ETV Bharat / state

துரைப்பாக்கத்தில் லாரி விபத்து - ஒருவர் உயிரிழப்பு

சென்னை துரைப்பாக்கத்தில், பல்லாவரம் ரேடியல் சாலையை சுத்தம் செய்துகொண்டிருந்த சென்னை மாநகராட்சி வாகனம் மீது, குப்பை லாரி மோதி விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

author img

By

Published : Jan 30, 2022, 7:42 PM IST

லாரி விபத்து
லாரி விபத்து

சென்னை: பள்ளிக்காரணை சதுப்புநிலத்தை ஒட்டியுள்ள துரைப்பாக்கம் சலையை, சென்னை மாநகராட்சி 14ஆவது மண்டலத்திற்குள்பட்ட வாகனம் சுத்தம் செய்துகொண்டிருந்தது.

அப்போது அதே சாலையில் சென்னை மாநகராட்சி மண்டலம் 13க்கு சொந்தமான குப்பை லாரியை பெசன்ட்நகரை சேர்ந்த ஓட்டுநர் விக்னேஷ்(30) ஓட்டி வந்துள்ளார். அதிகாலை சுமார் 3:30 மணியளவில் அதிவேகமாக வந்த குப்பை லாரி சாலையை சுத்தம் செய்துகொண்டிருந்த வாகனத்தின் பின்புறம் மோதி விபத்துக்குள்ளானது.

குப்பை லாரி மோதியலில் சுமார் 100 மீட்டர் தூரத்திற்கு சாலையை சுத்தம் செய்யும் லாரி இழுத்து செல்லப்பட்டதில் வாகனத்தில் இருந்த வேளச்சேரியை சேர்ந்த விக்னேஷ் (30), வெங்கடேஷ், மணிமாறன் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

விபத்துக்குள்ளாக்கிய குப்பை லாரி சதுப்புநிலத்தில் விழுந்தது. ஓட்டுநர் விக்னேஷ், உதவியாளர்கள் ஆறுமுகம், கார்த்திக் ஆகியோர் லாரியுடன் சதுப்பு நிலத்தில் விழுந்துள்ளனர்.

இது குறிதது தகவல் அறிந்த மண்டலம் 13, 14 அலுவலர்கள், ஊழியர்களும், துரைப்பாக்கம் தீயணைப்பு துறையினரும் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் சதுப்பு நிலத்தில் விழுந்த லாரியில் இருந்த மூவரை மீட்டனர். அதேபோல் சாலையை சுத்தம் செய்யும் லாரியில் இருந்த மூவரையும் மீட்டு சிகிச்சைக்காக குரோம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதில் விபத்துக்குள்ளாக்கிய குப்பை லாரி ஓட்டுநர் விக்னேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது. இது குறித்து தகவலறிந்த பள்ளிகாரணை ஆய்வாளர் குமார் சம்பவ இத்திற்கு சென்று விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டார். மேலும் இச்சம்பவம் குறித்து இருதரப்பிலும் புகார் பெற்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: லொடுக்கு பாண்டி பாணியில் வீட்டில் திருட்டு - சிசிடிவி மூலம் போலீஸ் விசாரணை

சென்னை: பள்ளிக்காரணை சதுப்புநிலத்தை ஒட்டியுள்ள துரைப்பாக்கம் சலையை, சென்னை மாநகராட்சி 14ஆவது மண்டலத்திற்குள்பட்ட வாகனம் சுத்தம் செய்துகொண்டிருந்தது.

அப்போது அதே சாலையில் சென்னை மாநகராட்சி மண்டலம் 13க்கு சொந்தமான குப்பை லாரியை பெசன்ட்நகரை சேர்ந்த ஓட்டுநர் விக்னேஷ்(30) ஓட்டி வந்துள்ளார். அதிகாலை சுமார் 3:30 மணியளவில் அதிவேகமாக வந்த குப்பை லாரி சாலையை சுத்தம் செய்துகொண்டிருந்த வாகனத்தின் பின்புறம் மோதி விபத்துக்குள்ளானது.

குப்பை லாரி மோதியலில் சுமார் 100 மீட்டர் தூரத்திற்கு சாலையை சுத்தம் செய்யும் லாரி இழுத்து செல்லப்பட்டதில் வாகனத்தில் இருந்த வேளச்சேரியை சேர்ந்த விக்னேஷ் (30), வெங்கடேஷ், மணிமாறன் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

விபத்துக்குள்ளாக்கிய குப்பை லாரி சதுப்புநிலத்தில் விழுந்தது. ஓட்டுநர் விக்னேஷ், உதவியாளர்கள் ஆறுமுகம், கார்த்திக் ஆகியோர் லாரியுடன் சதுப்பு நிலத்தில் விழுந்துள்ளனர்.

இது குறிதது தகவல் அறிந்த மண்டலம் 13, 14 அலுவலர்கள், ஊழியர்களும், துரைப்பாக்கம் தீயணைப்பு துறையினரும் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் சதுப்பு நிலத்தில் விழுந்த லாரியில் இருந்த மூவரை மீட்டனர். அதேபோல் சாலையை சுத்தம் செய்யும் லாரியில் இருந்த மூவரையும் மீட்டு சிகிச்சைக்காக குரோம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதில் விபத்துக்குள்ளாக்கிய குப்பை லாரி ஓட்டுநர் விக்னேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது. இது குறித்து தகவலறிந்த பள்ளிகாரணை ஆய்வாளர் குமார் சம்பவ இத்திற்கு சென்று விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டார். மேலும் இச்சம்பவம் குறித்து இருதரப்பிலும் புகார் பெற்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: லொடுக்கு பாண்டி பாணியில் வீட்டில் திருட்டு - சிசிடிவி மூலம் போலீஸ் விசாரணை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.