ETV Bharat / state

நடிகர் சங்கத் தேர்தலில் குளறுபடிகள் இல்லை: விஷால்

சென்னை: நடைபெற்று முடிந்த நடிகர் சங்கத் தேர்தலில் எந்தவித குளறுபடியும் நடக்கவில்லை என நடிகர் விஷால் செய்தியாளர்கள் சந்திப்பின்போது தெரிவித்தார்.

author img

By

Published : Jun 23, 2019, 8:39 PM IST

pandavar ani pressmeet

நடிகர் சங்கத் தேர்தல் இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 05.30 மணிக்கு நிறைவுற்றது. இதில் திரை நட்சத்திரப் பிரபலங்கள், சின்னத்திரை பிரபலங்கள் என பலர் கலந்துகொண்டு வாக்களித்தனர். இந்நிலையில், பாண்டவர் அணியினர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது நடிகர் நாசர் கூறியதாவது:

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் மிகப்பெரிய ஜனநாயக கடமையான தேர்தல் மிக நல்லபடியாக முடிந்தது. பல தடைகள் இருந்தது, அதையெல்லாம் கடந்து இந்தத் தேர்தல் நடந்துள்ளது. இதில் பெரிய விஷயம் என்னவென்றால், ஏறக்குறைய 85 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளது. ஏறக்குறைய 900 தபால் வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்தத் தேர்தல் நடக்காமல் இருந்திருக்கலாம். ஆனால் எங்களுக்கு எதிராக போட்டியிட்டவர்கள் அந்த சூழலை உருவாக்கிவிட்டார்கள். உதவிய அனைத்து தரப்பினருக்கும் நன்றி.

குளறுபடிகள் எதுவும் நடைபெறவில்லை. நாங்கள் எல்லோரையும் எப்போதும் நண்பர்களாக மதிக்கிறோம். நடந்து முடிந்த தேர்தலே உங்களுக்கு ஆதரவாகத்தான் முடிந்துள்ளது எனவும், நீதிபதி பத்மநாபன் உங்களுக்கு ஆதரவாகத்தான் செயல்படுகிறார் என்ற செய்தியாளரின் கேள்விக்கு நடிகர் விஷால் பதிலளித்தாவது:

ஆதாரமில்லாமல் குற்றச்சாட்டு கூறக்கூடாது. பலத்த பாதுகாப்பின் மத்தியில் நல்ல முறையில் தேர்தல் நடந்துள்ளது. இதற்காக தேர்தல் அலுவலர் பத்மநாபன், ஊடகவியலாளர்கள், காவல்துறையினர் என அனைவருக்கும் நன்றி. நாங்கள் நீதிமன்றத்தைக் கடவுளாக மதிக்கிறோம்.

நடிகர்கள் நாசர், விஷால் பேட்டி

சங்கத்திற்கு தேர்தலை நடத்தலாம் என்று இருக்கும்போது நேர்மையாக நடைபெற வேண்டும் என்பதற்காக நீதியரசர்களை நியமித்து தேர்தலை நடத்தி இருக்கிறோம். இந்தத் தேர்தல் எங்களுக்காக அல்ல, சங்கத்திற்காக. தேர்தல் முடிந்தால்தான் அதிகாரப்பூர்வமாக அடுத்த நிர்வாகம் பதவி ஏற்க முடியும். அப்போதுதான் அடுத்தக்கட்ட வேலைகள் நடக்கும். கட்டடம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும்” என்றார்.

இதையடுத்து பூச்சி முருகன் கூறுகையில், குளறுபடி என அவர்கள் கூறுவது இரண்டு நாட்களாக தேர்தல் நிறுத்த அவர்கள் செய்ததைத் தான் கூறுகிறார்கள் என்று தெரிவித்தார்.

நடிகர் சங்கத் தேர்தல் இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 05.30 மணிக்கு நிறைவுற்றது. இதில் திரை நட்சத்திரப் பிரபலங்கள், சின்னத்திரை பிரபலங்கள் என பலர் கலந்துகொண்டு வாக்களித்தனர். இந்நிலையில், பாண்டவர் அணியினர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது நடிகர் நாசர் கூறியதாவது:

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் மிகப்பெரிய ஜனநாயக கடமையான தேர்தல் மிக நல்லபடியாக முடிந்தது. பல தடைகள் இருந்தது, அதையெல்லாம் கடந்து இந்தத் தேர்தல் நடந்துள்ளது. இதில் பெரிய விஷயம் என்னவென்றால், ஏறக்குறைய 85 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளது. ஏறக்குறைய 900 தபால் வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்தத் தேர்தல் நடக்காமல் இருந்திருக்கலாம். ஆனால் எங்களுக்கு எதிராக போட்டியிட்டவர்கள் அந்த சூழலை உருவாக்கிவிட்டார்கள். உதவிய அனைத்து தரப்பினருக்கும் நன்றி.

குளறுபடிகள் எதுவும் நடைபெறவில்லை. நாங்கள் எல்லோரையும் எப்போதும் நண்பர்களாக மதிக்கிறோம். நடந்து முடிந்த தேர்தலே உங்களுக்கு ஆதரவாகத்தான் முடிந்துள்ளது எனவும், நீதிபதி பத்மநாபன் உங்களுக்கு ஆதரவாகத்தான் செயல்படுகிறார் என்ற செய்தியாளரின் கேள்விக்கு நடிகர் விஷால் பதிலளித்தாவது:

ஆதாரமில்லாமல் குற்றச்சாட்டு கூறக்கூடாது. பலத்த பாதுகாப்பின் மத்தியில் நல்ல முறையில் தேர்தல் நடந்துள்ளது. இதற்காக தேர்தல் அலுவலர் பத்மநாபன், ஊடகவியலாளர்கள், காவல்துறையினர் என அனைவருக்கும் நன்றி. நாங்கள் நீதிமன்றத்தைக் கடவுளாக மதிக்கிறோம்.

நடிகர்கள் நாசர், விஷால் பேட்டி

சங்கத்திற்கு தேர்தலை நடத்தலாம் என்று இருக்கும்போது நேர்மையாக நடைபெற வேண்டும் என்பதற்காக நீதியரசர்களை நியமித்து தேர்தலை நடத்தி இருக்கிறோம். இந்தத் தேர்தல் எங்களுக்காக அல்ல, சங்கத்திற்காக. தேர்தல் முடிந்தால்தான் அதிகாரப்பூர்வமாக அடுத்த நிர்வாகம் பதவி ஏற்க முடியும். அப்போதுதான் அடுத்தக்கட்ட வேலைகள் நடக்கும். கட்டடம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும்” என்றார்.

இதையடுத்து பூச்சி முருகன் கூறுகையில், குளறுபடி என அவர்கள் கூறுவது இரண்டு நாட்களாக தேர்தல் நிறுத்த அவர்கள் செய்ததைத் தான் கூறுகிறார்கள் என்று தெரிவித்தார்.

Intro:Body:

நாசர்



தென்னிந்திய நடிகர் சங்கத்தின் மிகப்பெரிய ஜனநாயக கடமை தேர்தல் நல்லபடியாக முடிந்தது பல தடைகளைக் கடந்து நல்ல முறையில் நடைபெற்றுள்ளது பல தடைகள் இருந்தது இதையெல்லாம் கடந்து இந்த தேர்தல் நடந்துள்ளது இவ்வளவு தடைகள் இருந்தும் சட்டரீதியாக இன்று தேர்தல் நடைபெறும் என அறிவித்து விட்டோம் பெரிய ஆச்சரியமும் உள்ளது ஏறக்குறைய 85 சதவீதம் பேர் வாக்கு பதிவு செய்துள்ளனர் இது பாராளுமன்ற தேர்தலிலும் இல்லை சட்டமன்ற தேர்தலிலும் இல்லை தபால் ஓட்டுகள் ஏறக்குறைய 900 வாக்குகள் பதிவாகியுள்ளன இந்த தேர்தல் நடக்கும் இருந்திருக்கலாம் ஆனால் எங்களுக்கு எதிராக போட்டியிட்டவர்கள்  உருவாக்கிவிட்டார்கள் உதவிய அனைத்து தரப்பினருக்கும் நன்றி இருசாரரும் ஒப்புக்கொண்ட வகையில் சவுத் இந்தியன் வங்கி நுங்கம்பாக்கம்   வாக்கு பெட்டிகள் வைக்கப்படுகிறது காவல்துறை உடன் செல்கிறார்கள்



குளறுபடிகள் நடைபெறவில்லை அனைவரும் என்னிடம் பேசி சிரித்துக் கொள்கிறார்கள். உறவுக்கு முன்பும் சரி இப்போதும் சரி அவர்களை கூறிய குற்றச்சாட்டுகள் ஆதாரம் இல்லாமல் உள்ளது ஆனால் நாங்கள் அவர்களை எப்போதும் நண்பர்களாக மதிக்கிறோம்.



விஷால்



ஆதாரமில்லாமல் குற்றச்சாட்டு கூறக்கூடாது பலத்த பாதுகாப்பின் மத்தியில் நல்ல முறையில் தேர்தல் நடந்துள்ளது இதற்காக தேர்தல் அதிகாரி பத்மநாபன் அவர்களுக்கு அனைத்து ஊடகவியலாளர் மற்றும் காவல்துறை அனைவருக்கும் நன்றி நாங்கள் கடவுளாக நீதியரசர் நீதிமன்றத்தில் மதிக்கிறோம்

இந்த இடத்திற்கு 10 லட்ச ரூபாய் கட்ட வேண்டிய சூழ்நிலை மேலும் சங்கத்திற்கு ஆகவே தேர்தலை நடத்தலாம் என்று இருக்கும்போது நேர்மை நடைபெற வேண்டும் என்பதற்காக நீதியரசர்களை நியமித்து தேர்தலை நடத்தி இருக்கிறோம். அவர்கள் தரப்பில் கூறிய குற்றச்சாட்டுகள் பொதுவாக எல்லா எதிரணியும் கூறுகிற குற்றச்சாட்டுகள். இந்த தேர்தல் எங்களுக்காக அல்ல சங்கத்திற்காக. தேர்தல் முடிந்தால்தான் அதிகாரப்பூர்வமாக அடுத்த நிர்வாகம் பதவி ஏற்க முடியும் அப்பொழுதுதான் அடுத்த கட்ட வேலைகள் நடக்கும். கட்டிடம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் இதுவரை கூடியவராக வைத்து அடுத்த கட்டப் பணிகளை செய்வோம். நான்தான் நிதி உதவி அளித்தல் என்று கூறினார்களே இப்பொழுது வாருங்கள் யாராக இருந்தாலும் கட்டிடத்திற்காக பண உதவி அளிக்கலாம்.



பூச்சி முருகன்



குளறுபடி என அவர்கள் கூறுவது இரண்டு நாட்களாக தேர்தல் நிறுத்த அவர்கள் செய்தது தான் கூறுகிறார்கள்.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.