, ஜெயச்சந்திரன் நகரைச் சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 72). இவர் தன்னுடைய மகள் வீட்டில் தங்கி வந்துள்ளார்.

கடந்த ஜூலை 29ஆம் தேதி மாலை நடைப்பயிற்சிக்கு செல்வதாகக் கூறி வெளியே சென்ற அவர், அதன் பிறகு வீடு திரும்பவில்லை. இதுதொடர்பாக அவரது மருமகன் சந்திரசேகர் பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் ஏற்கனவே புகார் அளித்திருந்தார்.

இதனிடையே கடந்த ஆகஸ்ட் ஒன்றாம் தேதி தாம்பரம் முடிச்சூர் சாலை அருகேயுள்ள பழைய தாம்பரம் கோயில் குளத்தில் கால்கள் கட்டப்பட்ட நிலையில் அடையாளம் தெரியாத முதியவர் ஒருவரின் உடல் இருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அத்தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையின் முதியவரின் உடலைக் கைப்பற்றி, உடற்கூறு ஆய்விற்காக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தற்போது முதியவரின் உடற்கூறு ஆய்வில், குளத்தில் பிணமாகக் கிடந்தவர் பள்ளிக்கரணையில் காணாமல் போன சந்திரசேகர் என்பது தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து முதியவரின் உறவினர்களிடம் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் முதியவரின் கால்கள் கட்டப்பட்டு இருந்ததால் அவர் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க: அங்கோடா லொக்கா யார்? மரணத்தில் இருக்கும் சந்தேகம் என்ன? வழக்கின் போக்கு...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.