ETV Bharat / state

நிவர் புயல்: ரிப்பன் மாளிகையில் 24 X7 இயங்கும் கட்டுப்பாட்டு அறை - எஸ்.பி.வேலுமணி

author img

By

Published : Nov 24, 2020, 9:41 PM IST

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சி , நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி , பேரூராட்சிகள் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அலுவலர்கள் நிவர் புயலை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டுமென அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உத்தரவிட்டுள்ளார்.

minister sp velumani
minister sp velumani

நிவர் புயலை எதிர்கொள்ள நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித் துறை சார்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில் இன்று (நவ.24) தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் எஸ்.பி.வேலுமணி கூறியதாவது, "சென்னை ரிப்பன் மாளிகையில் 24X7 இயங்கும் கட்டுப்பாட்டு அறை உள்ளது. இந்தக் கட்டுப்பாட்டு அறை 75 பணியாளர்களுடன் பொதுப்பணித்துறை போக்குவரத்து காவல் துறை, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றல் வாரியம் மற்றும் பிற துறைகளின் அலுவலர்களுடன் இயங்கி வருகிறது.

இந்தக் கட்டுப்பாட்டு அறையின் 044-25384530, 044-25384540 என்ற தொலைபேசி எண்களும், 1913 புகார் மையத்தின் எண்ணும் பொதுமக்களுக்கு உதவும் வகையில் செயல்பட்டு வருகிறது. மழைக்காலங்களில் தாழ்வான பகுதிகளில் வாழும் மக்களை மழை வெள்ளத்தில் இருந்து பாதுகாக்கும் பொருட்டு 109 இடங்களில் படகுகள், 176 நிவாரண மையங்கள், 44 நிலையான மற்றும் நடமாடும் மருத்துவக் குழுக்கள் ஆகியவை தயார் நிலையில் உள்ளன.

நான்கு பொது சமையல் அறைகளில் ஆயிரத்து 500 பேருக்கு சமையல் செய்யும் அளவிற்கு தேவையான பொருள்கள், மக்களுக்கு உணவு வழங்க அனைத்து அம்மா உணவகங்களும் தயார் நிலையில் உள்ளன. நிவர் புயல் காரணமாக தற்சமயம் மண்டலத்திற்கு 5 நிவாரண மையங்கள் என 15 மண்டலங்களுக்கும் சேர்த்து 77 நிவாரண மையங்கள் மற்றும் 2 பொதுத் சமையலறைகளில் பொதுமக்களை தங்க வைக்கவும், உணவு வழங்கவும் தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய தலைமை அலுவலகத்தில் 24 மணி நேர சிறப்பு குறைதீர்க்கும் தொலைபேசி 04445 - 674567 எண்ணில் செயல்பட்டு வருகிறது. சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில் ஜெட்ராடிங், சூப்பர் சக்கர், தூர் வாரும் இயந்திரங்கள் என மொத்தம் 446 இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. மாநிலத்தில் உள்ள 12 ஆயிரத்து 525 ஊராட்சிகளில் 847 ஊராட்சிகள் மழை வெள்ளத்தால் பாதிக்க வாய்ப்புள்ளதாக கண்டறியப்பட்டு அப்பகுதிகளில் போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

மாநிலத்தின் அனைத்து ஊரகப் பகுதிகளிலும் இயற்கை இடர்பாட்டின் போது பொதுமக்களை தங்க வைக்க 16 ஆயிரத்து 331 கட்டடங்கள் தயார் நிலையில் உள்ளன. நகராட்சி நிர்வாக ஆணையரகத்தின் சார்பில் அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டால் மக்களை தங்க வைக்க 725 நிவாரண முகாம்கள் கண்டறியப்பட்டு தயார் நிலையில் உள்ளன. மின் தடைகளை சமாளிக்க குடிநீர் வாரியத்தின் சார்பில் 365 ஜெனரேட்டர்களும், ஆயிரத்து 189 தனி மின் இணைப்புகளும் ஏற்படுத்தப்பட்டு செயலாக்கத்தில் உள்ளன.

பேரூராட்சிகள் நிர்வாகத்தின் சார்பில் 528 பேரூராட்சிகளில் 498 சமுதாயக் கூடங்கள், 662 கல்யாண மண்டபங்கள், ஆயிரத்து 439 கல்விக் கூடங்களில் நிவாரண மையங்கள் தயார் நிலையில் உள்ளன. தாழ்வான பகுதிகளில் தேங்கும் நீரினை வெளியேற்றுவதற்கு 698 மின் மோட்டார்கள், 484 ஜெனரேட்டர்கள் , 724 மரம் அறுக்கும் இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. அனைத்து மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் அலுவலகம் மற்றும் அனைத்து பேரூராட்சிகளிலும் கட்டுப்பாட்டு அறை அமைத்திட வேண்டும்" என உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் நாளை அரசு விடுமுறை - அரசாணை வெளியீடு!

நிவர் புயலை எதிர்கொள்ள நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித் துறை சார்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில் இன்று (நவ.24) தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் எஸ்.பி.வேலுமணி கூறியதாவது, "சென்னை ரிப்பன் மாளிகையில் 24X7 இயங்கும் கட்டுப்பாட்டு அறை உள்ளது. இந்தக் கட்டுப்பாட்டு அறை 75 பணியாளர்களுடன் பொதுப்பணித்துறை போக்குவரத்து காவல் துறை, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றல் வாரியம் மற்றும் பிற துறைகளின் அலுவலர்களுடன் இயங்கி வருகிறது.

இந்தக் கட்டுப்பாட்டு அறையின் 044-25384530, 044-25384540 என்ற தொலைபேசி எண்களும், 1913 புகார் மையத்தின் எண்ணும் பொதுமக்களுக்கு உதவும் வகையில் செயல்பட்டு வருகிறது. மழைக்காலங்களில் தாழ்வான பகுதிகளில் வாழும் மக்களை மழை வெள்ளத்தில் இருந்து பாதுகாக்கும் பொருட்டு 109 இடங்களில் படகுகள், 176 நிவாரண மையங்கள், 44 நிலையான மற்றும் நடமாடும் மருத்துவக் குழுக்கள் ஆகியவை தயார் நிலையில் உள்ளன.

நான்கு பொது சமையல் அறைகளில் ஆயிரத்து 500 பேருக்கு சமையல் செய்யும் அளவிற்கு தேவையான பொருள்கள், மக்களுக்கு உணவு வழங்க அனைத்து அம்மா உணவகங்களும் தயார் நிலையில் உள்ளன. நிவர் புயல் காரணமாக தற்சமயம் மண்டலத்திற்கு 5 நிவாரண மையங்கள் என 15 மண்டலங்களுக்கும் சேர்த்து 77 நிவாரண மையங்கள் மற்றும் 2 பொதுத் சமையலறைகளில் பொதுமக்களை தங்க வைக்கவும், உணவு வழங்கவும் தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய தலைமை அலுவலகத்தில் 24 மணி நேர சிறப்பு குறைதீர்க்கும் தொலைபேசி 04445 - 674567 எண்ணில் செயல்பட்டு வருகிறது. சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில் ஜெட்ராடிங், சூப்பர் சக்கர், தூர் வாரும் இயந்திரங்கள் என மொத்தம் 446 இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. மாநிலத்தில் உள்ள 12 ஆயிரத்து 525 ஊராட்சிகளில் 847 ஊராட்சிகள் மழை வெள்ளத்தால் பாதிக்க வாய்ப்புள்ளதாக கண்டறியப்பட்டு அப்பகுதிகளில் போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

மாநிலத்தின் அனைத்து ஊரகப் பகுதிகளிலும் இயற்கை இடர்பாட்டின் போது பொதுமக்களை தங்க வைக்க 16 ஆயிரத்து 331 கட்டடங்கள் தயார் நிலையில் உள்ளன. நகராட்சி நிர்வாக ஆணையரகத்தின் சார்பில் அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டால் மக்களை தங்க வைக்க 725 நிவாரண முகாம்கள் கண்டறியப்பட்டு தயார் நிலையில் உள்ளன. மின் தடைகளை சமாளிக்க குடிநீர் வாரியத்தின் சார்பில் 365 ஜெனரேட்டர்களும், ஆயிரத்து 189 தனி மின் இணைப்புகளும் ஏற்படுத்தப்பட்டு செயலாக்கத்தில் உள்ளன.

பேரூராட்சிகள் நிர்வாகத்தின் சார்பில் 528 பேரூராட்சிகளில் 498 சமுதாயக் கூடங்கள், 662 கல்யாண மண்டபங்கள், ஆயிரத்து 439 கல்விக் கூடங்களில் நிவாரண மையங்கள் தயார் நிலையில் உள்ளன. தாழ்வான பகுதிகளில் தேங்கும் நீரினை வெளியேற்றுவதற்கு 698 மின் மோட்டார்கள், 484 ஜெனரேட்டர்கள் , 724 மரம் அறுக்கும் இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. அனைத்து மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் அலுவலகம் மற்றும் அனைத்து பேரூராட்சிகளிலும் கட்டுப்பாட்டு அறை அமைத்திட வேண்டும்" என உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் நாளை அரசு விடுமுறை - அரசாணை வெளியீடு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.