ETV Bharat / state

ஓசூர் தொழிலதிபருக்கு ரூ.11 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு!

author img

By

Published : Jan 6, 2022, 9:17 AM IST

காவல்துறையினரால் சட்டவிரோதமாக சிறை வைக்கப்பட்டு துன்புறுத்தப்பட்ட ஒசூர் தொழிலதிபருக்கு 11 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ள மாநில மனித உரிமை ஆணையம், தாக்குதலில் ஈடுபட்ட காவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளது.

ஓசூர் தொழிலதிபருக்கு 11 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவு!
ஓசூர் தொழிலதிபருக்கு 11 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவு!

கிருஷ்ணகிரி: ஓசூரை சேர்ந்தவர் விதயரன்யா. கணினி உதிரிபாகங்கள் கடை நடத்தி வருகிறார். இவருக்கும் ஸ்வப்னா ரெட்டி என்ற பெண்ணுக்கும் இடையில் தொழில் ரீதியாக பணத்தகராறு இருந்துள்ளது. இது தொடர்பாக ஸ்வப்னா ரெட்டி கொடுத்த புகாரில் ஒசூர் ஹுட்கோ காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.

அவரிடத்தில் ஆய்வாளர் சரவணன், ஒசூர் சிட்கோ காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுரேஷ் ஆகியோர் பணத்தை லஞ்சமாக பெற்றுள்ளனர். பின்னர் தொழிலதிபர் விதயரன்யாவை கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இரண்டு நாள்கள் சட்டவிரோத காவலில் வைத்து சித்ரவதை செய்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இழப்பீடு காவலர்களிடம் வசூலிப்பு

இதனையடுத்து விதயரன்யா சட்டவிரோத சிறை சித்ரவதை குறித்து மாநில மனித உரிமை ஆணையத்தில் புகாரளித்தார். இச்சம்பத்துக்கு உதவி ஆய்வாளர் பார்த்திபன், காவலர்கள் மாதேஷ், தனபால் ஆகியோர் உடந்தையாக இருந்ததாகவும் அவர் தெரிவித்தார். புகாரை மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் சித்தரஞ்சன் மோகன் தாஸ் நேற்று (ஜன.5) விசாரித்தார்.

அப்போது காவல்துறையினர் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், மனித உரிமை மீறப்பட்டுள்ளதாகவும் கூறி பாதிக்கப்பட்ட விதயரன்யாவுக்கு 11 லட்சம் ரூபாய் இழப்பீடை எட்டு வாரத்திற்குள் வழங்க தமிழ்நாடு அரசுக்கு அவர் உத்தரவிட்டார்.

இழப்பீடு தொகையில் 4 லட்ச ரூபாயை காவல் ஆய்வாளர் சரவணனிடமும், 5 லட்ச ரூபாயை உதவி ஆய்வாளர் சுரேஷிடமும், 2 லட்சத்தை உதவி ஆய்வாளர் பார்த்திபனிடமும் வசூலித்துக்கொள்ளவும் அரசுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். அத்துமீறும் காவல்துறையினருக்கு பாடம் கற்பிக்கும் வகையில், ஆய்வாளர் சரவணன் உள்ளிட்ட 5 பேர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த 5 பேரையும் மேற்கொண்டு சட்டம் ஒழுங்கு பிரிவில் பணியமர்த்த கூடாதென தமிழ்நாடு காவல் துறை தலைவருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் காவல் ஆய்வாளர் சரவணன், உதவி ஆய்வாளர்கள் சுரேஷ், காவலர் பார்த்திபன் ஆகியோர் மீது குற்ற நடவடிக்கை எடுக்கவும் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

இதையும் படிங்க: பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை - சகோதரன் உட்பட இருவர் கைது

கிருஷ்ணகிரி: ஓசூரை சேர்ந்தவர் விதயரன்யா. கணினி உதிரிபாகங்கள் கடை நடத்தி வருகிறார். இவருக்கும் ஸ்வப்னா ரெட்டி என்ற பெண்ணுக்கும் இடையில் தொழில் ரீதியாக பணத்தகராறு இருந்துள்ளது. இது தொடர்பாக ஸ்வப்னா ரெட்டி கொடுத்த புகாரில் ஒசூர் ஹுட்கோ காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.

அவரிடத்தில் ஆய்வாளர் சரவணன், ஒசூர் சிட்கோ காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுரேஷ் ஆகியோர் பணத்தை லஞ்சமாக பெற்றுள்ளனர். பின்னர் தொழிலதிபர் விதயரன்யாவை கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இரண்டு நாள்கள் சட்டவிரோத காவலில் வைத்து சித்ரவதை செய்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இழப்பீடு காவலர்களிடம் வசூலிப்பு

இதனையடுத்து விதயரன்யா சட்டவிரோத சிறை சித்ரவதை குறித்து மாநில மனித உரிமை ஆணையத்தில் புகாரளித்தார். இச்சம்பத்துக்கு உதவி ஆய்வாளர் பார்த்திபன், காவலர்கள் மாதேஷ், தனபால் ஆகியோர் உடந்தையாக இருந்ததாகவும் அவர் தெரிவித்தார். புகாரை மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் சித்தரஞ்சன் மோகன் தாஸ் நேற்று (ஜன.5) விசாரித்தார்.

அப்போது காவல்துறையினர் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், மனித உரிமை மீறப்பட்டுள்ளதாகவும் கூறி பாதிக்கப்பட்ட விதயரன்யாவுக்கு 11 லட்சம் ரூபாய் இழப்பீடை எட்டு வாரத்திற்குள் வழங்க தமிழ்நாடு அரசுக்கு அவர் உத்தரவிட்டார்.

இழப்பீடு தொகையில் 4 லட்ச ரூபாயை காவல் ஆய்வாளர் சரவணனிடமும், 5 லட்ச ரூபாயை உதவி ஆய்வாளர் சுரேஷிடமும், 2 லட்சத்தை உதவி ஆய்வாளர் பார்த்திபனிடமும் வசூலித்துக்கொள்ளவும் அரசுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். அத்துமீறும் காவல்துறையினருக்கு பாடம் கற்பிக்கும் வகையில், ஆய்வாளர் சரவணன் உள்ளிட்ட 5 பேர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த 5 பேரையும் மேற்கொண்டு சட்டம் ஒழுங்கு பிரிவில் பணியமர்த்த கூடாதென தமிழ்நாடு காவல் துறை தலைவருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் காவல் ஆய்வாளர் சரவணன், உதவி ஆய்வாளர்கள் சுரேஷ், காவலர் பார்த்திபன் ஆகியோர் மீது குற்ற நடவடிக்கை எடுக்கவும் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

இதையும் படிங்க: பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை - சகோதரன் உட்பட இருவர் கைது

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.