ETV Bharat / state

மின்வாரியம் சார்பில் 100 இடங்களில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் பாய்ண்ட் அமைக்க திட்டம்

author img

By

Published : Sep 8, 2022, 11:34 AM IST

தமிழ்நாடு முழுவதும் மின்வாரியம் சார்பில் 100 இடங்களில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் பாய்ண்ட் அமைக்க திட்டமிட்டுள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

மின்வாரியம் சார்பில் 100 இடங்களில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் பாய்ண்ட் அமைக்க திட்டம்
மின்வாரியம் சார்பில் 100 இடங்களில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் பாய்ண்ட் அமைக்க திட்டம்

சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்கள் கேள்விகளுக்கு பதிலளித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, "ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதல் விரைவில் கிடைக்கவுள்ளது. இதனையடுத்து திருத்திய மின் கட்டண உயர்வு அடுத்த மாதம் முதல் நடைமுறைக்கு வர வாய்ப்பு உள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள மாநகராட்சி, நகராட்சி, மின் வாரிய அலுவலகங்கள் உள்ளிட்ட அரசு இடங்களில் மின்சார வாகனங்களுக்கு சார்ஜ் செய்யும் வசதி கொண்ட சார்ஜிங் பாயிண்ட் அமைப்பதற்கு இடங்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றன. முதற்கட்டமாக 100 இடங்களில் பார்க்கிங் உள்ளிட்ட நவீன வசதியுடன் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள 1 லட்சத்து 45 மின் கம்பங்கள் தயராக உள்ளன. தாழ்வாக செல்லும் மின் வட கம்பிகள் மாற்றப்பட்டு வருகின்றன. வலுவற்ற மின்கம்பங்கள் மற்றப்பட்டுவருகின்றன. 80 விழுக்காடு பணிகள் தற்போது முடிவுற்ற நிலையில், பருவமழைக்கு தொடங்குவதற்கு முன் எதிர்கொள்ள தயாராக உள்ளோம்.

ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தில் இணைப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், இரண்டாம் கட்டமாக 50 ஆயிரம் இலவச விவசாய மின் இணைப்புகள் 100 நாட்களில் வழங்கும் வகையிலான திட்டம் இந்த மாத இறுதிக்குள் முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்படும்.

மின்வாரிய அலுவலர்கள் மீது புகார்கள் தொடர்ந்து வரும் நிலையில், அலுவலர்கள் தவறு செய்யாமல் கண்காணிக்க மின் வாரியத்தில் உள்ள 12 மண்டலங்களுக்கும் தலா மூன்று நபர்கள் கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட உள்ளது. மொத்தம் 36 நபர்கள் இந்த கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வழக்கில் செப்டம்பர் 13ஆம் தேதி உத்தரவு

சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்கள் கேள்விகளுக்கு பதிலளித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, "ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதல் விரைவில் கிடைக்கவுள்ளது. இதனையடுத்து திருத்திய மின் கட்டண உயர்வு அடுத்த மாதம் முதல் நடைமுறைக்கு வர வாய்ப்பு உள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள மாநகராட்சி, நகராட்சி, மின் வாரிய அலுவலகங்கள் உள்ளிட்ட அரசு இடங்களில் மின்சார வாகனங்களுக்கு சார்ஜ் செய்யும் வசதி கொண்ட சார்ஜிங் பாயிண்ட் அமைப்பதற்கு இடங்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றன. முதற்கட்டமாக 100 இடங்களில் பார்க்கிங் உள்ளிட்ட நவீன வசதியுடன் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள 1 லட்சத்து 45 மின் கம்பங்கள் தயராக உள்ளன. தாழ்வாக செல்லும் மின் வட கம்பிகள் மாற்றப்பட்டு வருகின்றன. வலுவற்ற மின்கம்பங்கள் மற்றப்பட்டுவருகின்றன. 80 விழுக்காடு பணிகள் தற்போது முடிவுற்ற நிலையில், பருவமழைக்கு தொடங்குவதற்கு முன் எதிர்கொள்ள தயாராக உள்ளோம்.

ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தில் இணைப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், இரண்டாம் கட்டமாக 50 ஆயிரம் இலவச விவசாய மின் இணைப்புகள் 100 நாட்களில் வழங்கும் வகையிலான திட்டம் இந்த மாத இறுதிக்குள் முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்படும்.

மின்வாரிய அலுவலர்கள் மீது புகார்கள் தொடர்ந்து வரும் நிலையில், அலுவலர்கள் தவறு செய்யாமல் கண்காணிக்க மின் வாரியத்தில் உள்ள 12 மண்டலங்களுக்கும் தலா மூன்று நபர்கள் கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட உள்ளது. மொத்தம் 36 நபர்கள் இந்த கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வழக்கில் செப்டம்பர் 13ஆம் தேதி உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.