ETV Bharat / state

"எந்த ஒரு மனிதரையும் சாதியின் பெயரால் தள்ளி வைக்கக் கூடாது"- முதலமைச்சர் ஸ்டாலின்

author img

By

Published : Jul 7, 2023, 7:22 PM IST

''எந்த ஒரு மனிதரையும் சாதியின் பெயரால் தள்ளி வைக்கக் கூடாது எனவும்; அதற்காகத்தான் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தை நம்முடைய திமுக அரசு கொண்டு வந்திருக்கிறது'' என்று சென்னையில் இந்து சமய அறநிலையத்துறையின் திருக்கோயில்கள் சார்பில் நடந்த திருமண விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் ஸ்டாலின்
முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள, கபாலீஸ்வரர் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் இன்று (ஜூலை 07), இந்து சமய அறநிலையத் துறையின் திருக்கோயில்கள் சார்பில் 34 ஜோடிகளுக்கு நடத்தப்பட்ட திருமண விழாவில் தலைமையேற்று நடத்தி வைத்து, முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், "எந்த மனிதரையும் சாதியின் பெயரால் தள்ளி வைக்கக் கூடாது. அதற்காகத்தான் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தை நம்முடைய அரசு கொண்டு வந்திருக்கிறது. இன்றைக்கு ராஜஸ்தான் மாநிலத்தில் 8 பெண்கள் உட்பட, பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்த 17 பேரை அர்ச்சகராக்கி இருக்கிறார்கள்.

சென்னை உயர் நீதிமன்றமும் முறையாகப் பயிற்சி பெற்றவர்களாக இருந்தால் யார் வேண்டுமானாலும் அர்ச்சகர் ஆகலாம் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியிருக்கிறது. 'எல்லார்க்கும் எல்லாம்' என்ற கருத்தியல் என்பது இதுதான்.

நம்முடைய ஆட்சியின் நோக்கத்தை இன்றைக்கு நீதிமன்றமும் அங்கீகரிக்கக்கூடிய காலமாக ஏன், இந்தியாவில் இருக்கக்கூடிய மற்ற மாநிலங்களும் அதை ஏற்றுக்கொள்ளக்கூடிய நிலை அமைந்திருக்கிறது. அனைத்துத் துறைகளும் வளர வேண்டும் என்ற அடிப்படையில் நம்முடைய அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

இதை எல்லோரும் நன்றாக அறிவீர்கள். அதில் இந்து சமய அறநிலையைத் துறையும் மற்ற துறைகளோடு போட்டிப் போட்டுக்கொண்டு மிக, மிகச் சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை இன்றைக்கு நாடு நன்றாக உணர்ந்து கொண்டிருக்கிறது'' என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், ''கோயில்கள் மிகச் சிறப்பாகவும் சீராகவும் நடைபெற வேண்டும் என்பதற்காகத்தான் இந்து சமய அறநிலையத் துறையை உருவாக்கியதே நம்முடைய நீதிக்கட்சிதான் என்பதை நாம் யாரும் மறந்துவிடக் கூடாது.
'கோவில் கூடாது என்பதல்ல, அது கொடியவர்களின் கூடாரமாக ஆகிவிடக் கூடாது' என்று பராசக்தி திரைப்படத்தில் அன்றைக்கு தலைவர் கலைஞர் அவர்கள் வசனம் எழுதினார்.

அப்படி கோயில்களில் எந்த தவறுகளும் நடந்துவிடக் கூடாது என்பதில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, எந்த அளவுக்கு மிகுந்த எச்சரிக்கையுடனும் கவனத்துடனும் செயல்பட்டார் என்பதை உணர்ந்து இன்றைக்கு திராவிட மாடல் அரசு, அதே வழியில் பின்பற்றிக் கொண்டிருக்கிறது என்பதை நான் பெருமையோடு குறிப்பிட விரும்புகிறேன்" எனக் கூறினார்.

மேலும் பேசிய அவர், "நான் பெருமையோடு சில செய்திகளை, சாதனைகளைப் பட்டியலிட விரும்புகிறேன். நம்முடைய திமுக ஆட்சி மலர்ந்த பிறகு, திருக்கோயில்களுக்கு ஏராளமான திருப்பணிகள், வல்லுநர் குழுவின் ஆலோசனைப்படி செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத் துறையின்கீழ் 43 ஆயிரம் கோயில்கள் இருக்கின்றன.

பழமையான கோயில்களை, பழமை மாறாமல் சீர்செய்து குடமுழுக்கு விழாவை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அதே போல கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு நவீன வசதிகள் கொண்ட அடிப்படைப் பணிகள் செய்து தரப்பட்டுள்ளன. திருக்கோயில் பணிகளை மேற்கொள்ள மண்டல, மாநில அளவிலான வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்களது ஒப்புதல் பெற்ற பிறகுதான் செயல்கள் எல்லாம் செய்யப்படுகின்றது.

தற்போது வரை 3,986 திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்வதற்கு வல்லுநர் குழுவால் அனுமதி வழங்கப்பட்டுள்ளன. மேலும் 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான, வரலாற்றுச் சிறப்புமிக்க 112 திருக்கோயில்களைப் பழமை மாறாமல் சீர்செய்வதற்கு 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

திருக்கோயில்களுக்குச் சொந்தமான திருக்குளங்களைச் சீரமைக்கும் வகையில் கருத்துக்களை வழங்குவதற்கு சென்னை, கோவை, திருச்சி மற்றும் மதுரை ஆகிய இடங்களைத் தலைமையிடமாக கொண்டு 4 ஆலோசகர்களும், திருக்கோயில்களிலுள்ள பழமையான மூலிகை ஓவியங்களை பாதுகாக்கும் வகையிலான வழிமுறைகளை வழங்குவதற்குத் தனி ஆலோசகரும் நியமிக்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதியிலுள்ள 1,250 திருக்கோயில்கள் மற்றும் 1,250 கிராமப்புறத் திருக்கோயில்களின் திருப்பணிகளையும் சேர்த்து, இந்த நிதியாண்டில் மட்டும் 5,078 திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. அதனை நான் சில மாதங்களுக்கு முன்பு அறிவிப்பாக வெளியிட்டேன்.

கடந்த காலத்தில் 1000 கிராமப்புறத் திருக்கோயில்கள் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இல்லாத ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளிலுள்ள 1000 திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ள தலா 1 இலட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது.

நமது அரசு பொறுப்பேற்ற பின், திருக்கோயில்களின் எண்ணிக்கையை 1,250 ஆகவும் நிதியுதவியை 2 இலட்ச ரூபாயாகவும் உயர்த்தி அறிவிக்கப்பட்டது. இதற்காக 50 கோடி ரூபாய்க்கான காசோலைகள் வழங்கப்பட்டன. ஏழை இணையர்க்கு 50,000 ரூபாய் மதிப்புள்ள சீர்வரிசைகளோடு திருமணம் நடத்தி வைத்தல், 2 ஆண்டுகளில் 836 கோயில்களுக்கு திருகுடமுழுக்கு, 764 கோயில்களில் அன்னதானம், 8 கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம், 15 கோயில்களில் மருத்துவ மையம், 15,000 கோயில்களில் ஒருகால பூஜை திட்டம், திருத்தேர் மராமத்து மற்றும் புதிய திருத்தேர் உருவாக்குதல் என இன்னும் பல பணிகள் முழு வீச்சில் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் நாம் மேற்கொண்டு வருகிறோம். இவை அனைத்தும் ஒவ்வொரு ஆண்டும் கூடுதல் நிதியோடு அதிக இடங்களில் விரிவுபடுத்தப்பட்டு வருகின்றன.

இதன் மூலமாக கோயில்கள் சீரமைக்கின்றன. பக்தர்கள் மனநிறைவை அடைகிறார்கள். மகிழ்ச்சி அடைகிறார்கள். அதைத்தான் நம்முடைய அரசும் விரும்புகிறது. இதுதான் திராவிட மாடல் அரசினுடைய நோக்கம்! மறைந்த பெரியவர் - தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள் 'கோயிலைச் சுற்றிலும் மக்கள். மக்களைச் சுற்றிலும் கோவில்கள்' என்று சொல்வார்கள். மக்களுக்கு நன்மைகள் செய்யவே கோவில்கள் இருக்கின்றன.

'ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்' என்று சொல்வது இதன் அடிப்படையில்தான். அந்த வகையில்தான் 34 இணையருக்கு திருக்கோயில்கள் சார்பில் திருமண விழாக்கள் நடத்தி வைக்கப்படுகின்றன. இந்தத் துறைக்கு 'இந்து சமயத் துறை' என்று பெயரல்ல, 'இந்து சமய அறநிலையத் துறை' என்று பெயர்.

அதனால்தான் அறம் சார்ந்த தொண்டுகள் செய்யப்படுகின்றன. இதுபோன்ற அறப்பணிகளை தொடர்ந்து செய்யுங்கள் என்று நான் அனைவரையும் கேட்டுக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன். எனவே, மணக்கோலம் பூண்டிருக்கும் மணமக்களை உங்களோடு சேர்த்து, நானும் மனதார, நெஞ்சார வாழ்த்துகிறேன். அதேநேரத்தில் நம்முடைய மணமக்களை நான் அன்போடு கேட்டுக் கொள்ள விரும்புவது, உங்களுக்குப் பிறக்கிற குழந்தைகளுக்கு அழகான தமிழ்ப் பெயர்களைச் சூட்டுங்கள், தமிழ் உணர்வை அந்தக் குழந்தைகளுக்கு ஊட்டுங்கள்‌" என‌ தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்தார்.

இதையும் படிங்க: மன அழுத்தத்தால் தான் டிஐஜி தற்கொலை செய்துள்ளார் - ஏடிஜிபி அருண்

சென்னை: ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள, கபாலீஸ்வரர் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் இன்று (ஜூலை 07), இந்து சமய அறநிலையத் துறையின் திருக்கோயில்கள் சார்பில் 34 ஜோடிகளுக்கு நடத்தப்பட்ட திருமண விழாவில் தலைமையேற்று நடத்தி வைத்து, முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், "எந்த மனிதரையும் சாதியின் பெயரால் தள்ளி வைக்கக் கூடாது. அதற்காகத்தான் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தை நம்முடைய அரசு கொண்டு வந்திருக்கிறது. இன்றைக்கு ராஜஸ்தான் மாநிலத்தில் 8 பெண்கள் உட்பட, பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்த 17 பேரை அர்ச்சகராக்கி இருக்கிறார்கள்.

சென்னை உயர் நீதிமன்றமும் முறையாகப் பயிற்சி பெற்றவர்களாக இருந்தால் யார் வேண்டுமானாலும் அர்ச்சகர் ஆகலாம் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியிருக்கிறது. 'எல்லார்க்கும் எல்லாம்' என்ற கருத்தியல் என்பது இதுதான்.

நம்முடைய ஆட்சியின் நோக்கத்தை இன்றைக்கு நீதிமன்றமும் அங்கீகரிக்கக்கூடிய காலமாக ஏன், இந்தியாவில் இருக்கக்கூடிய மற்ற மாநிலங்களும் அதை ஏற்றுக்கொள்ளக்கூடிய நிலை அமைந்திருக்கிறது. அனைத்துத் துறைகளும் வளர வேண்டும் என்ற அடிப்படையில் நம்முடைய அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

இதை எல்லோரும் நன்றாக அறிவீர்கள். அதில் இந்து சமய அறநிலையைத் துறையும் மற்ற துறைகளோடு போட்டிப் போட்டுக்கொண்டு மிக, மிகச் சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை இன்றைக்கு நாடு நன்றாக உணர்ந்து கொண்டிருக்கிறது'' என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், ''கோயில்கள் மிகச் சிறப்பாகவும் சீராகவும் நடைபெற வேண்டும் என்பதற்காகத்தான் இந்து சமய அறநிலையத் துறையை உருவாக்கியதே நம்முடைய நீதிக்கட்சிதான் என்பதை நாம் யாரும் மறந்துவிடக் கூடாது.
'கோவில் கூடாது என்பதல்ல, அது கொடியவர்களின் கூடாரமாக ஆகிவிடக் கூடாது' என்று பராசக்தி திரைப்படத்தில் அன்றைக்கு தலைவர் கலைஞர் அவர்கள் வசனம் எழுதினார்.

அப்படி கோயில்களில் எந்த தவறுகளும் நடந்துவிடக் கூடாது என்பதில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, எந்த அளவுக்கு மிகுந்த எச்சரிக்கையுடனும் கவனத்துடனும் செயல்பட்டார் என்பதை உணர்ந்து இன்றைக்கு திராவிட மாடல் அரசு, அதே வழியில் பின்பற்றிக் கொண்டிருக்கிறது என்பதை நான் பெருமையோடு குறிப்பிட விரும்புகிறேன்" எனக் கூறினார்.

மேலும் பேசிய அவர், "நான் பெருமையோடு சில செய்திகளை, சாதனைகளைப் பட்டியலிட விரும்புகிறேன். நம்முடைய திமுக ஆட்சி மலர்ந்த பிறகு, திருக்கோயில்களுக்கு ஏராளமான திருப்பணிகள், வல்லுநர் குழுவின் ஆலோசனைப்படி செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத் துறையின்கீழ் 43 ஆயிரம் கோயில்கள் இருக்கின்றன.

பழமையான கோயில்களை, பழமை மாறாமல் சீர்செய்து குடமுழுக்கு விழாவை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அதே போல கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு நவீன வசதிகள் கொண்ட அடிப்படைப் பணிகள் செய்து தரப்பட்டுள்ளன. திருக்கோயில் பணிகளை மேற்கொள்ள மண்டல, மாநில அளவிலான வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்களது ஒப்புதல் பெற்ற பிறகுதான் செயல்கள் எல்லாம் செய்யப்படுகின்றது.

தற்போது வரை 3,986 திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்வதற்கு வல்லுநர் குழுவால் அனுமதி வழங்கப்பட்டுள்ளன. மேலும் 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான, வரலாற்றுச் சிறப்புமிக்க 112 திருக்கோயில்களைப் பழமை மாறாமல் சீர்செய்வதற்கு 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

திருக்கோயில்களுக்குச் சொந்தமான திருக்குளங்களைச் சீரமைக்கும் வகையில் கருத்துக்களை வழங்குவதற்கு சென்னை, கோவை, திருச்சி மற்றும் மதுரை ஆகிய இடங்களைத் தலைமையிடமாக கொண்டு 4 ஆலோசகர்களும், திருக்கோயில்களிலுள்ள பழமையான மூலிகை ஓவியங்களை பாதுகாக்கும் வகையிலான வழிமுறைகளை வழங்குவதற்குத் தனி ஆலோசகரும் நியமிக்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதியிலுள்ள 1,250 திருக்கோயில்கள் மற்றும் 1,250 கிராமப்புறத் திருக்கோயில்களின் திருப்பணிகளையும் சேர்த்து, இந்த நிதியாண்டில் மட்டும் 5,078 திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. அதனை நான் சில மாதங்களுக்கு முன்பு அறிவிப்பாக வெளியிட்டேன்.

கடந்த காலத்தில் 1000 கிராமப்புறத் திருக்கோயில்கள் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இல்லாத ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளிலுள்ள 1000 திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ள தலா 1 இலட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது.

நமது அரசு பொறுப்பேற்ற பின், திருக்கோயில்களின் எண்ணிக்கையை 1,250 ஆகவும் நிதியுதவியை 2 இலட்ச ரூபாயாகவும் உயர்த்தி அறிவிக்கப்பட்டது. இதற்காக 50 கோடி ரூபாய்க்கான காசோலைகள் வழங்கப்பட்டன. ஏழை இணையர்க்கு 50,000 ரூபாய் மதிப்புள்ள சீர்வரிசைகளோடு திருமணம் நடத்தி வைத்தல், 2 ஆண்டுகளில் 836 கோயில்களுக்கு திருகுடமுழுக்கு, 764 கோயில்களில் அன்னதானம், 8 கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம், 15 கோயில்களில் மருத்துவ மையம், 15,000 கோயில்களில் ஒருகால பூஜை திட்டம், திருத்தேர் மராமத்து மற்றும் புதிய திருத்தேர் உருவாக்குதல் என இன்னும் பல பணிகள் முழு வீச்சில் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் நாம் மேற்கொண்டு வருகிறோம். இவை அனைத்தும் ஒவ்வொரு ஆண்டும் கூடுதல் நிதியோடு அதிக இடங்களில் விரிவுபடுத்தப்பட்டு வருகின்றன.

இதன் மூலமாக கோயில்கள் சீரமைக்கின்றன. பக்தர்கள் மனநிறைவை அடைகிறார்கள். மகிழ்ச்சி அடைகிறார்கள். அதைத்தான் நம்முடைய அரசும் விரும்புகிறது. இதுதான் திராவிட மாடல் அரசினுடைய நோக்கம்! மறைந்த பெரியவர் - தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள் 'கோயிலைச் சுற்றிலும் மக்கள். மக்களைச் சுற்றிலும் கோவில்கள்' என்று சொல்வார்கள். மக்களுக்கு நன்மைகள் செய்யவே கோவில்கள் இருக்கின்றன.

'ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்' என்று சொல்வது இதன் அடிப்படையில்தான். அந்த வகையில்தான் 34 இணையருக்கு திருக்கோயில்கள் சார்பில் திருமண விழாக்கள் நடத்தி வைக்கப்படுகின்றன. இந்தத் துறைக்கு 'இந்து சமயத் துறை' என்று பெயரல்ல, 'இந்து சமய அறநிலையத் துறை' என்று பெயர்.

அதனால்தான் அறம் சார்ந்த தொண்டுகள் செய்யப்படுகின்றன. இதுபோன்ற அறப்பணிகளை தொடர்ந்து செய்யுங்கள் என்று நான் அனைவரையும் கேட்டுக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன். எனவே, மணக்கோலம் பூண்டிருக்கும் மணமக்களை உங்களோடு சேர்த்து, நானும் மனதார, நெஞ்சார வாழ்த்துகிறேன். அதேநேரத்தில் நம்முடைய மணமக்களை நான் அன்போடு கேட்டுக் கொள்ள விரும்புவது, உங்களுக்குப் பிறக்கிற குழந்தைகளுக்கு அழகான தமிழ்ப் பெயர்களைச் சூட்டுங்கள், தமிழ் உணர்வை அந்தக் குழந்தைகளுக்கு ஊட்டுங்கள்‌" என‌ தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்தார்.

இதையும் படிங்க: மன அழுத்தத்தால் தான் டிஐஜி தற்கொலை செய்துள்ளார் - ஏடிஜிபி அருண்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.