ETV Bharat / state

சென்னையில் வாகன சோதனையில் சிக்கிய ரூ.1 கோடி! ஹவாலா பணமா? இலங்கை தமிழர் உள்பட 4 பேர் கைது!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 6, 2023, 2:08 PM IST

சென்னை கேகே நகரில் காரில் கடத்தி செல்லப்பட்ட 1 கோடி ரூபாய் ஹவாலா பணத்தை பறிமுதல் செய்து இலங்கை தமிழர் உள்பட 4 பேரை கைது செய்ததாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.

சென்னையில் ரூ.1 கோடி ஹவாலா பணம் பறிமுதல்..இலங்கை தமிழர் உள்பட 4 பேர் கைது!
சென்னையில் ரூ.1 கோடி ஹவாலா பணம் பறிமுதல்..இலங்கை தமிழர் உள்பட 4 பேர் கைது!

சென்னை: கேகே நகரில் சட்ட விரோதமாக பண பரிமாற்றம் நடைபெறுவதாக தி.நகர் காவல் துணை ஆணையருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் தனிப்படை போலீஸார் நேற்று (நவ. 5) இரவு கே.கே நகர் ஆர்க்காடு சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியில் சந்தேகத்திற்கிடமாக வந்த காரை வழிமறித்து சோதனை செய்த போது காரில் கட்டுக்கட்டாக பணம் இருந்ததை கண்டுபிடித்துள்ளனர். காரில் வந்த நபர்களிடம் விசாரணை நடத்தியதில், அதில் கணக்கில் வராத ஒரு கோடி ரூபாய் இருப்பது தெரியவந்தது.

பின்னர் போலீஸார் பணத்தை பறிமுதல் செய்ததுடன் ஹவாலா பணமா என அமெரிக்காவில் வசித்து வரும் இலங்கையைச் சேர்ந்த கமலநாதன் (வயது 47), சென்னை மடிப்பாக்கத்தைச் சேர்ந்த வெங்கட கிருஷ்ணன்(வயது 33), மயிலாடுதுறையைச் சேர்ந்த கார்த்திகேயன் (வயது 45) கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த கார்த்திகேயன் (வயது 33) ஆகிய 4 பேரை பிடித்து தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில் பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லை என்பதும், கடத்தி கொண்டு வரப்பட்ட 1 கோடி ரூபாய் ஹவாலா பணம் என்பதும் தெரியவந்ததாக போலீசார் கூறி உள்ளனர். இதனையடுத்து பணத்தை கடத்தி வந்த 4 பேர் மற்றும் ஒரு கோடி ரூபாய் பணத்தையும் வருமானவரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்ததாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.

வருமான வரித்துறை புலனாய்வு பிரிவு கூடுதல் இயக்குநர் சுதர்சன் தலைமையிலான அதிகாரிகள் 4 பேரையும் வருமானவரித்துறை அலுவலகத்திற்கு கொண்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: தாய்லாந்திலிருந்து விமானத்தில் சென்னைக்கு அரிய வகை விலங்குகள் கடத்திய ஒருவர் கைது!

சென்னை: கேகே நகரில் சட்ட விரோதமாக பண பரிமாற்றம் நடைபெறுவதாக தி.நகர் காவல் துணை ஆணையருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் தனிப்படை போலீஸார் நேற்று (நவ. 5) இரவு கே.கே நகர் ஆர்க்காடு சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியில் சந்தேகத்திற்கிடமாக வந்த காரை வழிமறித்து சோதனை செய்த போது காரில் கட்டுக்கட்டாக பணம் இருந்ததை கண்டுபிடித்துள்ளனர். காரில் வந்த நபர்களிடம் விசாரணை நடத்தியதில், அதில் கணக்கில் வராத ஒரு கோடி ரூபாய் இருப்பது தெரியவந்தது.

பின்னர் போலீஸார் பணத்தை பறிமுதல் செய்ததுடன் ஹவாலா பணமா என அமெரிக்காவில் வசித்து வரும் இலங்கையைச் சேர்ந்த கமலநாதன் (வயது 47), சென்னை மடிப்பாக்கத்தைச் சேர்ந்த வெங்கட கிருஷ்ணன்(வயது 33), மயிலாடுதுறையைச் சேர்ந்த கார்த்திகேயன் (வயது 45) கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த கார்த்திகேயன் (வயது 33) ஆகிய 4 பேரை பிடித்து தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில் பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லை என்பதும், கடத்தி கொண்டு வரப்பட்ட 1 கோடி ரூபாய் ஹவாலா பணம் என்பதும் தெரியவந்ததாக போலீசார் கூறி உள்ளனர். இதனையடுத்து பணத்தை கடத்தி வந்த 4 பேர் மற்றும் ஒரு கோடி ரூபாய் பணத்தையும் வருமானவரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்ததாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.

வருமான வரித்துறை புலனாய்வு பிரிவு கூடுதல் இயக்குநர் சுதர்சன் தலைமையிலான அதிகாரிகள் 4 பேரையும் வருமானவரித்துறை அலுவலகத்திற்கு கொண்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: தாய்லாந்திலிருந்து விமானத்தில் சென்னைக்கு அரிய வகை விலங்குகள் கடத்திய ஒருவர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.